திங்கள், 26 செப்டம்பர், 2016

அஞ்சலி.. அஞ்சலி... அஞ்சலிகை!

‘இந்தக் கொசுத் தொந்தரவு தாங்கலைடா சாமீய்...’ என்று ‘சிறந்த இரவு’ பயன்படுத்துகிறீர்களா? கொசுப் பிடுங்கல் உங்களையும், என்னையும் மட்டும் அல்ல. நம்ம தாத்தாவுக்கும், தாத்தாவுக்கும், தாத்தாக்களையும் கூட பாடாய்படுத்தி இருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது. பிறகு...? தமிழ் மொழியில் கொசுவுக்கு அத்தனை வித, விதமான பெயர்கள் இருக்கிறதாக்கும்.

ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

அப்பாலே போ சாத்தானே...

ங்களுக்கு கற்பனை செய்யப் பிடிக்கும்தானே? இப்போது நான் விளக்குகிற காட்சியை மனதில் பிரமாண்டமாக... பாகுபலி கிராபிக்ஸ் போல படு பிரமாண்டமாக கற்பனை செய்து பாருங்கள். அலையடிக்கிற நீலக்கடல். அந்தி சாய்கிற மாலைப்பொழுது. காற்றுக்கு படபடக்கிற பாய்மரங்களில் இருந்து எழுகிற சடசடப்புச் சத்தம். பொங்கி எழுந்து தாழ்கிற கடல் நீரில் நிலை கொண்டு நிற்க இயலாது, மேலும் கீழுமாகவும், இடதும், வலதுமாகவும் தள்ளாடும் மரக்கலங்கள். அதிலிருந்து சரக்கு பெட்டகங்களை இறக்கவும், ஏற்றவுமாக இருக்கிற பல ஆயிரம் உழைப்புக்காரர்கள். கரையில் இருந்து கண்காணிக்கிற பெருமுதல் காரர்கள். அக்கம்பக்கம் இருக்கிற அத்தனை கடல்பறவைகளும் விதவிதமாக ஒலி எழுப்பியவாறே சுற்றி வருகிற ஒரு இடம்... கடல் வணிகம் நடக்கிற பண்டை தமிழ் நகரம். ஜனவரி என்றும், பிப்ரவரி என்றும் காலத்தை பகுத்தறியப் பழகாத பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு நாள்....

சனி, 10 செப்டம்பர், 2016

குலிங்கம்... புலிங்கம்... காணவே காணோமே?

‘தெக்கால போன வெள்ளி, வடக்க வந்தா மழை...’ - கிராமத்துப் பக்கம் போகும் போது, காது வளர்த்த பாட்டி, வேப்ப மரத்தடியில் வெற்றிலை இடித்துக் கொண்டே சொல்லக் கேட்டிருக்கலாம். நிஜமாகவே மழையும் கொட்டித் தீர்க்கும். சென்னை, கல்லூரிச் சாலையில் இருக்கிற Meteorology டிபார்ட்மென்ட் காரர்கள் செய்கிற வேலையை, மரத்தடியில் குத்த வைத்த படி பாட்டி செய்கிறார். பாட்டி கல்லூரிக்குப் போய் கட்டடிக்காமல் Natural Science எனப்படுகிற Astronomy படித்திருப்பதற்கான சாத்தியங்கள் குறைவு. எனில், அவருக்கு எப்படி இத்தனை அசாத்தியமான சயின்ஸ் நாலெட்ஜ்?

சனி, 3 செப்டம்பர், 2016

பொன் கிடைக்கும்... புதன் கிடைக்குமா?

‘உஷ்ஷ்ஷ்... அப்பாடா.... என்னா வெயில் அடிக்குதுபா. ஆம்லேட் போடுறதுக்கு அடுப்பே தேவையில்ல போல இருக்கே!’ என்று சட்டை காலரை பின்னுக்கு இழுத்து விட்டபடியே வியர்வை விட்டுக் கொண்டிருக்கிறீர்களா? இயற்கையை கொஞ்சமும் சளைக்காமல், முடிந்தளவுக்கு சீரழித்துக் கொண்டே....யிருந்தால், அடிக்காதா பின்னே...? ஆனாலும் நண்பர்களே... வெயிலோ, மழையோ, காற்றோ, பனியோ... தங்களுக்கான ஒழுங்கமைப்பை இன்றைக்கு வரைக்கும் துளி மீறாமல் மிகச் சரியாக வந்து அட்டென்டன்ஸ் போட்டுக் கொண்டிருக்கின்றன. பாருங்கள். மே மாதத்தில் பனி வாட்டியிருக்கிறதா, இல்லை... டிசம்பர் மாதத்தில்தான் அக்கினி அடித்திருக்கிறதா? என்னதான் மரங்களை வெட்டினாலும், மலைகளை பெயர்த்தாலும், இயற்கை இன்னும் மகா பொறுமை காப்பதன் அடையாளங்கள் இவை.

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...