புதன், 8 நவம்பர், 2023

நிஷாகந்தி... - 2

ன்றாடப் பிரச்னைகளில் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் ஒரு சாதாரண மனிதன் கற்பனை கூட செய்யமுடியாத ஒரு சுதந்திர வாழ்க்கையை, செல்போன் சிக்னல் கூட கிடைக்காத அந்த வனத்தில் நான் வாழ்ந்தேன்.

முதலில் பேசாமல் இருந்த உருட்டி சித்தர், ஓரிரு நாட்களில் இயல்பாகி விட்டார். பகல் பொழுதுகள் பெரும்பாலும் உரையாடல்களால் நிரம்பின. உரையாடல் என்றால், ‘இன்னிக்கு மழை வர்ற மாதிரி இருக்குல்ல..’ என்கிற மாதிரி இல்லை. விஞ்ஞானம், கேலக்ஸி, இகாலஜி... என்று நவீன உலகம் எதிர்கொள்கிற பிரச்னைகள் பற்றி!

செவ்வாய், 7 நவம்பர், 2023

நிஷாகந்தி... - 1

லைச்சேரியில் இருந்து கண்ணனூருக்கு சாலை மார்க்க பயணம் அழகான அனுபவம். மலைச்சரிவின் மேல் அடுக்கில் கட்டிடங்கள். சற்று கீழிறங்கி தேசிய நெடுஞ்சாலை 66. அதற்கு இன்னும் கீ....ழே அலையடிக்கும் அரபிக்கடல். மலைச்சரிவின் கீழே, சாலையின் இடதுபுறம் படு ஆழத்தில் கடலையும், அலையையும் ரசித்துக் கொண்டே கண்ணனூர் சாலையில் பயணிப்பது அலாதி சுகம். தலைச்சேரியில் இருந்து ஏழாவது கிலோ மீட்டர், முழப்பிலாங்காடு கடற்கரையை ஒட்டி இருக்கிற சமுத்ரா பேலஸ் பீச் ரிசார்ட்டின் தனித்த ரெஸ்டாரெண்ட் அறையில் கடலைப் பார்த்த படி அமர்ந்திருந்தேன். எனக்கெதிரே தனுஷ். அவருக்குப் பக்கத்தில் ரெஜிஷா விஜயன்.

செவ்வாய், 2 மே, 2023

திருவிழாக்களின் நகரம்...


துரைக்கு, மதுரை என்பதைத் தவிரவும் இன்னும்நிறைய பெயர்கள் இருக்கின்றன. கடம்பவனம், கூடல் நகர், மதுராபுரி, நான்மாடக்கூடல், ஆலவாய், மீனாட்சி பட்டினம், அங்கண் மூதூர், தூங்காநகரம், கோயில் நகரம், திருவிழாக்களின் நகரம்... இப்படி இன்னும் நிறையப் பெயர்கள். கடைசியாய் வருகிறதே... திருவிழாக்களின் நகரம்! அந்தப் பெயரில் இருந்து ஆரம்பிக்கலாமா இந்தக் கட்டுரையை?

(2022ம் ஆண்டு மதுரை சித்திரை திருவிழாவின் போது குங்குமம் இதழில் - 22 04 2022 - வெளியாகி கவனம் ஈர்த்த கட்டுரை...)

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...