‘வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம், பிளாஸ்டிக் பொருள் தவிர்ப்போம்...’ என்று அரசாங்கமும், தன்னார்வ அமைப்புகளும் கரடியாகக் கத்திக் கொண்டிருக்கின்றன. எதற்காக? சுற்றுச்சூழல் சீர்கேடு தவிர்ப்பதற்காக! சுற்றுச்சூழலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை எழுதி வைத்து, கற்றுக் கொடுத்த உலகின் ஒரே நாகரிகம், தமிழ் நாகரிகம் என்று போன வாரம் பார்த்தோமில்லையா? ‘அப்படினா, மத்த நாகரிகமெல்லாம் கண்ணை மூடிகிட்டு இருந்துச்சா சார்?’ என்று மிகத் தேர்ந்த ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார் கம்பம் பக்கத்தில் இருக்கிற சுருளிபட்டி வாசகி ஜனனி.
வெள்ளி, 28 அக்டோபர், 2016
திங்கள், 24 அக்டோபர், 2016
மலரே... குறிஞ்சி மலரே...!
உருளைக்கிழங்கு சிப்ஸ் தின்று விட்டு வீசி எறிந்த பிளாஸ்டிக் குப்பைகளும், தேயிலைச்செடி போடுவதற்காக மலைச்சரிவுகளில் நம்மவர்களால் நாசமாக்கப்பட்ட பசுஞ்சோலைகளும்... ஜூராஸிக் பார்க் டைனோசர்கள் போல இப்படி திரும்பி வந்து தாக்கும் என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம். எல் நினோ, கிரீன் ஹவுஸ் எஃபெக்ட்... என்று சுற்றுச்சூழலை நாம் எக்கச்சக்கமாய் கெடுத்து வைக்க... பெருமழையாகவும், கொடும் வறட்சியாகவும் அது தனது ஆட்டத்தை இப்போது ஆரம்பித்திருக்கிறது. என்ன செய்யலாம், எப்படித் தப்பிக்கலாம் என்று உலகம் இன்று கையைப் பிசைந்து நிற்கிறது.
ஞாயிறு, 16 அக்டோபர், 2016
திங்கள், 10 அக்டோபர், 2016
கல்லை மட்டும் கண்டால்....
‘சிந்து சமவெளி... நம்ம ஏரியா என்று எழுதறது இருக்கட்டும். அதுக்கு நீங்க கொடுக்கிற ஆதாரம் பத்தாது சார். இன்னும் நிறைய எவிடென்ஸ், அதுவும் ஆர்க்கியாலஜிக்கல் எவிடென்ஸ் வேணும். அப்பத்தான் நம்ப முடியும்!’ என்று போடியில் இருந்து சூசை ஜெபராஜ் தொடர்பில் வந்தார். அவருக்கு, நமது பதில் இதுதான்: ‘ஒன்றல்ல ஜெபராஜ் சார். இன்னும் நூறு வாரம் எழுதுகிற அளவுக்கு ஆதாரம் இருக்கிறது. அவ்வளவு எழுத அவகாசம் இல்லாதபடியால், ஒரு பானை எவிடென்ஸூக்கு பதமாக, இங்கே ஒரு எவிடென்ஸ்!’.
வியாழன், 6 அக்டோபர், 2016
சிந்து சமவெளி... நம்ம ஏரியா?
‘கர்ர்... கர்ர்... கெர்ர்க்.... கெர்ர்ர்ரக்..’ - மழைகாலங்களில் இந்த டார்ச்சர் சத்தம் கேட்காமல் தப்பித்திருக்க முடியாது - தவளை. நிலத்திலும், நீரிலும் செல்லும் ஆற்றல் கொண்ட வாகனத்தை ஹோவர்கிராப்ட் (Hovercraft) என்று சொல்கிறோம், இல்லையா? தவளை என்பது ஒரு ஹோவர் கிராப்ட் மாடல் உயிரினம். தண்ணீரில் எவ்வளவு நேரமும் முங்கு நீச்சல் அடித்து கிடையாய் கிடக்கும். ‘ஜலதோஷம் பிடிச்சிக்கப் போகுது. வெளில வர்றியா... முதுகில ரெண்டு வைக்கவா...’ என்று அம்மா கத்தினால், தண்ணீரை விட்டு தரைக்கு வந்து, அங்கும் செம டேரா போடும். இந்தத் தவளைக்கு அரி, நுணலை, பேகம், நீகம், தேரை என்று தமிழ் இலக்கியங்களில் பெயர் இருக்கிறதாக்கும்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)