சனி, 31 டிசம்பர், 2016

சல்மான்... ஷாருக் - அழகாவே இல்லையே!

‘அய்யா... மாடு குத்திபுடுச்சுய்யா... கொடலு சரிஞ்சி மயங்கிக் கெடக்கறாருய்யா...’ - ஜல்லிக்கட்டு தினத்தின் மாலைநேரங்களில், அரசு மருத்துவமனை வராண்டாக்களில் இந்த கதறல் ஒலி கேட்டிருக்கலாம். ‘இன்னும் எத்தனை நாள் சார், இந்த ரத்தக்களறி...?’ - மனிதநேயத்தில் அக்கறை கொண்டவர்கள், ஜல்லிக்கட்டை எதிர்க்க எடுத்து வைக்கிற வாதம் இது. ‘காளைகளுக்கும் நம்மைப் போல உணர்வுகள் இருக்கு சார். ஜல்லிக்கட்டுங்கிற பேர்ல அதை கொடுமைப்படுத்துறோம். வாலை கடிச்சு காயப்படுத்துறாங்க. சாராயத்தை குடிக்க விட்டு மூர்க்கமாக்குறாங்க. சுத்த காட்டுமிராண்டித்தனமான செயல் சார் இது...’ - மிருகநேயத்தில் அக்கறை கொண்டவர்கள் வைக்கிற வாதம் இது. இரண்டும் எந்தளவுக்கு சரி? இவர்கள் சொல்வதில் நியாயம் இருப்பது போல தெரிகிறதே... நியாயம் இருக்கிறதா? ஜல்லிக்கட்டை தடை செய்து விடலாமா?

செவ்வாய், 27 டிசம்பர், 2016

வீரம் வௌஞ்ச மண்ணு!

குடிநீர் வரவில்லை என்று குடங்களுடன் சாலையை மறித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறதை அன்றாடம் செய்திகளில் பார்த்திருக்கலாம். சிலர் நேரிலும் பார்த்திருக்கலாம். சாலை மறியல் செய்கிறவர்களின் கனிவான கவனத்துக்கு: குறிஞ்சி எனப்படுகிற மலைப்பகுதியில் வளர்ந்து செழித்திருந்த உயர, உயர மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்த்து கதவு, ஜன்னல் ஆக்கி விட்டோம். மேகங்களை மறித்து மழையாய் மடை மாற்றுகிற வேலையை இனி யார் செய்வது? பூமியின் சமநிலையைப் பாதுகாக்கும் பணியில் ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக ஈடுபட்டுக் கிடந்த மலைகளை, மலைக்குன்றுகளை பிறந்தநாள் கேக் போல துண்டு துண்டாக அறுத்து சமையலறை, குளியலறைகளில் பதித்து விட்டோம். நீர்நிலைகளுக்கு ஆதார ஊற்றாக இருக்கிற பணியை இனி யார் செய்வது? எந்த பதில் எதிர்பார்ப்பும் இல்லாமல் நமது உயிர் வளர்த்த இயற்கையை சூறையாடி நாசம் செய்து விட்டு, கடைசியாக இப்போது.... குடங்களுடன் சாலையை மறித்துக் கொண்டிருக்கிறோம்!

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

குறிஞ்சி மலை டார்ஜான்!

க்கிரமானதொரு போர் இன்றைக்கு நடந்து கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா? பொதுவெளிகளில் அதிகம் அறியப்படாத அந்தப் போர், எல்லாம் தருகிற இந்தப் பூமியின் இயற்கை சமநிலையின் மீது அதிதீவிர அணுகுண்டுகளை சரமாரியாக வீசி அழித்துக் கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? எதிர்காலத்தில் மனித இனம் பாதுகாப்பாக வாழ, இன்னொரு கிரகத்தை இப்போதே தயார் செய்து கொள்ளவேண்டிய உடனடி ஆபத்தை அந்தப் போர் உருவாக்கியிருக்கிறது என்கிற விபரீதம் உணர்ந்திருக்கிறீர்களா? இயற்கைக்கு எதிராக, இயற்கை சமநிலைக்கு எதிராக மனித இனம் நடத்திக் கொண்டிருக்கிற அந்த உக்கிரப் போர், இப்போது உச்சம் தொட்டிருக்கிறது.

சனி, 10 டிசம்பர், 2016

நான் வந்துட்டேன்னு சொல்லு... திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!

சினிமாக்காரர்கள் ஏன் டூயட் பாடல்களை மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பரப்பிலேயே திரும்பத் திரும்ப எடுக்கிறார்கள் என்று ஒரு கேள்வி எழுப்பி, அதற்கான பதிலை இரு வாரங்களுக்கு முன்பாக பார்த்தோம். நினைவில் இருக்கும். இடம், கிளைமேட் அப்படி! சங்க இலக்கியங்களைப் புரட்டி, குறிஞ்சி நிலப்பரப்பு பற்றிய வர்ணிப்புகளைப் பார்த்தால்... சினிமா காதல் காட்சிகள் எல்லாம் டெபாசிட் காலியாகி விடுமாக்கும்!

வெள்ளி, 2 டிசம்பர், 2016

இரும்பிலே... ஒரு இதயம்!

செல்போன் இல்லாத வாழ்க்கையை ஒரு நிமிடமாகிலும் இன்றைக்கு யோசித்துப் பார்க்க முடிகிறதா? அதுவன்றி எதுவும் இயங்காது என்கிற நிலைக்கு ஏறக்குறைய வந்து விட்டோம். பத்து நிமிடம் நெட்வொர்க் இல்லையென்றாலும், மூச்சுத்திணறல் வந்து விடுகிறது. யாரையும் குற்றம் சொல்லிப் பயனில்லை. தகவல்தொழில்நுட்ப பெரு உலகம் இயந்திரத்தையும், மனிதனையும் இருவேறு கூறுகளாக பிரித்துப் பார்க்க விரும்புவதில்லை. திட்டமிட்ட செயல்கள் யாவும், திட்டமிட்ட படிக்கு நடந்து முடியவேண்டும் என்பதால், மனிதனும் இயந்திரமாகவே மாறியாக வேண்டிய கட்டாயம். கண்ணுக்கு முன் கழுத்தறுத்தால் கூட, சலனமற்றுப் பார்த்து விட்டு பஸ் ஏறுகிற இயந்திர இதயமே, பரிணாம வளர்ச்சியில் மனிதன் கண்ட உச்சக்கட்டம். கான் வாழ்க்கை அப்படியானது அல்ல. அது, உணர்வுப்பூர்வமானது.

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...