அன்றாடப் பிரச்னைகளில் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் ஒரு சாதாரண மனிதன் கற்பனை கூட செய்யமுடியாத ஒரு சுதந்திர வாழ்க்கையை, செல்போன் சிக்னல் கூட கிடைக்காத அந்த வனத்தில் நான் வாழ்ந்தேன்.
முதலில் பேசாமல் இருந்த உருட்டி சித்தர், ஓரிரு நாட்களில் இயல்பாகி விட்டார். பகல் பொழுதுகள் பெரும்பாலும் உரையாடல்களால் நிரம்பின. உரையாடல் என்றால், ‘இன்னிக்கு மழை வர்ற மாதிரி இருக்குல்ல..’ என்கிற மாதிரி இல்லை. விஞ்ஞானம், கேலக்ஸி, இகாலஜி... என்று நவீன உலகம் எதிர்கொள்கிற பிரச்னைகள் பற்றி!