ஞாயிறு, 20 நவம்பர், 2016

ரம்பம்பம்... ஆரம்பம்!

யாமம், நாழிகை... இந்த வார்த்தைகளெல்லாம் கேள்விப் பட்டதுண்டா? சாண்டில்யன் கதை படித்தவர்கள் ‘ஓ... யெஸ்’ என்று கை உயர்த்துவார்கள். ‘புரவியில் புயலெனச் சீறிப் பறந்த மந்திரிகுமாரி, இரு நாழிகைப் பொழுதில் அரச விதானத்தையடைந்தாள்...’ - என்றெல்லாம் வரிகளைப் போட்டு எழுதினால் தான், சரித்திரக் கதைக்கு, சரித்திர எஃபெக்ட் கிடைக்கும். இல்லையா? இந்த யாமம், நாழிகை என்பவை வெற்று அலங்கார வார்த்தைகளல்ல. அதற்குப் பின்புலத்தில் இருக்கிறது நேர அறிவியல்.

புதன், 16 நவம்பர், 2016

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ - இதுதாங்க சூழல் அறிவியல்!

காட்டுக்குள் புகுந்த காதல்ஜோடி யானைகளை, காவல் காத்த இளவட்டப் பையன், கவண் கல்லை வீசி அடித்து விரட்டிய குறிஞ்சி சாகசத்தை கடந்தவாரம் படித்து விட்டு நிறைய நண்பர்கள் ஆச்சர்யப்பட்டிருந்தார்கள்.


‘‘பள்ளிக்கூடத்தில படிக்கும் போது... குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை...ன்னு மொட்டை மனப்பாடம் பண்ணி பாஸ் பண்ணிட்டோம் சார். அர்த்தம் புரியலை. திணையியல் என்பது இவ்வளவு பெரிய சூழல் அறிவியல்னு (Environmental Science) தெரியாம போயிடுச்சே. நம்ம தமிழ் இலக்கியங்கள் சொல்லியிருக்கிறதை ஃபாலோ பண்ணுனாலே போதும். உலகம் தப்பிச்சிடும் சார்...’’ என்று மூணாறில் இருந்து கடிதம் வந்திருந்தது.


குறிஞ்சி நிலத்தில் இருந்து வந்த கடிதம்!

ஞாயிறு, 6 நவம்பர், 2016

என் மேல் விழுந்த மழைத்துளியே!

திருக்குறளில் இருந்து இந்த வாரத்தை ஆரம்பிக்கலாம்.
‘நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி 
தான்நல்கா தாகி விடின்’
- பள்ளிக்கூடத்தில் விளக்கம் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். மறந்து போனவர்களுக்காக... ‘‘பெய்ய வேண்டிய நேரத்தில் ஒழுங்காக மழை பெய்யவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்... அது, எவ்வளவு பெரிய கடலானாலும் சரி. தனது தன்மை மாறி கெட்டு விடும்,’’ - இது வள்ளுவர் வாய்ஸ். இன்றைய சயின்ஸ் இதை ‘அப்சல்யூட்லி ரைட்’ என்று உறுதி செய்கிறது. ஒழுங்காக மழை பெய்து, மழை நீர் கடலைச் சென்று சேர்ந்தால் மட்டுமே நிலத்தில் உள்ள தாதுக்கள் கடலில் கலக்கும். கடல்வாழ் உயிரினங்களுக்கு போதிய போஷாக்கு கிடைக்கும். மழை குறைந்தால்... கடல் வளம் குறைந்து, மீன்வளம் குறையும். இயற்கை ஒன்றுக்கொன்று கண்ணி கோர்த்து வைத்திருக்கிறது. ஒரு கண்ணி விலகினாலும் எல்லாம் போச்சு.

வெள்ளி, 28 அக்டோபர், 2016

ஊட்டி, கொடைக்கானலுக்கு ஒரு டிரிப்?

‘வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம், பிளாஸ்டிக் பொருள் தவிர்ப்போம்...’ என்று அரசாங்கமும், தன்னார்வ அமைப்புகளும் கரடியாகக் கத்திக் கொண்டிருக்கின்றன. எதற்காக? சுற்றுச்சூழல் சீர்கேடு தவிர்ப்பதற்காக! சுற்றுச்சூழலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை எழுதி வைத்து, கற்றுக் கொடுத்த உலகின் ஒரே நாகரிகம், தமிழ் நாகரிகம் என்று போன வாரம் பார்த்தோமில்லையா? ‘அப்படினா, மத்த நாகரிகமெல்லாம் கண்ணை மூடிகிட்டு இருந்துச்சா சார்?’ என்று மிகத் தேர்ந்த ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார் கம்பம் பக்கத்தில் இருக்கிற சுருளிபட்டி வாசகி ஜனனி.

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...