சனி, 30 ஏப்ரல், 2016

ஒரு அகராதியும், சில யானைகளும்!

த்து நாள் குளிக்காமல், பவுடர் மட்டுமே பூசிக் கொண்டு திரிகிற ஆட்களை நாம் அடிக்கடி கிராஸ் பண்ணியிருப்போம். பல நேரம் அவர்களிடம் பவுடர் வாசனை பரிதாபமாக தோற்றுப் போயிருக்கும். அப்படிப்பட்ட ஆசாமிகள் கற்றுக் கொள்ள, பூனைகள் சில பாடங்கள் வைத்திருக்கின்றன. விலங்கு வகையறாக்களில் ‘சுத்தம் சோறு போடும்’ பழமொழியை மிகச் சரியாக பின்பற்றுபவை பூனைகள். ஒரு நிமிடம் சும்மா இருக்காது, நாக்கு கொண்டு உடல் முழுக்க திரும்பத் திரும்ப நக்கி சுத்தம் செய்யும் அழகை நீங்களே பார்த்திருக்கலாம்.

ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

சுசுந்தரி... கண்ணால் ஒரு சேதி...!

லியுடன், பூனைக்கு என்னதான் பிரச்னை? வாய்க்கால், வரப்பு தகராறா; குடுக்கல், வாங்கலில் குளறுபடியா... இல்லை, ‘கவுரவக் காதல்’ மேட்டர் ஏதேனும் இருக்கிறதா? எலியை கண்ணில் பார்த்து விட்டால், பசி இல்லாவிட்டாலும் கூட மீசை துடிக்க பாய்ந்து வருகிற பூனை, கவ்விக் கபளிகரம் செய்வது ஏன்? டிவியில் மட்டும்தான் டாம் தோற்று, ஜெர்ரி ஜெயிக்கிறதே தவிர, நிஜத்தில் இல்லை. ஆனாலும், எலி மேல் நமக்கு அத்தனை இரக்கம் வருவதில்லை. ஏன்? வீட்டில் செம டார்ச்சர் செய்து விடுகிறதில்லையா? ஒரு பொருளை வெளியில் வைக்க விடுகிறதா என்ன? புதினா இலைகளை கொஞ்சம் பிய்த்துப் போட்டால், முன்னங்கால்களை தலைக்கு மேலாக உயர்த்தி, அந்த திசைக்கே எலி ஒரு கும்பிடு போடும் என்று பாட்டி மருத்துவம் சொல்கிறது. எல்லாம் சரி. எலியை பற்றி தமிழ் என்ன சொல்கிறது?

வியாழன், 14 ஏப்ரல், 2016

தமிழ் வளர்த்த அமெரிக்க டாக்டர்!

ராமேஸ்வரம், திண்டுக்கல் பகுதிகளில் இருந்து வந்த இரு கடிதங்கள், இரு கேள்விகளை நம்முன் வைத்தன.
1) தமிழ் வளர்த்த வெளிநாட்டு அறிஞர்கள் பற்றி வார வாரம் வந்ததே...? இரண்டு, மூன்று வாரங்களாக அது வராததற்கு என்ன காரணம்? வெளியுறவுக்கொள்கை எதுவும் மாறி விட்டதா?
2) தமிழர் இலக்கியங்களில் நீர் சுழற்சி / நீர் மேலாண்மை பற்றி வண்டி, வண்டியாக குறிப்பிட்டிருக்கும் போது, வெகு சுருக்கமாக பட்டினப்பாலையை மட்டும் உதாரணம் காட்டி முடித்திருப்பது ஏன்?
- இரண்டு கேள்விகளுக்கும் பதில் ஒன்றுதான். இருக்கிற இடத்துக்குள் அத்தனை விஷயங்களையும் சொல்லி முடித்தாக வேண்டியிருக்கிறது. ஒரு வாரம் விடுபட்டாலும், அடுத்தடுத்த வாரங்களில் கூடுதல் தகவல்களை குறிப்பிட்டுக் கொண்டுதானே இருக்கிறோம்? மற்றபடி, நமது வெளியுறவுக் கொள்கையில் யாதொரு மாற்றமும் இல்லை என இந்த வாரமே நிரூபித்து விடலாமா?

புதன், 6 ஏப்ரல், 2016

தீபம் + ஆவளி = என்ஜாய்!

ந்தவாரத்தை ஒரு ஜெனரல் நாலெட்ஜ் கேள்வியுடன் ஆரம்பிக்கலாம், சரியா? சூரன், கூரன்... இவர்கள் யாரென்று கண்டுபிடிக்க முடிகிறதா? எப்போதும் நமக்கு அருகில், நம்மைச் சுற்றியே இருக்கிற இவர்கள் யாராக இருப்பார்கள் என்று யோசித்து வையுங்கள். மற்ற விஷயங்கள் பேசி முடித்து விட்டு, இவர்களைப் பார்க்கலாம்.

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...