‘‘பொறு. அந்த டைம்ல ஜப்பான் ஆர்மி, பர்மாவை பிடிச்சிட்டாங்க. அடுத்த இலக்கா, இந்தியாவை தாக்குறதுக்கு திட்டம் போட்டாங்க. அந்த திட்டத்தை வெற்றிகரமா செயல்படுத்துறதுக்காக ஏழு பேர் கொண்ட ஒரு குழுவை படு ரகசியமா கடல் வழியாக இந்தியா அனுப்பி வைச்சாங்க. அந்தக் குழுவுல,வெப்பன் கன்ட்ரோல் ஆபீசரா எங்க அப்பாவும் இந்தியா வந்தாரு. அவர் கூட சேர்ந்து நானும் வந்தேன். 1942ல, உங்க மெட்ராஸ்.. அதான், சென்னைக்கு வந்தோம். இந்த எண்ணூர்ல தான் அப்ப எங்க ரகசிய முகாமை அமைச்சோம். அங்கயும் அப்பாவோட ஆராய்ச்சி படு தீவிரமா தொடர்ந்திச்சு. கடைசியா ஒரு நாள்... அவரோட அயராத உழைப்புக்கு பலன் கிடைச்சது...’’
தொடரின் முதல் பாகம் படிக்க: யூனா! (Made in Japan) 1