சனி, 12 நவம்பர், 2022

ஒரு தேயிலைக் காட்டின் கதை...

மவெளி பகுதிகளில் இருந்து செல்பவர்களுக்கு மலையும், மலைசார்ந்த பகுதிகளும் மண்ணில் கிடைத்த சொர்க்கம். சிலுசிலுவென சிறு ஓடை பக்கத்தில் ஓடிக் கொண்டிருக்க... பச்சைக் கம்பளம் போர்த்திப் படுத்திருக்கும் மலைத் தொடர்களை சும்மா உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பதும் சுகம்!

(முழுமையான வாசிப்பனுபவத்திற்கு, அகன்ற கணினித்திரையில் படிக்கவும்!)

வெள்ளி, 22 ஏப்ரல், 2022

ராஜா & பா.ஜ : ஏன் சர்ச்சை?

ர்ச்சையில் சிக்காத ராஜாக்கள் சரித்திரத்தில் கிடையாது. இசை ராஜாவும் விதிவிலக்கல்ல. அவரையும் அடிக்கடி சர்ச்சைகள் மையம் கொள்வது உண்டு. இப்போதும் ஒரு சர்ச்சை சுழன்றடிக்கிறது. பேசுவதற்கு, பிரதான பிரச்னையாகவும் அது இன்று மாறியிருக்கிறது. முற்போக்காளர்கள், முற்போக்காளரல்லாதவர்கள் என கருதப்படும் இரு தரப்பினரும் இறங்கி நின்று, வலைத்தளங்களை போர்க்களங்களாக்குகிறார்கள். சரியா, தப்பா சண்டைகளால், சமூக வலைத்தளங்களுக்கு ஆகும் டேட்டா செலவு கடந்த சில நாட்களில் கணிசமாக அதிகரித்து, தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு பெருமகிழ்வை தந்திருக்கிறது. இருக்கட்டும். பிரதமர் மோடியின் செயல்கள் கண்டு உண்மையிலேயே அம்பேத்கர் பெருமைப்பட்டிருப்பாரா?

சனி, 12 மார்ச், 2022

நோக்கியாவும்... காங்கிரசும்!

 


செல்போன்கள் மக்களின் கைகளில் சரளமாக புழங்கத் துவங்கிய காலம். சந்தையை முழுமையாக கைக்குள் வைத்திருந்தது நோக்கியா. செல்போன் பேசுகிறவர்களில் 80 சதவீதம் பேர் நோக்கியாவில்  தான் பேசினார்கள். போனால் போகிறதென்று நோக்கியா விட்டு வைத்திருந்த பாக்கி 20 சதவீத வெற்றிடத்தை சாம்சங், பிலிப்ஸ் உள்ளிட்ட பிற கம்பெனிகள், சீன போன்கள் பகிர்ந்து கொண்டன. செல்போன் என்றாலே நோக்கியா என மக்களின் நம்பிக்கையை பெற்றிருந்த அந்த பிராண்ட்.... இன்றைக்கு இல்லை. செல்போன் மார்க்கெட்டில் அதற்கு இன்று இடமே இல்லை. காணாமல் போய் விட்டது. அசைக்க முடியாத சக்தியாக நோக்கியா வலம் வந்த தருணங்களில் குட்டி நிறுவனமாக களத்தில் இருந்த சாம்சங், இன்றைக்கு நோக்கியாவின் இடத்தை கைப்பற்றியிருக்கிறது. எப்படி நடந்தது இந்த மாற்றம்...? கணிக்க முடியாத தலைகீழ் மாற்றம்??

ஞாயிறு, 9 ஜனவரி, 2022

T 20! - முடிவு

 
‘‘இ
வ்ளோ பேசறியே... உன்னோட குடும்பத்தில ஒருத்தரை அந்த புலி தாக்கியிருந்தா இப்படி பேசுவியா? அவ்வளவு ஏன்? இப்ப உன் முன்னால அந்தப் புலி வந்தா... என்ன பண்ணுவ? போய் கொஞ்சுவியா?’’

என்னை ஆழமாகப் பார்த்தபடி, கைகளை நீட்டி எழுப்பினாள். சிறிதுநேரம் எதுவும் பேசாமல் நடந்தாள். நானும் அமைதியாக அவளைப் பின்தொடர்ந்தேன். சில நிமிட மவுனம் கலைத்து, ‘‘எனக்கு முன்னால அந்தப் புலி வந்தா என்ன பண்ணுவேன்னு காட்டட்டுமா சார்?’’ என்னிடம் திரும்பி கேட்டாள்.

நான் பதில் சொல்லாமல் அவளைப் பார்த்தேன்.

(குங்குமம் வார இதழின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பிதழ்களில் பிரசுரமான இரு வார சிறுகதையின் நிறைவுப்பகுதி)

தொடரின் முதல் பாகம் படிக்க - T 20!


சனி, 1 ஜனவரி, 2022

T 20!

தேவமைந்தன் பிறந்ததினத்தை உலகம் மகிழ்ந்து கொண்டாடிக் கொண்டிருந்த அந்த இரவுப்பொழுதில், குளிர் அப்பியிருந்த பிரிட்டீஷ் காலத்து கல் கட்டிடத்துக்குள் நாங்கள் அமர்ந்திருந்தோம். சப்பாத்தியும், பொறித்த கோழியும், குழம்பும் எங்கள் தட்டுகளில் இருந்தன. கட்டிடத்துக்கு வெளியே, உறைபனி அடர்ந்து மூடியிருந்த மலைமுகடுகளின் முதுகுகளில் வண்ண, வண்ணமாய் நட்சத்திரங்கள், மஞ்சு மூட்டத்துக்குள் அமிழ்ந்து மங்கலாய் மின்னிக் கொண்டிருந்தன. ஏதோ ஒரு மலைச்சிகரத்து தேவாலயத்தில் இருந்து மணியோசையும், ஆராதனையும் சன்னமாய் கேட்டது. ‘‘ஓ.கே கேடர்ஸ். கோவைல இருந்து சீஃப் கன்சர்வேட்டர் ஆஃப் ஃபாரெஸ்ட் அடுத்த வாரம் வர்றார். அதுக்குள்ள நாம மிஷனை முடிக்கணும். இல்லைனா, நம்ம டீம் ஊருக்கு கிளம்பவேண்டியதுதான். காலையில 7 மணிக்கு கிளம்பணும். சீக்கிரம் தூங்குங்க...’’ சொல்லி விட்டு டி.எப்.ஓ. உள்ளறைக்குள் செல்ல... எழுந்து கைகளைக் கழுவி, வாயைத் துடைத்த படியே, பக்கத்தில் பனித்திரை படர்ந்திருந்த கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். கீழ் சரிவில் இருந்த போஸ்ட் ஆபீஸ் கட்டிடத்தில் மஞ்சளாய் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. வால்பாறை, சின்னகல்லார் எஸ்டேட் வன இலாகா  தற்காலிக முகாம் கட்டிடத்துக்கு வந்து இன்றோடு இரண்டு வாரங்கள் முடிந்து விட்டன. இன்னமும் எங்கள் கண்களில் சிக்கவில்லை... டி 20.

(குங்குமம் கிறிஸ்துமஸ் சிறப்பிதழில் (31-12-2021) பிரசுரமான சிறுகதை)

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...