நடந்து முடிந்த விஷயங்களை வாழ்க்கையில் மீண்டும் ஒருமுறை எப்போதாவது அசை போட்டுப் பார்க்கும் போது, ‘அந்த ஒரு தவறை மட்டும் செய்யாமல் இருந்திருந்தால்...’ என்கிற நம் கடந்தகால அசட்டுத்தனத்தின் மீதான கோபம் தவிர்க்கமுடியாதது. எனக்கும் அப்படி ஒரு கோபம் இருக்கிறது. என் வாழ்வின் மீது படிந்த தீரா களங்கத்துக்குக் காரணமாக இருந்தவை... இரு பாட்டில்கள். யெஸ்! நீங்கள் நினைப்பது சரிதான். இரு மது பாட்டில்கள்.