மருத்துவக் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டுவது, தண்ணீர் தர மறுப்பது, நதிகள் இணைப்புக்கு திட்டவட்டமான மறுப்பு என்று கடவுளின் தேசத்தின் மீது சில - பல மனக்கசப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும்... மழை வௌ்ளத்தில் தத்தளிக்கிற இந்த இக்கட்டான தருணத்தில் வேறெந்த மாநிலங்களை விடவும் தன்னார்வ உதவிகளை மிக, மிகவும் அதிகளவில் கேரளத்துக்கு தாமாக முன்வந்து வழங்கிக் கொண்டிருப்பது தமிழகம் என்பதை மறுக்கமுடியாது. இந்தச் சிறு தகவலுடன் இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கலாம்.