புதன், 11 ஏப்ரல், 2018

ஐபிஎல் புறக்கணிப்பால் காவிரி பிரச்னை தீருமா?

‘‘ஐபிஎல் போட்டிகளை புறக்கணித்தால்...? காவிரியில் தண்ணீர் வந்து விடுமா? என்னடா இது காட்டுமிராண்டித்தனமான போராட்டம்?’’ என்று அறிவுத்திறன் அதிகம் வாய்க்கப் பெற்றவர்கள் முகநூல்களில் கேள்வி எழுப்புகிறார்கள். படித்தவர்கள் எழுப்புகிற கேள்வி இல்லையா...? கேட்பதற்கு நியாயம் போலவே இருக்கிறது. ‘‘தமிழர்கள் கிரிக்கெட் பார்க்காமல் இருந்தால் கர்நாடகாவுக்கோ, மத்திய அரசுக்கோ என்ன நஷ்டம்? நமது மகிழ்ச்சிதானே கெடுகிறது... இதெல்லாம் ஒரு போராட்டமா?’’ என்று கேவலமான எண்ணம் உள்ளுக்குள் தோன்றலாம். தோன்றினால்... உலக வரலாறு தெரியவில்லை என்றுதான் அர்த்தம். வரலாற்றின் பக்கங்களில் பதிவாகியுள்ள பல புரட்சிப் போராட்டங்களும், அவற்றின் விளைவாக, புறக்கணிக்கப்பட்ட மக்கள் பெற்ற உரிமைகளும் தெரியவில்லை என்றுதான் அர்த்தம். வரலாறு தெரியாத ஜடமாக ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றேதான் அர்த்தம்!

திங்கள், 9 ஏப்ரல், 2018

வழியனுப்புகிறோம் தோழர் அர்ஷியா!

துரையின் நிகழ்கால அடையாளங்களுள் ஒருவராகத் திகழ்ந்த எழுத்தாளர் அர்ஷியாவின் திடீர் மரணம், நான்மாடக்கூடல் வீதிகளை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 58 என்பது, அப்படியொன்றும் விடைபெற்றுச் செல்வதற்கான வயதல்ல. தவிர, அவரது செயல்பாடுகள், ஒரு நாளும் அவரது வயதைச் சார்ந்ததாக இருந்ததில்லை. கல்லூரி மாணவருக்குரிய ஆற்றலுடன் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு இரங்கல் சொல்வதற்கான காலம் இத்தனை துரிதத்தில் வந்து சேரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...