வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

அனுஷ்கா... இலையா; தளிரா?

ச்சின், ரோஹித், கம்பீர்... வர்ஷா, தீப்தி, அனுஷ்கா - ஒரு காலத்தில் மும்பை எக்ஸ்பிரஸில் ஏறி வடக்காக பயணம் செய்கிற போதுதான் இதுமாதிரி பெயர்களெல்லாம் காதில் படும். இப்படியும் பெயரா என ஆச்சர்யமாக இருக்கும். அப்புறம் கிரிக்கெட்டும், சினிமாவும் இந்தப் பெயர்களை அறிமுகம் செய்தன. இப்போதெல்லாம், ‘ஏலெய் சச்சின்... இங்கன வால!’ என்று நம்ம வயக்காடு, வரப்புகளில் கூட கூவி அழைக்கப்படும் பெயர்களாக இவை மாறி விட்டன. ஏன்? வடக்கில் இருந்து இறக்குமதி செய்கிற அளவுக்கு தமிழில் பெயர்களுக்கு எப்படி ஏற்பட்டது பற்றாக்குறை?

வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

ஆர்தர் காட்டனும்... ஒரு அணைக்கட்டும்!

சில ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் வேடிக்கையாக இருக்கும். சென்னைக்கு மிக, மிக, மிக அருகே... என்று ஒரு கொக்கி போட்டு கவனத்தை இழுப்பார்கள். அடுத்த ஷாட்டில், திருப்பரங்குன்றத்தை காட்டி அங்கு பிளாட் போட்டிருக்கிறோம் என்று கலர் கொடி கட்டிய இடத்தைக் காட்டுவார்கள். விசாரித்தால், ‘ஜஸ்ட் ட்வென்டி மினிட்ஸ் ஸார் - விமானம் பிடித்து வந்தால்...’ என்று சொல்லக்கூடும். ஆனால், பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்... நாம் இங்கு பேசப்போவது ரியல் எஸ்டேட் மேட்டர் பற்றி அல்ல. ஆதியிலேயே நம்மாட்கள் பிளாட் போடக் கற்றுக் கொண்ட / கற்றுக் கொடுத்த விதம் பற்றி!

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

நான் வந்துட்டேன்னு சொல்லு...

‘‘ச்சே... ச்சே... என்னங்க இது காட்டுமிராண்டித்தனம்? வாயில்லா பிராணியைப் போய் இந்தப் பாடு படுத்திகிட்டு...’’ என்று, ஏசி அறைக்குள் பத்திரமாக உட்கார்ந்து சதுரங்கம் விளையாடுகிற மிஸ்டர் அண்ட் மிஸர்ஸ் பீட்டாக்களுக்கு தெரியாது... இது எத்தனை ரிஸ்க்கான விளையாட்டு என்று! ஆனால், நம்மாட்களுக்கு ரிஸ்க் எடுக்கறது... ரஸ்க் எடுக்கிற மாதிரித்தான? அத்தனை தடையும் உடைத்து, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... என்கிறது ஜல்லியாட்டம். அவனியாபுரம் (பிப்ரவரி 5), பாலமேடு (பிப்ரவரி 9), அலங்காநல்லூர் (பிப்ரவரி 10) என்று வரிசை கட்டி அடித்த ஜல்.. ஜல்... ஜல்... ஜல்லிக்கட்டு களத்தில் இருந்து, காளைகளின் வாய்ஸ். ‘பேசும் படம்’ பகுதிக்காக... உங்கள் பூனைக்குட்டீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

சுந்தரி நீயும்... சுந்தரன் ஞானும்!

திகளை எல்லாம் இன்றைக்கு நாம் கொஞ்சம் பெரிய சைஸ் சாக்கடைகளாக மாற்றி விட்டாலும் கூட, இயல்பில் அவை மிக அழகானவை. அவற்றின் கரைகளில்தான் நாகரிகம் பிறந்து, வளர்ந்து மனிதனை, மனிதனாக மாற்றி அழகுபடுத்தியிருக்கிறது. மருத நிலம் என்பது நதிக்கரைகளில் அமைந்தது என்பதால், மனித வரலாற்றின் முக்கிய காலகட்டம் இந்த நிலப்பரப்பிலேயே பதிவாகியிருக்கிறது. உலகின் சகல நதிக்கரை நாகரிகங்களையும் புரட்டிப் பாருங்கள்... கலையும், பண்பாடும், கலாச்சாரமும் அதன் உச்சத்தைத் தொட்டது அந்த வெளியில்தான். மற்ற திசைகளுடன் ஒப்பிடும் போது, நமது மருத மண்ணுக்கு கூடுதல் பெருமை இருக்கிறது. வேறெங்கும் விட இங்குதான் எக்கச்சக்க இலக்கியங்கள், படைப்புகள் தோன்றி நம்மொழிக்கு நிலையான புகழ் சேர்த்திருக்கின்றன. கலையும், இலக்கியமும் மருதத்தில் வளர அப்படி என்னவாம் காரணம்?

சனி, 4 பிப்ரவரி, 2017

ஊரு விட்டு, ஊரு வந்து... காதல் கீதல் பண்ணாதீங்க!

 டல் என்கிற ஒரு வார்த்தை தமிழில் இருக்கிறது தெரியும்தானே? படித்து அறிவதை விட, உணர்ந்து அறிந்தால் மட்டுமே இந்த வார்த்தைக்கான அர்த்தத்தை முழுதாகப் புரிந்து கொள்ளமுடியும். காதலர்களும், புதிதாக கல்யாணம் முடித்தவர்களும் ஊடல் பற்றி நன்றாகவே தெரிந்து வைத்திருப்பார்கள். ஆசையாகப் பேச அருகே போகும் போது, முகத்தை, உதட்டை சுழித்து, பழித்துக் காட்டிய படி உங்கள் ஆள், அந்தப் பக்கம் நகர்ந்தால் (பொய்க் கோவமாம்!) அதற்குப் பெயர் ஊடல். சரியாவதற்கு, சிறிதுநேரம் பிடிக்கும். வயலும் வயல் சார்ந்த மருத நிலத்துக்கும், இந்த ஊடலுக்கும் என்ன சம்பந்தம்?


தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...