ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

தொல்காப்பியரும்... ஒரு டெலஸ்கோப்பும்!

ஜிலுஜிலு பனியடிக்கிற மலை, குளுகுளு காற்றடிக்கிற காடு, பச்சைப்பசேல் வயல், நீல அலையடிக்கிற  கடல்... இதெல்லாம் கடந்து அடுத்த இடத்துக்கு நாம் இப்போது பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பயணம் செல்கிற இடம் கொஞ்சம் கடினமானது. தலைக்கு தொப்பி அவசியம் - கடும் வெயில் இருக்கும். கையில் தண்ணீர் கட்டாயம் - கானல் நீர் கூட கண்ணில் படாது. சன் ஸ்க்ரீன் லோஷன்கள் கையிருப்பு வைத்திருப்பதும் நல்லதே - வீசுகிற காற்றிலும் வெப்பம் மிகுந்திருக்கும். மலைகளை உடைத்து, மரங்களை அழித்து, வயல்வெளிகளை வீட்டுமனைகளாக்கி, கடல் மணலையும் தாது மணல் என பெயர் சூட்டி, வாரி விற்று... இயற்கை அன்புடன் நமக்களித்த பூமியை கடைசியாக நாம் முழுமையான பாலையாகவே மாற்றி விட்டோம்... இல்லையா? இயற்கை பகுப்பின் கட்டக்கடைசி அத்தியாயமான பாலை நிலத்துக்குள் இப்போது நாம் நுழைகிறோம்.

வியாழன், 27 ஏப்ரல், 2017

மார்க்சிஸ்ட் சகாவும், மஞ்சு வாரியாரும்...!

ரசு என்பது ஒரு அடக்குமுறை இயந்திரம் - இடதுசாரி தத்துவயியல் மரபின் அடிநாதங்களுள் மேற்படி ஐந்து வார்த்தை சொற்றொடரும் அடக்கம். வேடிக்கை என்னவென்றால்... இடதுசாரி அமைப்பே ஆட்சி பீடத்தில் அமர நேரிட்டாலும் கூட... அரசு என்பது ஒரு அடக்குமுறை இயந்திரமே!

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

கட்டப்பாவுக்கு வந்த கன்னட சோதனை!

ரு நடிகரை கண்டித்து மாநிலம் முழுக்க பந்த் அறிவிப்பு. எனக்குத் தெரிந்து, ஒரு நடிகருக்காக, அவர் பத்தாண்டுகளுக்கு முன் பேசிய பேச்சுக்காக மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படுவது இதுவே முதல்முறை. அந்த வகையில் ரஜினிகாந்த், கமலஹாசன், இந்தி(ய) திரையுலகில் அமிதாப் பச்சன், ஷாருக் + சல்மான் + அமீர் கான்கள்... ஏன், உலகளவில் அர்னால்ட் ஸ்வார்ஸ்நெகர், சில்வஸ்டர் ஸ்டாலன், ஜாக்கி சான் என்று எந்தவொரு நடிகரும் அடையாத அதிகபட்ச புகழை அடைந்திருக்கிறார் தமிழ் சினிமா நடிகர் சத்யராஜ். வாட்டாளுக்கு நன்றிகள்!

திங்கள், 17 ஏப்ரல், 2017

காசு.. பணம்... துட்டு.... மணி.... மணி!

கனாமிக்ஸ் பற்றி இந்தத் தொடரில் அதிகம் பேசவில்லை என பொருளாதாரத்துறை மாணவர்கள் வருத்தப்பட்டிருக்கலாம். அந்த வருத்தத்தைப் போக்குவதற்கான வாரம் இது. முன்னேறிய நாடு (Developed Country) என்று இன்றைய உலகம் யாரைச் சொல்கிறது? அணுகுண்டு வைத்திருப்பவர்களையா? குட்டி நாடுகள் கூட ஷெல்ஃபில் அடுக்கி வைத்திருக்கிறதே? அதெல்லாம் வளர்ந்த நாடு லிஸ்ட்டில் வந்து விடுமா என்ன? வளர்ந்த நாடு என்பதற்கான அர்த்தம் தேடுகிற போது, ‘‘A developed country is a sovereign state that has a highly developed economy...’’ என்பதாக விளக்குகிறது விக்கி. அதாவது பொருளாதாரத்தில் பெரும் பிஸ்தாவாக இருக்கவேண்டுமாம். சரி. பொருளாதாரத்தில் பெரும் பிஸ்தாவாக மாறுவது எப்படி?

வியாழன், 13 ஏப்ரல், 2017

பாறையின் தடம்!

‘‘மணி இப்பவே பத்தரை . நாம போறதுக்குள்ள மீனாட்சி அம்மன் கோயில் நடை சார்த்திடப் போறாங்க மனோ...’’ - மெல்லிய குரலில் கேட்ட வினோதனுக்கு வயது 70க்கு சற்றேறக்குறைய இருக்கலாம். மனோதத்துவத்துறையில் இந்தியாவின் நம்பர் 1, 2, 3 பட்டியலுக்குள் இருக்கிற பிஸி டாக்டர்.
‘‘இந்த கேஸோட முடிச்சிடலாம் டாக்டர். இது கொஞ்சம் பெக்கூலியர். சின்னப் பையன். 15 வயசு. எதையோ பாத்து பயந்திருக்கான். பேய், அது இதுன்னு உளர்றான். பயத்தில இருந்து அவனை வெளிய கொண்டு வர முடியலை. என்னோட புரபஸர் நீங்க. பார்த்துட்டு ஒரு ஒப்பீனியன் சொல்லுங்களேன்...’’ - மனோ பேசிக் கொண்டிருக்கும் போதே, அந்தச் சிறுவன், அவனது அப்பாவுடன் உள்ளே நுழைந்தான்.

ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

கடல்நீர் நடுவே... டைட்டானிக்!

ஞானத்தில் தேர்ந்த அரசன் என்று புனித வேதாகமம் சாலமன் மன்னனை குறிப்பிடுகிறது. ஒருங்கிணைந்த இஸ்ரேல் மற்றும் யூதா தேசங்களின் (Kingdom of Israel and Kingdom of Judah) கடைசி மன்னன். தாவீது (David) ராஜாவின் மகனான சாலமனின் காலம் கிமு 970 முதல் கிமு 931 வரை என்று வரலாற்று அறிஞர்கள் கணிக்கிறார்கள். ‘என்ன வேண்டும்’ என்று இறைவன் கேட்டபோது, ‘அறிவைக் கொடு’ என கேட்டுப் பெற்றவர் என்று விவிலியம் புகழ்கிறது. ஞானத்தின் துணையுடன் அவர் வழங்கிய தீர்ப்புகளை கதை, கதையாக படித்திருக்கலாம் (ஒரே குழந்தைக்கு இரு தாய்கள் உரிமை கொண்டாடி வருகிற கதை நினைவுக்கு வருதா?). சாலமன் மன்னனுக்கு எண்ணிக்கைப் படி 700 மனைவிகள் (யப்பாடி!!). லிஸ்ட் முடியவில்லை. + 300 பெண்கள் அதிகாரப்பூர்வமற்ற மனைவிகளாக இருந்திருக்கிறார்கள். தேசத்தை வலுவானதாக மாற்றிய சாலமன் ராஜா, கலை, பண்பாடு போன்ற விஷயங்களிலும் ரொம்ப அக்கறை காட்டியிருக்கிறார். இந்த சாலமன் ராஜாவுக்கும், நம்ம மதுரைக்கும் ஏதாவது தொடர்பிருக்கும் என்று யோசிக்க முடிகிறதா?

திங்கள், 3 ஏப்ரல், 2017

கடலோரக் கவித... கவித...!

தோளில் வலையும், இன்னபிற கடலோடி உபகரணங்களுமாக கையசைத்து, கடலுக்குள் பிரிந்து போகிற கணவனுக்காக கரையில் காத்திருக்கிற நெய்தல் பெண்ணின் சோகங்களால் மட்டுமே ஆனதல்ல கடல்புறம். காத்திருக்கிற பெண்ணின் இரங்கல் உணர்வுகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிற இலக்கியங்கள் வாயிலாக, தமிழுக்கு நெய்தல் மண் நிறையவே பங்களித்திருக்கிறது. அதைக் கடந்து, மனித நாகரிக வளர்ச்சியின் அடுத்தகட்டம் இந்த மண்ணில் இருந்ததை உலக இலக்கியங்கள் பதிவு செய்கின்றன. காடு, மலை, வயல் வெளிகளில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை, அந்தந்த நிலப்பரப்புக்குள் முடங்கிக் கிடந்தது. கடல்புறம் அப்படி அல்ல. மரக்கலங்கள் துணையுடன் அவர்கள் பூமிக்கீற்றின் சகல திசைகளுக்கும் சென்று வந்தார்கள். பல திசை நாகரிகங்கள், கலாச்சாரங்கள், இலக்கியங்களின் பரிவர்த்தனை பிரதேசமாக நெய்தல் மண் திகழ்ந்தது.

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...