சர்ச்சையில் சிக்காத ராஜாக்கள் சரித்திரத்தில் கிடையாது. இசை ராஜாவும் விதிவிலக்கல்ல. அவரையும் அடிக்கடி சர்ச்சைகள் மையம் கொள்வது உண்டு. இப்போதும் ஒரு சர்ச்சை சுழன்றடிக்கிறது. பேசுவதற்கு, பிரதான பிரச்னையாகவும் அது இன்று மாறியிருக்கிறது. முற்போக்காளர்கள், முற்போக்காளரல்லாதவர்கள் என கருதப்படும் இரு தரப்பினரும் இறங்கி நின்று, வலைத்தளங்களை போர்க்களங்களாக்குகிறார்கள். சரியா, தப்பா சண்டைகளால், சமூக வலைத்தளங்களுக்கு ஆகும் டேட்டா செலவு கடந்த சில நாட்களில் கணிசமாக அதிகரித்து, தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு பெருமகிழ்வை தந்திருக்கிறது. இருக்கட்டும். பிரதமர் மோடியின் செயல்கள் கண்டு உண்மையிலேயே அம்பேத்கர் பெருமைப்பட்டிருப்பாரா?