திங்கள், 23 அக்டோபர், 2017

மெர்சல் விஜய்யும், கபாலி ரஞ்சித்தும்!

மெர்சல் சினிமா குறித்தான இந்த கட்டுரையில் கீழ்காணும் சங்கதிகளை தேடாதீர்கள்; கண்டடைய மாட்டீர்கள். - Disclaimer.
* இளைய தளபதியாக இருந்தவர், பதவி உயர்வு பெற்று, தளபதியாக பொறுப்பேற்றிருப்பதை வாழ்த்தி, வரவேற்றுக் கொண்டாடுவது.
* பாகுபலி போல கயிற்றைக் கட்டி, ரங்க ராட்டினத்தை அவர் இழுத்துச் சரிக்கிற வீரதீரம்.
* அனகோண்டா அளவுக்கு நீளமான மெகா அரிவாளை பல்லில் கவ்விக் கொண்டு நடக்கிற பராக்கிரமம்.
* டெங்கு தவிர்த்து இன்னபிற நோய்கள் அத்தனைக்கும் ஐந்தே ரூபாய் கட்டணம் பெற்றுக் கொண்டு குணமாக்கும் மருத்துவ வல்லமை.
* மதுரை, சென்னை தமிழ் உச்சரிப்புகளை... மதுரை, சென்னைக் காரர்களை விடவும் சிறப்பாக பேசி அசத்துகிற அந்த ‘நா - நயம்!’
* பறந்தும், குதித்தும் செய்கிற சண்டைகள். அதே லாவகத்துடன் பறந்தும், குதித்தும் போடுகிற நடனங்கள்.
* ஹீரோயின்களிடம் ‘ரோஸ்மில்க் க்கா... ஐஸ்ஸ்ஸூ...’ என்று அவர் உருகி, உருகிப் பேசுகிற அழகு...

- இதெல்லாம் இங்கே தேடினாலும் கிடைக்காது (எதிர்பார்த்து வந்த தளபதி மென்விசிறிகள், இந்த இடத்திலேயே SKIP  ஆகிக் கொள்வது நலம்).
சரி. பின்ன எதுக்காம் இந்தக் கட்டுரை?

வெள்ளி, 14 ஜூலை, 2017

இது என்ன பிஹேவியர், உலக நாயகன்?

சினிமா ரிலீசுக்கு சில வாரங்கள் முன் ‘போருக்கு தயாராகலாம்’ என்று அரசியல் அக்கப்போர் கிளப்பி, படத்துக்கு பப்ளிசிட்டி தேடிக் கொள்வதும், படம் ரிலீஸ் ஆகி படுத்துக் கொண்டதாக தகவல் வந்ததும், கயிலாய மலைப்பக்கம் டிரெக்கிங் செல்வதும் ‘உச்சம்’ காலா காலமாக கடைபிடித்து வருகிற வியாபார யுக்தி. தன்னை ஆன்மீக பிதாமகனாக அவர் புனைந்து கொண்டு ‘பாபா’ பிளாக்‌ஷிப் கதைகள் கூறினாலுமே கூட... இன்றைக்கு வரையிலும் மதவாத சர்ச்சைக்குரிய கருத்துக்களை தனது திரைப்படங்கள் வாயிலாக அவர் வெளிப்படுத்தியதில்லை.

ஞாயிறு, 2 ஜூலை, 2017

மெல்லத் தமிழினி... வளரும்!

‘‘யுனெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார்? மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...’’ - வண்டிப்பெரியாறில் இருந்து, 40 சதவீதம் அளவுக்கு மலையாளத்தைக் கலப்படம் செய்த தமிழில் மஞ்சுளா நிஜமான பதைபதைப்புடன் பேசினார். அவரது பேச்சில் இரு பிழைகள்.
1) அழிந்து வரும் மொழிகள் பட்டியலில் தமிழ் இல்லை.
2) மெல்லத் தமிழினி சாகும் என்று பாரதி சொல்லவும் இல்லை.
பாரதி என்ன சொல்லியிருக்கிறார்...?
‘‘மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ!
இந்த வசை எனக்கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!’’
- ‘தமிழ் சாகுமா...? யார்ரா... அப்டிச் சொன்னது’ என்று படு கோபமாக கம்பெடுக்கிறார் பாரதியார். செம்மொழி லிஸ்ட்டில் மற்றதெல்லாம் மூச்சு விடத் திணறிக் கொண்டிருக்கையில், நம்மது ‘பனை மரத்தில வவ்வாலா...?’ என்று இந்தக்காலத்து இளைஞர்களுடன் இணைந்து ரிதமிக்காக கலகலகலக்குகிறது இல்லையா?

வெள்ளி, 23 ஜூன், 2017

மினி கோப்பையும், மெகா நம்பிக்கையும்!

சாம்பியன்ஸ் டிராபி எனப்படுகிற சின்ன உலகக்கோப்பை தொடரின் பரபரபரபரபரப்பான பைனலில் இந்தியா தோற்றதற்கு என்ன காரணம்? டாஸ் ஜெயித்தும் பீல்டிங் எடுத்த கேப்டனின் முடிவா, படு மோசமான பந்து வீச்சா, அட... பந்து வீச்சே பரவாயில்லைங்க என வெறுக்கடிக்க வைத்த பேட்டிங் திறனா... நிறையக் கேள்விகள் விவாதிக்கப்படுகின்றன. ஒரு குழுவின் தோல்வியாகக் கருதி இந்தப் போட்டியின் முடிவை ஆராய்வதைக் காட்டிலும், மற்றொரு குழுவின் வெற்றியாக இந்த முடிவை உள்வாங்கிக் கொள்ளும்போது, புரிந்து கொள்ள கூடுதலாக சில விஷயங்கள் கிடைக்கக்கூடும்!

திங்கள், 29 மே, 2017

கொம்புகிட்ட... வச்சிக்காத வம்பு!

த்து மணிக்கு இன்டர்வியூ. காலையில் குளித்து, முடித்து... சாமி கும்பிட்டு, நெற்றியில் இடமிருந்து வலமாக விபூதி பூசிக் கொண்டு, பைக்கை கிளப்புகிற நொடியில்... வலமிருந்து இடமாக ஒரு மியாவ்... நாலு கால் பாய்ச்சலில் ஓடினால்... என்ன தோணும்? ‘ச்ச்சே... இன்னிக்கு இன்டர்வியூ உருப்பட்ட மாதிரிதான்...!’ - எண்ணம் வருமா, இல்லையா? யாருக்கெல்லாம் இப்படி எண்ணம் வந்ததோ, அவர்கள் தொல்காப்பியம் படித்து வளராதவர் என்று அர்த்தம். நிஜம்தான் சகோஸ். மூட நம்பிக்கைகளுக்கு நமது தமிழ் மரபில் இடமில்லை. மக்களின் வாழ்வியல் நடைமுறைகள், சடங்குகள் குறித்த பதிவுகளாக சங்க இலக்கியங்களில் சில பல ‘நம்பிக்கை’ குறிப்புகள் இருந்தாலும் கூட, ஆதி இலக்கணமான தொல்காப்பியத்தை தலைகீழாக வைத்து படித்தாலும் மூ.நம்பிக்கை இராது.

ஞாயிறு, 21 மே, 2017

அந்தப்புரம்... எங்கிருக்கு மன்னர் மன்னா?

‘பூமியை தாய் என்று உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்...’ - சுக்வாமிஷ் பழங்குடியின தலைவர், அமெரிக்க ஜனாதிபதிக்கு செய்த மேற்படி அட்வைஸை படித்ததும், நிறையப் பேர் கண்கலங்கிப் போனதாக தகவல் வந்தது. 1850ம் ஆண்டுகளில் நடந்த இந்தச் சம்பவத்துக்கான வேர், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாக சங்க இலக்கியங்கள் சான்றுடன் கூறுவதை நீங்கள் அறிந்ததுண்டா சகோஸ்? சந்தன மரங்களை கப்பலில் அள்ளி, அடைத்துச் செல்வதற்காக யவன வணிகர்கள், ‘பறம்பு’ பாரி மன்னனை சகல வழிகளிலும் சபலப்படுத்தியும், அவன் திட்டவட்டமாக மறுத்து, சூழலியல் முக்கியத்துவம் குறித்து ஆற்றிய உரையை படித்ததுண்டா? அதை அறிந்து கொள்ள... வரலாற்று காலத்துக்குள் குட்டியாக நாம் ஒரு பயணம் கிளம்ப வேண்டியிருக்கும். பறம்புமலைக்கு பஸ் ஏறலாமா?

ஞாயிறு, 14 மே, 2017

பூமி மனிதருக்கு சொந்தமல்ல... மனிதர் தான் பூமிக்கு சொந்தம்!

‘‘பூமி மனிதருக்குச் சொந்தமல்ல; மனிதர்கள்தான் பூமிக்குச் சொந்தம் (The Earth does not belong to man; Man belongs to the Earth)’’ - இது, திணையியல் கோட்பாடுகளின் ஒற்றை வரி சாராம்சம். இந்த ஒற்றை வரிக்குச் சொந்தக்காரர்... முகங்களில் வரி, வரியாக நிறையச் சுருக்கம் விழுந்த ஒரு செவ்விந்திய பழங்குடி மனிதர் என்றால் நம்பமுடிகிறதா? இந்த ஒற்றை வரிக்குப் பின்னால் இருக்கிறது ஒரு கதை. பொருளாதார வல்லாதிக்க சக்திகள், இந்த பூமியை, அதன் மடியில் தவழ்கிற ஆதிவாசி மக்களை எப்படி சூறையாடி, துவம்சம் செய்து விடுகிறார்கள் என்பதை விளக்குகிற கதை!

புதன், 10 மே, 2017

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே!


 குடிநீருக்காக குடங்களுடன் பெண்கள் நீள்சாலைகளில் வெயிலை ஊடறுத்து நடந்து கொண்டிருக்கிறார்கள். தண்ணீருக்கு வழியின்றி, விவசாயிகள் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருபுறம் பரிதவிப்பான இந்தக் காட்சிகள். மறுபுறம், காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுகிறது. பாலாற்றைத் தடுத்து ஆந்திரம் அணை கட்டுகிறது. பெரியாற்றில் புதிய அணைக்கு கேரளம் ஆயத்தம் செய்கிறது. பிரச்னை, இன்டர்நேஷனல் லெவலிலும் தொடர்கிறது. பிரம்மபுத்ராவின் குறுக்கே மெகா அணை கட்டுகிறது சீனா. ‘அணை கட்டுறது நல்லதுதானங்க? தண்ணீரை சேமிச்சு, எதிர்கால தேவைக்கு வெச்சுக்கலாமே? அது ஒரு தப்பா?’ என்று சிலர் மடக்குப்பிடி போடலாம். கேள்வியில் நியாயம் இருப்பது போலத் தெரிந்தாலும்... அதிக நியாயங்களில்லை சகோஸ்!

புதன், 3 மே, 2017

பாகுபலி 2 - இது Conclusion அல்ல!

‘‘நீர் என் அருகில் இருக்கும் வரை... என்னைக் கொல்லும் ஆண் மகன் இன்னும் பிறக்க்க்க்கவில்லை மாமா...!’’ - காதுகளில் இன்னும் கம்பீரமாக ஒலிக்கிறதா அமரேந்திரனின் நம்பிக்கைக் குரல்!
1913ல் தாதா சாஹெப் பால்கே உருவாக்கிய ‘ராஜா ஹரிச்சந்த்ரா’ இந்தியாவின் முதல் சினிமாவாக அறியப்படுகிறது. அதன் பிறகான நூறாண்டுகளையும் கடந்த இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க / மாற்றங்களை விதைத்த முன்னோடி சினிமாக்கள் என்று ஒரு பட்டியல் போடலாம். அந்தப் பட்டியலில் தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்திருக்கிறது எஸ்.எஸ்.ராஜமவுலியின் பாகுபலி (2 மணி 39 நிமிடம் ஓடுகிற Beginning / 3 மணிநேரம் 17 நிமிடம் ஓடக்கூடிய Conclusion சேர்த்து). மீண்டும், மீண்டும் பிரமாண்ட வெற்றிக்காக வாழ்த்துகள்!

ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

தொல்காப்பியரும்... ஒரு டெலஸ்கோப்பும்!

ஜிலுஜிலு பனியடிக்கிற மலை, குளுகுளு காற்றடிக்கிற காடு, பச்சைப்பசேல் வயல், நீல அலையடிக்கிற  கடல்... இதெல்லாம் கடந்து அடுத்த இடத்துக்கு நாம் இப்போது பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பயணம் செல்கிற இடம் கொஞ்சம் கடினமானது. தலைக்கு தொப்பி அவசியம் - கடும் வெயில் இருக்கும். கையில் தண்ணீர் கட்டாயம் - கானல் நீர் கூட கண்ணில் படாது. சன் ஸ்க்ரீன் லோஷன்கள் கையிருப்பு வைத்திருப்பதும் நல்லதே - வீசுகிற காற்றிலும் வெப்பம் மிகுந்திருக்கும். மலைகளை உடைத்து, மரங்களை அழித்து, வயல்வெளிகளை வீட்டுமனைகளாக்கி, கடல் மணலையும் தாது மணல் என பெயர் சூட்டி, வாரி விற்று... இயற்கை அன்புடன் நமக்களித்த பூமியை கடைசியாக நாம் முழுமையான பாலையாகவே மாற்றி விட்டோம்... இல்லையா? இயற்கை பகுப்பின் கட்டக்கடைசி அத்தியாயமான பாலை நிலத்துக்குள் இப்போது நாம் நுழைகிறோம்.

வியாழன், 27 ஏப்ரல், 2017

மார்க்சிஸ்ட் சகாவும், மஞ்சு வாரியாரும்...!

ரசு என்பது ஒரு அடக்குமுறை இயந்திரம் - இடதுசாரி தத்துவயியல் மரபின் அடிநாதங்களுள் மேற்படி ஐந்து வார்த்தை சொற்றொடரும் அடக்கம். வேடிக்கை என்னவென்றால்... இடதுசாரி அமைப்பே ஆட்சி பீடத்தில் அமர நேரிட்டாலும் கூட... அரசு என்பது ஒரு அடக்குமுறை இயந்திரமே!

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

கட்டப்பாவுக்கு வந்த கன்னட சோதனை!

ரு நடிகரை கண்டித்து மாநிலம் முழுக்க பந்த் அறிவிப்பு. எனக்குத் தெரிந்து, ஒரு நடிகருக்காக, அவர் பத்தாண்டுகளுக்கு முன் பேசிய பேச்சுக்காக மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படுவது இதுவே முதல்முறை. அந்த வகையில் ரஜினிகாந்த், கமலஹாசன், இந்தி(ய) திரையுலகில் அமிதாப் பச்சன், ஷாருக் + சல்மான் + அமீர் கான்கள்... ஏன், உலகளவில் அர்னால்ட் ஸ்வார்ஸ்நெகர், சில்வஸ்டர் ஸ்டாலன், ஜாக்கி சான் என்று எந்தவொரு நடிகரும் அடையாத அதிகபட்ச புகழை அடைந்திருக்கிறார் தமிழ் சினிமா நடிகர் சத்யராஜ். வாட்டாளுக்கு நன்றிகள்!

திங்கள், 17 ஏப்ரல், 2017

காசு.. பணம்... துட்டு.... மணி.... மணி!

கனாமிக்ஸ் பற்றி இந்தத் தொடரில் அதிகம் பேசவில்லை என பொருளாதாரத்துறை மாணவர்கள் வருத்தப்பட்டிருக்கலாம். அந்த வருத்தத்தைப் போக்குவதற்கான வாரம் இது. முன்னேறிய நாடு (Developed Country) என்று இன்றைய உலகம் யாரைச் சொல்கிறது? அணுகுண்டு வைத்திருப்பவர்களையா? குட்டி நாடுகள் கூட ஷெல்ஃபில் அடுக்கி வைத்திருக்கிறதே? அதெல்லாம் வளர்ந்த நாடு லிஸ்ட்டில் வந்து விடுமா என்ன? வளர்ந்த நாடு என்பதற்கான அர்த்தம் தேடுகிற போது, ‘‘A developed country is a sovereign state that has a highly developed economy...’’ என்பதாக விளக்குகிறது விக்கி. அதாவது பொருளாதாரத்தில் பெரும் பிஸ்தாவாக இருக்கவேண்டுமாம். சரி. பொருளாதாரத்தில் பெரும் பிஸ்தாவாக மாறுவது எப்படி?

வியாழன், 13 ஏப்ரல், 2017

பாறையின் தடம்!

‘‘மணி இப்பவே பத்தரை . நாம போறதுக்குள்ள மீனாட்சி அம்மன் கோயில் நடை சார்த்திடப் போறாங்க மனோ...’’ - மெல்லிய குரலில் கேட்ட வினோதனுக்கு வயது 70க்கு சற்றேறக்குறைய இருக்கலாம். மனோதத்துவத்துறையில் இந்தியாவின் நம்பர் 1, 2, 3 பட்டியலுக்குள் இருக்கிற பிஸி டாக்டர்.
‘‘இந்த கேஸோட முடிச்சிடலாம் டாக்டர். இது கொஞ்சம் பெக்கூலியர். சின்னப் பையன். 15 வயசு. எதையோ பாத்து பயந்திருக்கான். பேய், அது இதுன்னு உளர்றான். பயத்தில இருந்து அவனை வெளிய கொண்டு வர முடியலை. என்னோட புரபஸர் நீங்க. பார்த்துட்டு ஒரு ஒப்பீனியன் சொல்லுங்களேன்...’’ - மனோ பேசிக் கொண்டிருக்கும் போதே, அந்தச் சிறுவன், அவனது அப்பாவுடன் உள்ளே நுழைந்தான்.

ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

கடல்நீர் நடுவே... டைட்டானிக்!

ஞானத்தில் தேர்ந்த அரசன் என்று புனித வேதாகமம் சாலமன் மன்னனை குறிப்பிடுகிறது. ஒருங்கிணைந்த இஸ்ரேல் மற்றும் யூதா தேசங்களின் (Kingdom of Israel and Kingdom of Judah) கடைசி மன்னன். தாவீது (David) ராஜாவின் மகனான சாலமனின் காலம் கிமு 970 முதல் கிமு 931 வரை என்று வரலாற்று அறிஞர்கள் கணிக்கிறார்கள். ‘என்ன வேண்டும்’ என்று இறைவன் கேட்டபோது, ‘அறிவைக் கொடு’ என கேட்டுப் பெற்றவர் என்று விவிலியம் புகழ்கிறது. ஞானத்தின் துணையுடன் அவர் வழங்கிய தீர்ப்புகளை கதை, கதையாக படித்திருக்கலாம் (ஒரே குழந்தைக்கு இரு தாய்கள் உரிமை கொண்டாடி வருகிற கதை நினைவுக்கு வருதா?). சாலமன் மன்னனுக்கு எண்ணிக்கைப் படி 700 மனைவிகள் (யப்பாடி!!). லிஸ்ட் முடியவில்லை. + 300 பெண்கள் அதிகாரப்பூர்வமற்ற மனைவிகளாக இருந்திருக்கிறார்கள். தேசத்தை வலுவானதாக மாற்றிய சாலமன் ராஜா, கலை, பண்பாடு போன்ற விஷயங்களிலும் ரொம்ப அக்கறை காட்டியிருக்கிறார். இந்த சாலமன் ராஜாவுக்கும், நம்ம மதுரைக்கும் ஏதாவது தொடர்பிருக்கும் என்று யோசிக்க முடிகிறதா?

திங்கள், 3 ஏப்ரல், 2017

கடலோரக் கவித... கவித...!

தோளில் வலையும், இன்னபிற கடலோடி உபகரணங்களுமாக கையசைத்து, கடலுக்குள் பிரிந்து போகிற கணவனுக்காக கரையில் காத்திருக்கிற நெய்தல் பெண்ணின் சோகங்களால் மட்டுமே ஆனதல்ல கடல்புறம். காத்திருக்கிற பெண்ணின் இரங்கல் உணர்வுகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிற இலக்கியங்கள் வாயிலாக, தமிழுக்கு நெய்தல் மண் நிறையவே பங்களித்திருக்கிறது. அதைக் கடந்து, மனித நாகரிக வளர்ச்சியின் அடுத்தகட்டம் இந்த மண்ணில் இருந்ததை உலக இலக்கியங்கள் பதிவு செய்கின்றன. காடு, மலை, வயல் வெளிகளில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை, அந்தந்த நிலப்பரப்புக்குள் முடங்கிக் கிடந்தது. கடல்புறம் அப்படி அல்ல. மரக்கலங்கள் துணையுடன் அவர்கள் பூமிக்கீற்றின் சகல திசைகளுக்கும் சென்று வந்தார்கள். பல திசை நாகரிகங்கள், கலாச்சாரங்கள், இலக்கியங்களின் பரிவர்த்தனை பிரதேசமாக நெய்தல் மண் திகழ்ந்தது.

திங்கள், 27 மார்ச், 2017

எனக்கு இன்னோரு பேர் இருக்கு!

நெத்திலி மீன் பொரியல், அயிரை மீன்  குழம்பு, வஞ்சிரம் வறுவல், சுறாப் புட்டு, கருவாட்டு கூட்டு, இறால் தொக்கு, கெழுத்தி மசாலா... - என்.வி பிரியர்களுக்கு, படிக்கும் போதே ஜிலுஜிலுத்திருக்கும். இன்னும் நிறைய, நிறைய மீன் உணவுகள் சகாயமாக கிடைப்பதால், ஐந்து திணைகளில் அவர்களுக்குப் பிடித்தது நெய்தலாகவும் இருக்கலாம். மீன் உணவு என்பது நம்மூரில் தினமும் சாத்தியப்படாது. ஞாயிற்றுக்கிழமையானால், மார்க்கெட்டில் வந்திறங்கியிருப்பதை நல்லதாய் பார்த்து வாங்கி, பொரியல் போடலாமே தவிர, மற்ற நாட்களில் ஹோட்டலை விட்டால் வழியில்லை. கடல்புரத்துக்காரர்கள் அந்த விஷயத்தில் கொடுத்து வைத்தவர்கள். அவர்களுக்கு தினமும் உணவில் அது இருக்கும். இலக்கியங்களைப் புரட்டிப் பார்க்கையில் அவர்கள் வகை, வகையாக சமைத்துச் சாப்பிட்டிருக்கிற குழம்பு, வறுவல், பொரியல்களின் மெனு கார்டு பார்வைக்குக் கிடைக்கிறது.

வியாழன், 23 மார்ச், 2017

இரட்டை.... இ(ல்)லை!

பெரும்பான்மை பலத்துடன் தமிழகத்தை ஆளுகிற மிகப்பெரிய ஒரு கட்சி... அடுத்து நடக்கிற ஒரு இடைத்தேர்தலில் நிற்க முடியாத அவமானத்தை சந்திக்க நேரிடும் என்பது... ஆற்காடு பஞ்சாங்க கணிப்புகளுக்கும் அப்பாற்பட்ட ஆச்சர்யமே. இரட்டை இலை... இல்லை. மட்டுமல்ல. அதிமுக என்கிற கட்சியே இந்த இடைத்தேர்தலில் இருக்காது. ஆம். ‘அதிமுக’ என்கிற தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத அந்தப் பெயரை பயன்படுத்தவும் கூட தேர்தல் கமிஷன் தடை விதித்திருக்கிறது. தமிழக அரசியல் எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது??

புதன், 22 மார்ச், 2017

யவன ராணி... எந்த நாட்டுக்கு ராணி?

து மழைகாலம்தானே? தோட்டத்தில் செடி நடுவதற்காக குழி தோண்டுகிறீர்கள். கடப்பாரையை அழுத்தி இறக்குகிற போது, ‘டங்ங்ங்’ என்று ஒரு தினுசான சத்தம். கொஞ்சம் ஜாக்கிரதையாக சுற்றியிருக்கிற மண்ணை கொத்தி எடுத்து பார்த்தால்... ஒரு பானை. சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட பானை. அதன் தோற்றத்தை பார்க்கும் போது... பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்று தெரிகிறது. பொன்னா, மணியா...? பானைக்குள் என்ன இருக்கிறதோ... உடலில் லேசாக உற்சாக மின்சாரம் பரவுகிறதா? பாதுகாப்பாய் எடுத்துப் பார்த்தால்... ஓரிரு உலோகப் பொருட்கள் தவிர ஒன்றும் இல்லை. கோபத்தில், ஏமாற்றத்தில் உடைத்துத் தள்ளி விடாதீர்கள். நாம் கடந்து வந்த பல ஆயிரம், ஆயிரம் ஆண்டுகால வரலாறு, படு பத்திரமாக அந்தப் பானைக்குள் பதுங்கியிருக்கலாம்!

திங்கள், 20 மார்ச், 2017

ராஜா நோட்டீஸ்... (காப்பி)ரைட்டா?


ரவில் தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுகிறவர்களுக்கு அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தா, யுனானி... என கருத்துமுரணின்றி அத்தனை வித்தகர்களும் ஒரு மெடிஸின் சிபாரிசு செய்வார்களேயானால்... அது, ராஜா பாடல்கள். தொலைதூரப் பயணங்கள் செல்கிறவர்கள், வாகனங்களில் எரிபொருள் இருப்புக்கு அடுத்தபடியாக சரிபார்க்கிற விஷயம்... ராஜா பாடல்கள். காதலில் தோற்றவர்கள் தாடி வளர்த்தபடி ஆறுதல் பெறவும், வென்றவர்கள் கன்னம் மழித்து விட்டு கொண்டாடவும் பக்கபலமாக இருப்பது... ராஜா பாடல்கள். இந்தப்பட்டியல் இன்னும் மிக நீ.....ளமானது. பல கோடி மக்கள், தங்கள் நெருக்கடிகள் மிகுந்த தினப்பொழுதுகளை ராஜா பாடல்களுடன் இணைந்தே நகர்த்தி வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது சாமி சத்தியமான உண்மை. ரைட்டு. ராஜா பற்றி ஏதோ இப்போது பரபரப்பாக ஒரு சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறதாமே... அது என்னா?

சனி, 18 மார்ச், 2017

பாகுபலியை ‘சுட்டது’ யார்?

காலத்திற்கேற்ப அப்டேட் ஆகிக் கொள்வதில், தொழில்நுட்பக்காரர்களை விடவும், திருடர்கள் வல்லவர்கள். செல்போன் சாப்ட்வேர் அப்டேட் செய்வது போல, தொழில் சூட்சுமங்களை உடனுக்குடன் அப்டேட் செய்து, கலங்கடிப்பார்கள். மற்ற திருடர்கள் எப்படியோ... சினிமாத் திருடர்கள் செம! ஒரு காலத்தில் மலையாளத்தில் இருந்தும், ஹிந்தியில் இருந்தும் ‘சுட்டார்கள்’. குட்டு வெளியாகி கேவலப்படுகிற நிலைமை வந்ததும், வெளிமாநிலங்களில் கைவைக்கிற வேலையை விட்டு உகாண்டா, எத்தியோப்பியா நாடுகளில் இருந்து கதை, இசை ‘சுட்டார்கள்’. முகேஷ் நான்காவது தலைமுறையை அறிமுகப்படுத்தி விட்ட இந்தக்காலத்தில், திருடர்கள் துளியாவது மனக்கிலேசம் அடைந்திருக்கிறார்களா என்று பார்த்தால்... நெவர்!

புதன், 15 மார்ச், 2017

அகநானூறும்; ஆன்ட்ராய்ட் போனும்!

டலை காணவும், அதில் கால் நனைக்கவும் பிடிக்காதவர்களும் உண்டோ? ராமநாதபுரத்தில் இருந்து தீவு திசையில் செல்கையில், கருப்பு நிற தார்ச்சாலையின் இரு மருங்கும் திடீரென பளீர் வெள்ளை மணல் பரப்பு ஆக்கிரமிக்கும். அடுத்த சிறிது நேரத்தில் முகத்தில் மோதுகிற உப்புக்காற்றுடன் இடது, வலது இருபுறமும் நீல நிறக் கடல், அடுக்கடுக்கான அலைகளுடன் வந்து சுகம் விசாரித்து நிற்பதை வேடிக்கை பார்ப்பது எத்தனை சுகம்? இரவும், பகலும் உரசிக் கொள்கிற வேளைகளில் கடற்கரைகள்... சந்தேகமின்றி சொர்க்கங்கள். இல்லையா...? ஆனால், இந்தப் பரப்புகளில் நிலவுகிற பிரச்னைகள் அதிகம் வெளியில் தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும்... கடலில் மூழ்கியிருக்கிற பனிப்பாறையின் நுனிப்பரப்பு போல சிறிதளவே அறியமுடிகிறது. நெஞ்சில் கள்ளமில்லா, வெள்ளை மனிதர்கள் நிறைந்திருக்கிற இடம் நெய்தல்.

ஞாயிறு, 5 மார்ச், 2017

பெருமணல் உலகம்!

முதல் வரியை டச்சிங் டச்சிங் செய்வதற்கு முன்பாக ஒரு கேள்வி. படகோட்டி, மீனவ நண்பன், கடல் மீன்கள், அலைகள் ஓய்வதில்லை, கடலோரக் கவிதைகள், சுறா - எல்லாமே தமிழ் சினிமாக்கள் என்பதை கடந்து, இந்தப் படங்களுக்குள் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்ன? ‘What is your name?’ என்பது போல படு ஈஸியான கேள்வி. அத்தனையும் கடலும், கடல் சார்ந்த நெய்தல் நிலப்பரப்பில் உருவான சினிமாக்கள். நெய்தல் மண்ணில் படம் பிடிக்கப்பட்டிருந்தாலும் கூட, அந்த மண்ணையோ, இடர்களையும், புயல்களையும் கடந்து அங்கு வேர்பிடித்து நிற்கிற எளிய மனிதர்களின் வாழ்க்கையையோ எந்த சினிமாவும் இதுவரை நெருக்கத்தில் நமக்கு அறிமுகம் செய்ததில்லை. அதிகம் அறிந்திராத நெய்தல் மணல் பரப்பின் இன்னொரு பக்கத்துக்குள் துவங்குகிறது நமது பயணம்.

வெள்ளி, 3 மார்ச், 2017

இயற்கை மீது ஏனிந்த வன்மம் குருஜி...? - 1

டம்பு சுகமில்லாத நண்பரைப் பார்ப்பதற்காக கடந்தவாரம் மருத்துவமனை சென்றிருந்தேன். பிரபலமான மருத்துவமனை. மிகப் பெரிய அரசியல் தலைவரை சமீபத்தில் நல்லபடியாக ‘வழியனுப்பி’ வைத்ததே... அந்த மருத்துவமனை. நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, ‘‘த்ரீ ஸ்டார் பேக்கேஜ்ல ட்ரீட்மென்ட் எடுக்கிறேன் சார்...’’ என்றார். அதென்ன த்ரீ ஸ்டார் பேக்கேஜ்? மொத்தமாக ஒரு அமவுண்ட்டை அடித்து விட்டு, உள்ளே போய் கட்டிலேறிப் படுத்துக் கொண்டால் ஆச்சு. சாப்பாடு போட்டு, காபி கொடுத்து, டிவி காண்பித்து, இடையிடையே மருந்து, மாத்திரையும் புகட்டி... (75 நாள் முடிந்ததும்) இரவில் ஏற்றி அனுப்பி வைத்து விடுவார்கள். இதுதான் *** பேக்கேஜ்! இன்றைக்கு கார்ப்பரேட் சாமியார்கள் பலரும் நடத்துகிற ஆஸ்ரமங்களுக்கும், மேற்படி மருத்துவமனைகளுக்கும் பெரிதாக யாதொரு வித்தியாசமும் என்னால் காண இயலவில்லை என்பதே... இந்த கட்டுரை உருவாகக் காரணமான சிறு பொறி!

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

அனுஷ்கா... இலையா; தளிரா?

ச்சின், ரோஹித், கம்பீர்... வர்ஷா, தீப்தி, அனுஷ்கா - ஒரு காலத்தில் மும்பை எக்ஸ்பிரஸில் ஏறி வடக்காக பயணம் செய்கிற போதுதான் இதுமாதிரி பெயர்களெல்லாம் காதில் படும். இப்படியும் பெயரா என ஆச்சர்யமாக இருக்கும். அப்புறம் கிரிக்கெட்டும், சினிமாவும் இந்தப் பெயர்களை அறிமுகம் செய்தன. இப்போதெல்லாம், ‘ஏலெய் சச்சின்... இங்கன வால!’ என்று நம்ம வயக்காடு, வரப்புகளில் கூட கூவி அழைக்கப்படும் பெயர்களாக இவை மாறி விட்டன. ஏன்? வடக்கில் இருந்து இறக்குமதி செய்கிற அளவுக்கு தமிழில் பெயர்களுக்கு எப்படி ஏற்பட்டது பற்றாக்குறை?

வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

ஆர்தர் காட்டனும்... ஒரு அணைக்கட்டும்!

சில ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் வேடிக்கையாக இருக்கும். சென்னைக்கு மிக, மிக, மிக அருகே... என்று ஒரு கொக்கி போட்டு கவனத்தை இழுப்பார்கள். அடுத்த ஷாட்டில், திருப்பரங்குன்றத்தை காட்டி அங்கு பிளாட் போட்டிருக்கிறோம் என்று கலர் கொடி கட்டிய இடத்தைக் காட்டுவார்கள். விசாரித்தால், ‘ஜஸ்ட் ட்வென்டி மினிட்ஸ் ஸார் - விமானம் பிடித்து வந்தால்...’ என்று சொல்லக்கூடும். ஆனால், பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்... நாம் இங்கு பேசப்போவது ரியல் எஸ்டேட் மேட்டர் பற்றி அல்ல. ஆதியிலேயே நம்மாட்கள் பிளாட் போடக் கற்றுக் கொண்ட / கற்றுக் கொடுத்த விதம் பற்றி!

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

நான் வந்துட்டேன்னு சொல்லு...

‘‘ச்சே... ச்சே... என்னங்க இது காட்டுமிராண்டித்தனம்? வாயில்லா பிராணியைப் போய் இந்தப் பாடு படுத்திகிட்டு...’’ என்று, ஏசி அறைக்குள் பத்திரமாக உட்கார்ந்து சதுரங்கம் விளையாடுகிற மிஸ்டர் அண்ட் மிஸர்ஸ் பீட்டாக்களுக்கு தெரியாது... இது எத்தனை ரிஸ்க்கான விளையாட்டு என்று! ஆனால், நம்மாட்களுக்கு ரிஸ்க் எடுக்கறது... ரஸ்க் எடுக்கிற மாதிரித்தான? அத்தனை தடையும் உடைத்து, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... என்கிறது ஜல்லியாட்டம். அவனியாபுரம் (பிப்ரவரி 5), பாலமேடு (பிப்ரவரி 9), அலங்காநல்லூர் (பிப்ரவரி 10) என்று வரிசை கட்டி அடித்த ஜல்.. ஜல்... ஜல்... ஜல்லிக்கட்டு களத்தில் இருந்து, காளைகளின் வாய்ஸ். ‘பேசும் படம்’ பகுதிக்காக... உங்கள் பூனைக்குட்டீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

சுந்தரி நீயும்... சுந்தரன் ஞானும்!

திகளை எல்லாம் இன்றைக்கு நாம் கொஞ்சம் பெரிய சைஸ் சாக்கடைகளாக மாற்றி விட்டாலும் கூட, இயல்பில் அவை மிக அழகானவை. அவற்றின் கரைகளில்தான் நாகரிகம் பிறந்து, வளர்ந்து மனிதனை, மனிதனாக மாற்றி அழகுபடுத்தியிருக்கிறது. மருத நிலம் என்பது நதிக்கரைகளில் அமைந்தது என்பதால், மனித வரலாற்றின் முக்கிய காலகட்டம் இந்த நிலப்பரப்பிலேயே பதிவாகியிருக்கிறது. உலகின் சகல நதிக்கரை நாகரிகங்களையும் புரட்டிப் பாருங்கள்... கலையும், பண்பாடும், கலாச்சாரமும் அதன் உச்சத்தைத் தொட்டது அந்த வெளியில்தான். மற்ற திசைகளுடன் ஒப்பிடும் போது, நமது மருத மண்ணுக்கு கூடுதல் பெருமை இருக்கிறது. வேறெங்கும் விட இங்குதான் எக்கச்சக்க இலக்கியங்கள், படைப்புகள் தோன்றி நம்மொழிக்கு நிலையான புகழ் சேர்த்திருக்கின்றன. கலையும், இலக்கியமும் மருதத்தில் வளர அப்படி என்னவாம் காரணம்?

சனி, 4 பிப்ரவரி, 2017

ஊரு விட்டு, ஊரு வந்து... காதல் கீதல் பண்ணாதீங்க!

 டல் என்கிற ஒரு வார்த்தை தமிழில் இருக்கிறது தெரியும்தானே? படித்து அறிவதை விட, உணர்ந்து அறிந்தால் மட்டுமே இந்த வார்த்தைக்கான அர்த்தத்தை முழுதாகப் புரிந்து கொள்ளமுடியும். காதலர்களும், புதிதாக கல்யாணம் முடித்தவர்களும் ஊடல் பற்றி நன்றாகவே தெரிந்து வைத்திருப்பார்கள். ஆசையாகப் பேச அருகே போகும் போது, முகத்தை, உதட்டை சுழித்து, பழித்துக் காட்டிய படி உங்கள் ஆள், அந்தப் பக்கம் நகர்ந்தால் (பொய்க் கோவமாம்!) அதற்குப் பெயர் ஊடல். சரியாவதற்கு, சிறிதுநேரம் பிடிக்கும். வயலும் வயல் சார்ந்த மருத நிலத்துக்கும், இந்த ஊடலுக்கும் என்ன சம்பந்தம்?


ஞாயிறு, 29 ஜனவரி, 2017

டைம் மெஷின்... பயணம் போலாமா?

குறிஞ்சி நிலத்தில் துவங்கிய நமது திணை வழிப்பயணம் முல்லை கடந்து இப்போது மருதம் வந்தடைகிறது. ஒரு வகையில் பார்த்தால் இது டைம் மெஷின் எனப்படுகிற கால இயந்திர வழிப்பயணத்துக்கு ஒப்பானது. குறிஞ்சி என்பது ஆதம், ஏவாள் காலத்து ஆதி நிலம். எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாத ஒரு வாழ்க்கையை மனிதனுக்கு அந்த நிலம் வழங்கியது. மனிதன் தன்னை மனிதனாக உணர்ந்தது முல்லை நிலத்தில். வாழ்க்கை வாழ சில சமரசங்கள் தேவை என்பதை முல்லை அவனுக்கு கற்றுக் கொடுத்தது. மருதம் இன்னும் நமக்கு நெருக்கமானது. கருப்பு வெள்ளையில் இருக்கிற பழைய குடும்பப் புகைப்படங்களை பார்க்கிற உணர்வு, இந்த நிலத்தைக் கடக்கையில் மனதுக்குள் வந்து போவதைத் தவிர்க்க முடியாது. நமக்கு நெருக்கமான ஒரு நிலத்தை நெருங்கியிருக்கிறோம். வாருங்கள்... சுங்கச்சாவடிகள் எதுவுமில்லை. சுதந்திரமாக உள் நுழையலாம்!

வெள்ளி, 27 ஜனவரி, 2017

பிதாவே... பீட்டாவை மன்னியும்!

‘போராட்டம்... போராட்டம்....’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தெருமுனையில் உரத்த குரலில் பெட்ரோல், டீசலுக்காக நடத்துகிற போராட்டமே... இந்த வாட்ஸ்அப் காலத்து இளைஞர்கள் பார்த்திருக்க சாத்தியமுள்ள மிகப் பெரிய போராட்டம். ‘இந்தி எதிர்ப்பு போராட்டத்துல கலந்துகிட்டவராம் எங்க தாத்தா...’ என்று சிலர் பழம் பெருமை பேசலாம். ‘அதெல்லாம் இன்னா போராட்டம். இந்தா புடி, செம்ம போராட்டம்....’ என்று ஜல்லிக்கட்டுக்காக மெரினா துவங்கி, திருச்சி மார்க்கமாக, மதுரையில் மையம் கொண்டு, கன்னியாகுமரி சன்ரைஸ் கடற்கரை வரைக்கும் சிறுவர் - சிறுமியர், மாணவர் - மாணவியர், இளைஞர் - இளைஞிகள், இல்லத்தரசிகள் - அரசர்கள், பெரியவர்கள்... அத்தனை பேரும் போராட்டம் நடத்தி ஹாலிவுட் ரேஞ்சுக்கு பிரம்ம்ம்ம்ம்ம்மாண்டமாக மிரட்டி, சாதித்து விட்டார்கள் (டிராஜடி கிளைமாக்ஸ் தான் சங்கடம்). சும்மா இருக்குமா ‘பூனைக்குட்டி’? ‘பேசும் படம்’ பகுதிக்காக, கிளம்பி விட்டது கேமரா வலம்.

ல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தேவாலயத்தின் முன் மண்டியிட்டு... மனதார வேண்டுகிறது (??!!) இந்த ‘கரும்புள்ளி - செம்புள்ளி’ காளை. இடம்: சாணார்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்.

வெள்ளி, 20 ஜனவரி, 2017

வினைகள் தீர்ப்பவர் யாரு?

ரண்டு காட்சிகளை இப்போது கற்பனை செய்து கொள்ளுங்கள்.
காட்சி 1:
‘முகூர்த்தத்துக்கு நேரமாச்சு. மண்டபத்துக்கு இப்ப கிளம்புனாத்தான் சரியா இருக்கும். கிளம்புங்க... கிளம்புங்க...’ என்று வீட்டில் இருக்கும் பெரிய மனிதர்கள் குரல் கொடுக்கிறார்கள். நண்பர்கள், உறவினர்கள் புடை சூழ, பட்டு வேட்டி சட்டை பளபளக்க, பலப்பல கனவுகளுடன்  மாப்பிள்ளை சார் மண்டபம் செல்வதற்காக வீட்டில் இருந்து காலெடுத்து வெளியே வைக்கிறார். ‘‘போடா.. உம்மூஞ்சில எம் பீச்சாங்கைய வெக்க! நீயெல்லாம் என்னத்த கிழிக்கப் போற? இனிமே உனக்கு ஏழரைதாண்டி...’’ - டாஸ்மாக் அரவணைப்பில் இருந்து இன்னும் விடுபடாத ‘குடிமகன்’ யாருடனோ செல்போனில் பேசியபடி போகிறார். இந்த வார்த்தைகளை கேட்டால்... மாப்பிள்ளை சாருக்கு மனதுக்கு எப்படி இருக்கும்?
காட்சி 2:
‘‘சபாஷ். வாழ்த்துகள். எல்லாமே நல்லபடியா இருக்கும்பா. உன் கஷ்டமெல்லாம் இனி ஐஸா கரைஞ்சி போகும்டா...’’ என்று செல்போனில் பேசியபடியே ஒருவர் கிராஸாகிறார். இந்த வார்த்தைகளை கேட்கும்போது மாப்பிள்ளை சாருக்கு எப்படி இருக்கும்?

வியாழன், 12 ஜனவரி, 2017

நானும்... ரவுடிதான்!

லையில் வசிப்பதை விடவும், மலையடிவாரத்தில் வசிப்பது இன்னும் சொகுசானது. நாகர்கோவில், கோயம்புத்தூர், தேனி மாவட்டத்து மக்களைக் கேட்டால், அடடா... அனுபவித்துச் சொல்லுவார்கள். காம்பவுண்டு சுவர் கட்டி வைத்தது போல மலைத்தொடர், அருவிகள், காட்டாறுகள், வீட்டு வாசலுக்கே தேடி வரும் கால்வாய் நீர், உறைக்காத வெயில், மென் குளிர்காற்று, டென்ஷன் போக்கி, மனதை இலகுவாக்குகிற வல்லமை கொண்ட பசும் புல்வெளிகள்... அடடா, அழகுதான் போங்க! சினிமா கேமராக்களுக்கு செம தீனி இங்கிருக்கிறது. குறிஞ்சி போல நடுக்குகிற குளிர் இல்லை. மிரட்டுகிற விலங்குகள் இல்லை. இயற்கை அழகு நிறைத்து பதுக்கி வைத்திருக்கிற முல்லை நிலப்பரப்புக்குள் இப்போது நாம் நுழையப் போகிறோம்.

வெள்ளி, 6 ஜனவரி, 2017

விரு விரு மாண்டி... விருமாண்டி!

ல்லிக்கட்டு கூடவே கூடாது என்று நாட்டின் வடபுலத்தில் இருந்து நிறைய, நிறைய குரல்கள் பெரும் பெரும் புள்ளிகளிடம் இருந்து வருகின்றன. காளைகளுக்காக கண்ணீர் வடிப்பவர்கள் எண்ணிக்கை ஒரே இரவில் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இவர்களது திடீர் பாசம், அலங்காநல்லூர் பக்கம் மேய்ந்து கொண்டிருக்கிற பொலி காளைகளுக்கு தீராத விக்கலை ஏற்படுத்தியிருக்கலாம். எதனால் இந்தப் பாசம்? எலி ‘ஏதோ மாதிரி’ ஓடுகிறது என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கும்தானே? இவர்களது காளைப் பாசத்துக்கு பின்னணியில் என்னதான் இருக்கிறது? ‘ஸார்... முல்லைத் திணை பற்றி பேசிகிட்டிருந்தோம். ஜல்லிக்கட்டுக்கு டிராக் மாறுதே...’ - கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான காமயக்கவுண்டன்பட்டியில் இருந்து வாசகி தொடர்பில் வந்தார். ‘‘ஜல்லிக்கட்டு என்று இன்றைக்கும், ஏறுதழுவுதல் என்று அன்றைக்கும் அழைக்கப்பட்ட இந்த வீர விளையாட்டு பிறந்து, வளர்ந்து, திசைகளெங்கும் புகழ் சேர்த்த இடம், இந்த முல்லை நிலப்பரப்பு சகோதரி. இன்றைக்கு சதியின் பிடியில் சிக்கி நிற்கிற அந்த முல்லை விளைச்சலை... இங்கு பேசாது மவுனித்துக் கடந்தால்... உலகம் வியக்கிற நம் முல்லை பண்பாடு பாலையாக திரிந்து விடாதா...?

ஞாயிறு, 1 ஜனவரி, 2017

நாய் வாலை நிமிர்த்த முடியாது; நம்மாள்களை திருத்தமுடியாது


‘‘அடப்பாவிகளா... கொஞ்சமா கண்ணசந்த நேரமா பார்த்து, கோவணக் கொடி கட்டின மாதிரி, உங்கக் கட்சிக் கொடியக் கொண்டு வந்து கட்டிட்டீங்களேடா...? இன்னும் கொஞ்சம் அசந்திருந்தா... முதுகுல பெயிண்ட் அடிச்சி, உங்க சின்னத்தையும் வரைஞ்சு விட்டுட்டுப் போயிருப்பீங்களேடா! ஊர், உலகத்துல எத்தனையோ இடம் இருக்க... போயும், போயும் இங்க வந்து பிறந்தேன் பாருங்க... எல்லாம் என் தலையெழுத்துடா...’’ - ‘நாய்ப் பொழப்பு பொழைக்க வேண்டியிருக்கிறதே...’ என எண்ணி நடுரோட்டில் நின்றபடி Feel பண்ணுகிறது இந்த தென் தமிழக நகரத்து நாய் (ஊர் வேணாம் சார்... வம்பு!).

பக்கம், பக்கமாக எழுதித் தள்ளியும் கொண்ட வர முடியாத feelingஐ, செல்போன் கேமராவில் எடுத்த ஒரு சிங்கிள் போட்டோ கூட்டிக் கொண்டு வந்து விடுகிறதில்லையா? போட்டோவுக்கு இருக்கிற மகத்துவம் அது. ‘பூனைக்குட்டி’யின் இந்த ‘பேசும்படம்’ முழுக்க, முழுக்க அனிமல் ஸ்பெஷல்!

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...