‘‘அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அல்லாஹ்வைத் திட்டுவார்கள். ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம். அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது....’’ - திருக்குர்ஆன், சூரத்துல் அன்ஆம் (ஆறாவது) அத்தியாயத்தின் 108வது வசனம் இப்படி உபதேசிக்கிறது. நாலுமாவடி மோகன் சி லாசரஸ் உள்ளிட்ட, இன்றைக்கு மத போதகம் செய்கிற அத்தனை பிரசங்கிகளுக்கும் இந்த வசனத்தில் இருக்கிறது அடிப்படை பாடம்.