வியாழன், 21 ஜூலை, 2016

‘ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம்...’ - தப்பாச்சே!

‘‘சபாஷ் மச்சான். கல்யாண இன்விடேஷன் கிடைச்சது. உன் கல்யாணத்துக்கு 8 ஜிபி இன்டர்னல் மெமரி, 1 ஜிபி ரேம் ஸ்பீடோட அட்டகாசமான ஆன்ட்ராய்ட் போன் பரிசு தரப்போறேன்டா...’’ என்று ஊரில் இருந்து நண்பன் பேசினால், புளகாங்கிதம் அடைந்து விடவேண்டாம். அந்த போன், இருநூற்று ஐம்பத்தொரு ரூபாய் போனாகவும் இருக்கலாம். அது இருக்கட்டும். இந்த வாக்கியத்தில் சபாஷ், இன்விடேஷன், ஆன்ட்ராய்ட், ரேம், போன் மாதிரியான சில சொற்கள் தமிழில்லை என்று நமக்குத் தெரியும். கல்யாணம் என்பதும் கூட தமிழ் சொல் அல்ல என்று சொன்னால், ஆச்சர்யப்படுவீர்கள். திருமணம் என்பதே சரியான பதம். ‘ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்...’ என்று பாட்டு படிக்கிறீர்களே... அது தப்பு. வார்த்தை என்பது வடமொழி. சொல் என்பதே சரியான சொல். தமிழ்ச் சொல். ரைட்டா?

சனி, 16 ஜூலை, 2016

புது ‘வெள்ளி’ மழை... இங்கு பொழிகின்றது!

காதலுக்கு அப்படி ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. சங்க இலக்கியங்களில் வருகிற தலைவன், தலைவி காதல், திருக்குறளில் காதலியின் extraordinary கவலை எல்லாம் கடந்தவாரம் படித்ததும் நிறைய நண்பர்களுக்கு மெய்சிலிர்த்திருக்கிறது. ரொம்பப் பிரபலமான இந்தக் குறளை பார்க்காது போனால், தெய்வப்புலவரின் சாபத்துக்கு ஆளாக நேரிடலாம்.
‘‘யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்’’ 
- இந்தக் குறளை, காட்சி பிம்பமாக லட்சம் சினிமாக்களிலாவது பார்த்திருப்பீர்கள். ஏன், சொந்த வாழ்க்கையிலேயே அனுபவம் வாய்த்திருக்கப் பெற்றிருக்கலாம். ‘‘நான் பார்க்கிற போது, நிலத்தைப் பார்க்கிறாள். நான் வேறு பக்கம் பார்க்கிற போது, மின்னல் போல ஒரு சிங்கிள் செகண்ட் என்னைப் பார்த்து, தனக்குள் மெல்லச் சிரித்து மகிழ்கிறாள்...’’
திருக்குறள் பற்றி எழுத இன்னும் லட்சம் பக்கத்துக்கு மேட்டர் இருக்கிறது. ஆனால், ஊரில் இருக்கிற வருத்தப்படாத வாலிபர் சங்கங்களை எல்லாம் கலைத்து விட்டு, வள்ளுவப் பேராசான் சங்கம் ஆரம்பித்து நம்மவர்கள் டார்ச்சர் படுத்தி விடுவார்கள் என்பதால்... போதும்!

சனி, 9 ஜூலை, 2016

வாழ வைக்கும் காதலுக்கு ஜே!

‘‘நிலத்தை பிரிச்சி வெச்சிருக்காங்க. நீர்நிலைகளை பகுத்து வெச்சிருக்காங்க. அறிவியல், வானவியல் எல்லாம் அத்துபடி. கணித சூத்திரங்கள்ல கில்லாடி. நீங்க எழுதறதை எல்லாம் படிச்சா... உலகத்துக்கே நாகரீகம் கத்துக் கொடுத்தது தமிழ் இனம் தான்னு சொல்லுவிங்க போல இருக்கே சார்...?’’ - பழநி பக்கம் உள்ள கல்லூரியில் பொறியியல் தொழில்நுட்பம் படிக்கிற வாசகி கொக்கி போட்டார். நான் சொல்ல வில்லை மேடம். ஆனால், வெளிநாட்டு தமிழறிஞர்கள் நிறையப் பேர் அப்படித்தான் சத்தியமடிக்கிறார்கள். உலக நாகரீகத்தில் பெரும்பங்கு விஷயம், இந்த மண்ணில் இருந்து... தமிழ் மண்ணில் இருந்து சுவீகரிக்கப்பட்டிருக்கலாம் என்று!

திங்கள், 4 ஜூலை, 2016

சுவாதியும்... சாதியும்!

முகநூலில் நட்புக்கான கோரிக்கை அனுப்புவது. சேர்த்ததும், புரொஃபைல் போட்டோவை பார்த்து விட்டு, ‘தலையில அந்த மஞ்சக் கலர் க்ளிப் சூப்பர். பூசணிக்கா சுத்திப் போடச் சொல்லுங்க...’ என்று பனிக்கட்டி வைப்பது. நேரில் சந்திக்கிற வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு, ‘அ - நான்கு’ பேப்பரில் மடக்கி எழுதி, காதல் கடுதாசி கொடுப்பது. ‘போடா பொறுக்கி....’ என்று மறுத்துத் திட்டினால்... அரிவாளை எடுத்து ஒரே போடாக போட்டு விட்டு டிரெய்ன் பிடித்து எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்! - எம்மாம் பெரிய தப்பு? ‘இந்தக் காலிப் பயலுவல எல்லாம் சும்மா விடக்கூடாதுங்கோ...’ என்று வாட்ஸ்அப், முகநூல்களில் (மட்டும்) தமிழகம் கொந்தளிக்கிறது. தப்புத்தான். சும்மா விடக்கூடாதுதான். சும்மா விட்டால், கடையில் பேனா வாங்குகிறது போல ஆளாளுக்கு அரிவாள் வாங்கிக் கொண்டு கிளம்பி விடுவார்கள். கழுத்தறுத்தான் பையன் விவகாரத்தை ஒரு கோடிப் பேருக்கும் மேல் பேசி, எழுதி, விவாதித்து விட்டார்கள்... என்பதால், அவனை விட்டு விடலாம். அதுக்கும் மேல போலாம். ரைட்டா?

ஞாயிறு, 3 ஜூலை, 2016

அழகிய... ‘கிளி’யோபாட்ரா!

ழகான பெண்களைப் பற்றி கவித... கவித எழுதுகிற பொலவர்ஸ், தங்கள் கவிதைகளில் மானே, தேனே, மயிலே, குயிலேவுக்கு அடுத்தபடியாக, அதிகம் பயன்படுத்துகிற பறவையின் பெயர் - கிளி. ‘ச்சும்மா கிளி மாதிரி கொஞ்சுதுப்பா...’ என்று பேசக் கேட்டிருப்பீர்கள்; அல்லது, பேசியிருப்பீர்கள். இல்லையா? நிஜம்தான். பார்ப்பதற்கும் சரி; கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவதைக் கேட்பதற்கும் சரி... கிளி - பறவையினத்தின் ‘கிளி’யோபாட்ரா!

வெள்ளி, 1 ஜூலை, 2016

ஒரு செய்தியாளனின்... கடைசிச் செய்தி!

ரணம் என்பது புதிரான, அரிய, ஆச்சர்யப்படத்தக்க, எங்கும் காணப்படாத, இதற்கு முன் நிகழ்ந்திராத விஷயம் அல்ல. அது இயல்பானது. நீக்கமற நிறைந்திருக்கிறது. பூமியில் இருக்கிற உயிரினங்கள் ஒவ்வொன்றையும் அது காற்றைப் போல கடந்து / தழுவிச் செல்கிறது; சென்று கொண்டிருக்கிறது. ஆனாலும் கூட... மரணம், தனக்குள் ஒரு மாபெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் நிறைத்து பதுக்கி வைத்திருக்கிறது. மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாத, சகித்துக் கொள்ளமுடியாத தருணங்களும் இருக்கிறது. அது வந்து சந்திக்கிறதா; அதைச் சென்று சந்திக்கிறார்களா என்பதைப் பொறுத்து, வேதனையின் வீரியம் மதிப்பிடப்படுகிறது. 49 வயது என்பது மரணத்துக்கான பொழுதல்ல. என்பதால்... பத்திரிகை செய்திகளுடன் வாழ்க்கை நடத்திய ஒருவரின் மரணம், கூடுதலான விசனத்தை விதைத்து நிற்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...