இந்த மண்டல பூஜை சீசனில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 146 கோடி ரூபாய் வருவாய் இழப்பாம். காரணம், கொரோனா. பல்வேறு தொழில்துறைகளிலும் ஏற்பட்டிருக்கிற வருவாய் இழப்பு போல, இதையும் வழக்கமான செய்தியாக கடந்து விட முடியாது. வழிபாட்டு மையங்கள், வர்த்தக மையங்களாக மாறிவிட்டதால் ஏற்பட்டிருக்கிற வருமானம் பேச்சே... வேதனை இது. மணிகண்டனை Moneyகண்டனாக மாற்றி விட்டதால், ஆண்டிறுதியில் பேலன்ஸ் ஷீட் தயார் செய்து, லாப -நஷ்டக்கணக்கு பார்ப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. 4 ஆயிரத்து 133 அடி உயரத்தில் இருந்து அருள்பாலிக்கிற சுவாமி ஐயப்பன் alias மணிகண்டன், எளியவர்களின் மனதுக்கு எப்போதும் நெருக்கமான கடவுள். எளிய மக்களின் தோழனான மணிகண்டன் எப்போது / எப்படி Moneyகண்டனாக மாறினார்? அந்த History + Geography என்ன...?
(இதையும் படிங்க: ஐயப்பா... ஏதாகிலும் செய்யப்பா!)