புதன், 21 பிப்ரவரி, 2018

காவிரி... கைவிரி...!

ர்நாடக நிலப்பரப்பில் சிறிதும், பெரிதுமாக ஓடிக் கொண்டிருக்கிற ஏராளமான நதிகளில், காவிரியும் ஒன்றாக இருக்கலாம். தமிழகத்தில் அப்படி அல்ல. தமிழகத்தைப் பொறுத்த வரை, நிலப்பரப்பின் மீது மட்டுமல்ல... மக்களின் உணர்வுப்பரப்பிற்குள்ளும் எந்த அணைத்தடுப்புகளுமின்றி அது ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழக மக்களின் வாழ்க்கையோடும், ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான அவர்களது வரலாற்றோடும் பின்னிப் பிணைந்து பயணிக்கிற நதி அது. இனி, நீராலன்றி... மணலால் மட்டுமே அறியப்படுமோ பொன்னி வள நதி என போற்றப்படுகிற அந்த காவிரி மகாநதி?

செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

சப்தபேதி பாண்

 ட்பு... மனித உயிர்களுக்கு மட்டுமானதல்ல. உலகில் பிறந்த அத்தனை உயிர்களுக்குமான பொது அம்சம். சாலையில் குறும்பு பண்ணித் திரிகிற நாய்க்குட்டிகள், கரைந்து வருகிற காகங்கள், கோழிகள் என அனைத்து உயிர்களிடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் நட்பை நீங்கள் பார்க்கலாம். பிற உயிர்களிடத்தில் பிரச்னை இருக்குமா, இல்லையா என்று தெரியவில்லை. மனித உயிர்களிடத்தில் நட்பு என்கிற வார்த்தை நாள்தோறும் களங்கப்படுத்தப் பட்டுக் கொண்டிருப்பதை காணமுடியும். ‘கழுத்தறுத்திட்டான், காலை வாரிட்டான், முதுகுல குத்திட்டான், கூடவே இருந்து குழி பறிச்சிட்டான்....’ - நட்பின் துரோக முடிவுகளை அடையாளம் காட்டுகிற வார்த்தைகள் இவை.

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...