சனி, 27 பிப்ரவரி, 2016

ஓ மானே.. மானே... மானே.... உன்னைத்தானே!

ழகான பெண்களை புள்ளிமான் என்று அந்தக்கால பொயட்ஸ் வர்ணிப்பார்கள். இப்போதும் கூட சிலர் செய்கிறார்கள். உண்மையில், புள்ளிமான்களைக் காட்டிலும், அழகான பெண்கள் அழகானவர்கள். இல்லையா? (இணையத்தில் மணமகள் தேடும் போது, இளம்பெண்ணுக்கு பதில் புள்ளிமான் படம் இருந்தால், அப்ளை பண்ணுவீர்களா?). சரி. மேட்டர் அதுவல்ல. ஓ.. மானே... மானே....க்கு தமிழில் என்னென்ன பெயர்கள் இருக்கின்றன?

சனி, 20 பிப்ரவரி, 2016

இரக்கமுடையவர்கள்... பாக்கியவான்கள்!

‘இந்திய மொழிகளில் முதன்முதலில் அச்சுப்புத்தகம் எந்த மொழியில் வெளியானது’ என்று யாராவது கேள்வி கேட்டால், சட்டைக் காலரை சற்றே உயர்த்தி விட்டபடி ‘நம்மொழி செம்மொழியில்’ என்று பதில் சொல்லலாம் என தொடரின் 59வது அத்தியாயத்தில் படித்தோம். அந்தப் பெருமையை நமக்குக் கொடுத்ததற்காக ஹென்ரிக் ஹென்ரிக்ஸ் பாதிரியாருக்கு நன்றியும் தெரிவித்தோம். ஞாபகத்தில் இருக்கும். இந்த வாரம், தமிழுக்கு மகுடம் சேர்க்கிற இன்னொரு விஷயம்.

புதன், 17 பிப்ரவரி, 2016

அத்திரி, பத்திரி... கத்திரிக்கா!

ப்போது மட்டுமல்ல... ஆதிகாலத்திலும் சரி. கணக்கில் நம்மாட்கள் புலியாக, சிங்கமாக, சிறுத்தையாக... ஏன் டைனோசராகக் கூட இருந்திருக்கிறார்கள். கிரேக்க, ரோம வணிகர்கள் கப்பலேறி வந்து முத்து, பவள கடை விரித்து நம்மோடு வியாபார டீலிங் செய்திருக்கிறார்கள் (மதுரை மாவட்டம், கீழடியில் கிடைத்திருக்கிற அகழாய்வில் இந்த விஷயம் அறிவியல்பூர்வமாகவே நிரூபணம் ஆகியிருக்கிறது). பல ஆயிரம் பொற்காசுகள் புழங்குகிற வர்த்தகம் அது. இரண்டையும், இரண்டையும் கூட்டுவதற்கு இப்போது நாம் பயன்படுத்துகிற கால்குலேட்டர்கள் எல்லாம் அப்போது இல்லை. என்ன செய்தார்கள் நம் முன்னோர்கள்?

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

குரோட்டா, பூரிமாயன், ஒண்டன்... இவுக யாரு?

மது பாட்டியும், தாத்தாவும் பேசிய பழமொழிகளைத் தொகுத்து புத்தகமாகப் போட்டு பாதுகாத்த ஹெர்மன் ஜென்சன் பாதிரியார் பற்றிப் படித்ததும் பல நண்பர்களுக்கு கண்களில் லேசாக ஈரக்கசிவு அடித்ததாக தகவல் வந்திருக்கிறது. ‘‘நாலு வீட்டுல கல்யாணமாம். நாய்க்கு அங்கிட்டு ஓட்டம்... இங்கிட்டு ஓட்டம். உள்ள போய் ஒழுங்கா உக்கார்ரா...னு சின்ன வயசில, தெருப்புழுதில சுத்தும் போது எங்க பாட்டி பழமொழி சொல்லித் திட்டும் சார். இப்ப பாட்டியும் இல்ல; பழமொழியும் இல்ல. அந்தச் சொலவடை எல்லாம் இப்ப யாருக்கு சார் ஞாபகம் இருக்கு...’’ என்று கண்ணைக் கசக்கினார் மலைப்பிரதேசமான மூணாறில் இருந்து தொலைபேசிய ஜெயபாலன்.

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...