சரித்திர சினிமாக்களில் நீங்கள் கண்டிருப்பதைப் போன்றதொரு பிரமாண்ட அரண்மனை அது. ஆரவாரமும், கூக்குரலும் அன்றுகாலை அதிகமிருப்பது அறிந்து, மன்னனும், மகாராணியும் அரண்மனை மாடத்துக்கு வந்து, அங்கிருந்து வெளியே கவனிக்கின்றனர். கீழே ஏராளமான மனிதர்கள். முகங்களில் பசியும், உடல்களில் வறுமையும் மிகுந்திருக்கிறது. ‘‘மன்னா... சாப்பிட்டு நாளாகிறது. பசி வாட்டுகிறது. எங்கள் குழந்தைகளுக்குக் கூட சரியான உணவு இல்லை. முதியவர்கள் பசி தாங்காமல் வீதிகளில் செத்து விழுகின்றனர். எங்கள் பசி தீர, ரொட்டித் துண்டுகளுக்கு வழி சொல்லுங்கள் மன்னா...’’ - மாடத்தில் தெரிந்த மன்னன் - மகாராணியின் முகங்களில் தீர்வை எதிர்பார்த்து, இடுங்கிய கண்களுடன் அந்த ஜனத்திரள் கூக்குரல் எழுப்புகிறது. அவர்களை நிதானித்து கவனித்தப் பின் மகாராணி இப்படிச் சொல்கிறாள்... ‘‘ரொட்டி கிடைக்காவிட்டால் என்ன...? கேக் சாப்பிடுங்கள்!’’.