செவ்வாய், 31 மே, 2016

ரத்தம் குடிக்கும் குட்டி டிராகுலா!

 ‘‘நேத்தைக்கு ஆரம்பிச்ச மாதிரி இருந்திச்சு. பாருங்க... விறுவிறுன்னு 75 வாரம் வந்து, நம்மொழி செம்மொழி தொடர், பவள விழாவே கொண்டாடிடுச்சே சார்...’’ என்று பாம்பனில் இருந்து முகைதீன் தொடர்பில் வந்து ஆச்சர்யப்பட்டார். அத்தோடு விட்டாரா என்றால், இல்லை. ‘‘பவள விழானு சொல்லும் போது ஞாபகம் வருது. அது, பவளமா; பவழமா? எப்டி எழுதுனா சரி சார்?’’ - இந்த வாரத்துக்கான கொக்கியை வீசி விட்டு தொடர்பைத் துண்டித்தார்.

புதன், 25 மே, 2016

மச்சி.... (டோண்ட்) ஓபன் தி பாட்டில்!

துரையை Temple city - கோயில்களின் நகரம் - என்கிறோம். ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று கணக்கெடுத்துப் பார்த்ததில், கோயில்களின் எண்ணிக்கையை விட சரி பாதிக்கும் மேலாக மதுரையில் டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையே நிரம்ப இருக்கிறது. மக்கள் வந்து போவதும் கோயில்களை விட இவ்விடத்திலேயே அதிகம். எனில், மதுரையை டெம்பிள் சிட்டி என்பது சரியா; இல்லை டாஸ்மாக் சிட்டி என அழைப்பது சரியா? மதுரையை விடுங்கள்... ஒட்டுமொத்தமாக தமிழகமும் டாஸ்மாக் தேசமாக... குடிகாரர்களின் தேசமாக அல்லவா இன்றைக்கு இருக்கிறது?

திங்கள், 23 மே, 2016

முதலைக் கண்ணீர் வடித்தால் தப்பா?

‘‘மச்சான்... உனக்கு ஒரு ஆபத்துனு கேள்விப்பட்டதும், மனசு துடிச்சுப் போயிருச்சுடா. விஷயம் கேட்டதும், வேலைய அப்டியே போட்டுட்டு ஓடி வந்திட்டேன். எப்டிரா ஆச்சு. சொல்றா... சும்மா விடக்கூடாது, தூக்கிடலாம்...!’’ என்று துக்கம் விசாரிக்க வந்த ‘திடீர்’ நண்பர் (!?) துடிக்கிறாரா? உஷார். அவரது ‘துடிப்பு’ முதலைக் கண்ணீராகவும் இருக்கலாம்.

செவ்வாய், 17 மே, 2016

பாதையில் பணி கிடந்தா... போகாதீங்க!

‘‘அந்தப் பக்கம் பணி ரொம்ப இருக்கும். கொஞ்சம் ஜாக்கிரதையா போங்க ப்ரதர்...’’ என்று யாராவது அக்கறையாகச் சொன்னால், ‘‘நோ ப்ராப்ளம். பணி செய்து கிடப்பதே என் கடன்...’’ என்றெல்லாம் இனி ஃபிலிம் காட்டவேண்டாம். அந்த ஏரியாவில் பாம்புத் தொல்லை அதிகம் என்று அவர் உங்களுக்கு வார்னிங் கொடுக்கிறாராக்கும்! பணி என்றால், தமிழில் பாம்பு என்கிற ஒரு அர்த்தமும் இருக்கிற விஷயம் உங்களுக்கு தெரிந்திருந்தால், இந்தப் பிரச்னை வந்திருக்காது!

சனி, 14 மே, 2016

விஜய், அஜித், தனுஷ் - யார் அடுத்த முதல்வர்?


னிமையான தருணங்களில், அந்தந்த சீசனில் ஹிட்டடிக்கிற சினிமாப் பாடல்கள், நம்மையும் அறியாமல் மனதுக்குள் ஹம்மிங்காக வந்து போகும். உங்களையும் அறியாமல் இப்போது நீங்கள் முணுமுணுக்கிற பாடல் எது..? ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே...’, ‘அம்மா... எங்கள் அம்மா... இதயதெய்வம் அம்மா...’ - இதுமாதிரிப் பாடல்கள்தானே? விடிந்ததில் இருந்து, அடைகிற வரை அதைத்தானே கேட்டுக் கொண்டிருக்கிறோம்? இது தேர்தல் சீசன்!

புதன், 11 மே, 2016

ஒத்தி, முசலி, வெளில், சசம்!


‘‘அட! நேத்து வரைக்கும் நல்லவன் மாதிரி பழகினான். இன்னைக்கு கழுத்தறுத்துட்டானே... இந்தப் பொழப்பு, பச்சோந்தியை விடவும் கேவலம்டா...!!’’ - உங்கள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு தருணத்தில் அல்லது பல தருணங்களில் சக நண்பர்களைப் பற்றி இப்படிப் பேசி சலித்துக் கொண்டிருப்பீர்கள். இல்லையா? மனிதர்களின் மட்டமான குணங்களுக்கு, விலங்குகளை உதாரணம் காட்டிப் பேசுவது மகா தப்பு என்று இந்தத் தொடரில் தொடர்ந்து பேசி வருகிறோம். நிஜத்தில், பச்சோந்திகள் யாரையும் காக்கா பிடிப்பதற்கோ, காரியம் சாதித்துக் கொள்வதற்காகவோ, காலை வாருவதற்காகவோ உடலின் நிறத்தை மாற்றிக் கொள்வதில்லை. காக்கை, கழுகுகளிடம் இருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக உடலின் நிறத்தை அடிக்கடி மாற்றிக் கொள்கிறதே தவிர... நம்மைப் போல தில்லாலங்கடி எண்ணங்கள் அவற்றிடம் சத்தியமாகவே இல்லை.

திங்கள், 2 மே, 2016

சபாஷ் நாயுடு; தமாஷ் ஹாசன்!

‘‘தலைவர் கமலஹாசன், வெறும் நடிகர் மட்டுமே அல்ல. அவர், ஆறு கோடி தமிழர்களோட பெருமை. தமிழனோட மானத்தை, அகில உலகத்திலயும் உயர்த்தி பிடிக்கிற எங்க தலைவனை, உலக நாயகனைப் பத்தி எழுதறதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்கு? நீ அப்படி என்னத்த பெரிசா சாதிச்சுக் கிழிச்சிட்ட. அவரைப் பத்தி எழுதறத இத்தோட நிறுத்திக்கலை... மவனே....’’

- எப்படியும், படித்து முடித்ததும் நமது சகோதரர்கள், மேற்படியாக நாகரீகமாகவும், பிரசுரிக்க முடியாதபடிக்கு அ + நாகரீகமாகவும் எழுதித் தள்ளத்தான் போகிறார்கள். எழுதக் காத்திருப்பவர்களுக்கு ஸ்டார்ட்டிங் டிரபுள் வந்து விடக்கூடாது என்பதற்காக, முதல் கண்டன கடிதத்தை நானே எழுதி விட்டு... இனி ஆரம்பிக்கிறேன் கட்டுரையை!

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...