திங்கள், 29 மே, 2017

கொம்புகிட்ட... வச்சிக்காத வம்பு!

த்து மணிக்கு இன்டர்வியூ. காலையில் குளித்து, முடித்து... சாமி கும்பிட்டு, நெற்றியில் இடமிருந்து வலமாக விபூதி பூசிக் கொண்டு, பைக்கை கிளப்புகிற நொடியில்... வலமிருந்து இடமாக ஒரு மியாவ்... நாலு கால் பாய்ச்சலில் ஓடினால்... என்ன தோணும்? ‘ச்ச்சே... இன்னிக்கு இன்டர்வியூ உருப்பட்ட மாதிரிதான்...!’ - எண்ணம் வருமா, இல்லையா? யாருக்கெல்லாம் இப்படி எண்ணம் வந்ததோ, அவர்கள் தொல்காப்பியம் படித்து வளராதவர் என்று அர்த்தம். நிஜம்தான் சகோஸ். மூட நம்பிக்கைகளுக்கு நமது தமிழ் மரபில் இடமில்லை. மக்களின் வாழ்வியல் நடைமுறைகள், சடங்குகள் குறித்த பதிவுகளாக சங்க இலக்கியங்களில் சில பல ‘நம்பிக்கை’ குறிப்புகள் இருந்தாலும் கூட, ஆதி இலக்கணமான தொல்காப்பியத்தை தலைகீழாக வைத்து படித்தாலும் மூ.நம்பிக்கை இராது.

ஞாயிறு, 21 மே, 2017

அந்தப்புரம்... எங்கிருக்கு மன்னர் மன்னா?

‘பூமியை தாய் என்று உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்...’ - சுக்வாமிஷ் பழங்குடியின தலைவர், அமெரிக்க ஜனாதிபதிக்கு செய்த மேற்படி அட்வைஸை படித்ததும், நிறையப் பேர் கண்கலங்கிப் போனதாக தகவல் வந்தது. 1850ம் ஆண்டுகளில் நடந்த இந்தச் சம்பவத்துக்கான வேர், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாக சங்க இலக்கியங்கள் சான்றுடன் கூறுவதை நீங்கள் அறிந்ததுண்டா சகோஸ்? சந்தன மரங்களை கப்பலில் அள்ளி, அடைத்துச் செல்வதற்காக யவன வணிகர்கள், ‘பறம்பு’ பாரி மன்னனை சகல வழிகளிலும் சபலப்படுத்தியும், அவன் திட்டவட்டமாக மறுத்து, சூழலியல் முக்கியத்துவம் குறித்து ஆற்றிய உரையை படித்ததுண்டா? அதை அறிந்து கொள்ள... வரலாற்று காலத்துக்குள் குட்டியாக நாம் ஒரு பயணம் கிளம்ப வேண்டியிருக்கும். பறம்புமலைக்கு பஸ் ஏறலாமா?

ஞாயிறு, 14 மே, 2017

பூமி மனிதருக்கு சொந்தமல்ல... மனிதர் தான் பூமிக்கு சொந்தம்!

‘‘பூமி மனிதருக்குச் சொந்தமல்ல; மனிதர்கள்தான் பூமிக்குச் சொந்தம் (The Earth does not belong to man; Man belongs to the Earth)’’ - இது, திணையியல் கோட்பாடுகளின் ஒற்றை வரி சாராம்சம். இந்த ஒற்றை வரிக்குச் சொந்தக்காரர்... முகங்களில் வரி, வரியாக நிறையச் சுருக்கம் விழுந்த ஒரு செவ்விந்திய பழங்குடி மனிதர் என்றால் நம்பமுடிகிறதா? இந்த ஒற்றை வரிக்குப் பின்னால் இருக்கிறது ஒரு கதை. பொருளாதார வல்லாதிக்க சக்திகள், இந்த பூமியை, அதன் மடியில் தவழ்கிற ஆதிவாசி மக்களை எப்படி சூறையாடி, துவம்சம் செய்து விடுகிறார்கள் என்பதை விளக்குகிற கதை!

புதன், 10 மே, 2017

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே!


 குடிநீருக்காக குடங்களுடன் பெண்கள் நீள்சாலைகளில் வெயிலை ஊடறுத்து நடந்து கொண்டிருக்கிறார்கள். தண்ணீருக்கு வழியின்றி, விவசாயிகள் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருபுறம் பரிதவிப்பான இந்தக் காட்சிகள். மறுபுறம், காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுகிறது. பாலாற்றைத் தடுத்து ஆந்திரம் அணை கட்டுகிறது. பெரியாற்றில் புதிய அணைக்கு கேரளம் ஆயத்தம் செய்கிறது. பிரச்னை, இன்டர்நேஷனல் லெவலிலும் தொடர்கிறது. பிரம்மபுத்ராவின் குறுக்கே மெகா அணை கட்டுகிறது சீனா. ‘அணை கட்டுறது நல்லதுதானங்க? தண்ணீரை சேமிச்சு, எதிர்கால தேவைக்கு வெச்சுக்கலாமே? அது ஒரு தப்பா?’ என்று சிலர் மடக்குப்பிடி போடலாம். கேள்வியில் நியாயம் இருப்பது போலத் தெரிந்தாலும்... அதிக நியாயங்களில்லை சகோஸ்!

புதன், 3 மே, 2017

பாகுபலி 2 - இது Conclusion அல்ல!

‘‘நீர் என் அருகில் இருக்கும் வரை... என்னைக் கொல்லும் ஆண் மகன் இன்னும் பிறக்க்க்க்கவில்லை மாமா...!’’ - காதுகளில் இன்னும் கம்பீரமாக ஒலிக்கிறதா அமரேந்திரனின் நம்பிக்கைக் குரல்!
1913ல் தாதா சாஹெப் பால்கே உருவாக்கிய ‘ராஜா ஹரிச்சந்த்ரா’ இந்தியாவின் முதல் சினிமாவாக அறியப்படுகிறது. அதன் பிறகான நூறாண்டுகளையும் கடந்த இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க / மாற்றங்களை விதைத்த முன்னோடி சினிமாக்கள் என்று ஒரு பட்டியல் போடலாம். அந்தப் பட்டியலில் தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்திருக்கிறது எஸ்.எஸ்.ராஜமவுலியின் பாகுபலி (2 மணி 39 நிமிடம் ஓடுகிற Beginning / 3 மணிநேரம் 17 நிமிடம் ஓடக்கூடிய Conclusion சேர்த்து). மீண்டும், மீண்டும் பிரமாண்ட வெற்றிக்காக வாழ்த்துகள்!

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...