சனி, 31 டிசம்பர், 2016

சல்மான்... ஷாருக் - அழகாவே இல்லையே!

‘அய்யா... மாடு குத்திபுடுச்சுய்யா... கொடலு சரிஞ்சி மயங்கிக் கெடக்கறாருய்யா...’ - ஜல்லிக்கட்டு தினத்தின் மாலைநேரங்களில், அரசு மருத்துவமனை வராண்டாக்களில் இந்த கதறல் ஒலி கேட்டிருக்கலாம். ‘இன்னும் எத்தனை நாள் சார், இந்த ரத்தக்களறி...?’ - மனிதநேயத்தில் அக்கறை கொண்டவர்கள், ஜல்லிக்கட்டை எதிர்க்க எடுத்து வைக்கிற வாதம் இது. ‘காளைகளுக்கும் நம்மைப் போல உணர்வுகள் இருக்கு சார். ஜல்லிக்கட்டுங்கிற பேர்ல அதை கொடுமைப்படுத்துறோம். வாலை கடிச்சு காயப்படுத்துறாங்க. சாராயத்தை குடிக்க விட்டு மூர்க்கமாக்குறாங்க. சுத்த காட்டுமிராண்டித்தனமான செயல் சார் இது...’ - மிருகநேயத்தில் அக்கறை கொண்டவர்கள் வைக்கிற வாதம் இது. இரண்டும் எந்தளவுக்கு சரி? இவர்கள் சொல்வதில் நியாயம் இருப்பது போல தெரிகிறதே... நியாயம் இருக்கிறதா? ஜல்லிக்கட்டை தடை செய்து விடலாமா?

செவ்வாய், 27 டிசம்பர், 2016

வீரம் வௌஞ்ச மண்ணு!

குடிநீர் வரவில்லை என்று குடங்களுடன் சாலையை மறித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறதை அன்றாடம் செய்திகளில் பார்த்திருக்கலாம். சிலர் நேரிலும் பார்த்திருக்கலாம். சாலை மறியல் செய்கிறவர்களின் கனிவான கவனத்துக்கு: குறிஞ்சி எனப்படுகிற மலைப்பகுதியில் வளர்ந்து செழித்திருந்த உயர, உயர மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்த்து கதவு, ஜன்னல் ஆக்கி விட்டோம். மேகங்களை மறித்து மழையாய் மடை மாற்றுகிற வேலையை இனி யார் செய்வது? பூமியின் சமநிலையைப் பாதுகாக்கும் பணியில் ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக ஈடுபட்டுக் கிடந்த மலைகளை, மலைக்குன்றுகளை பிறந்தநாள் கேக் போல துண்டு துண்டாக அறுத்து சமையலறை, குளியலறைகளில் பதித்து விட்டோம். நீர்நிலைகளுக்கு ஆதார ஊற்றாக இருக்கிற பணியை இனி யார் செய்வது? எந்த பதில் எதிர்பார்ப்பும் இல்லாமல் நமது உயிர் வளர்த்த இயற்கையை சூறையாடி நாசம் செய்து விட்டு, கடைசியாக இப்போது.... குடங்களுடன் சாலையை மறித்துக் கொண்டிருக்கிறோம்!

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

குறிஞ்சி மலை டார்ஜான்!

க்கிரமானதொரு போர் இன்றைக்கு நடந்து கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா? பொதுவெளிகளில் அதிகம் அறியப்படாத அந்தப் போர், எல்லாம் தருகிற இந்தப் பூமியின் இயற்கை சமநிலையின் மீது அதிதீவிர அணுகுண்டுகளை சரமாரியாக வீசி அழித்துக் கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? எதிர்காலத்தில் மனித இனம் பாதுகாப்பாக வாழ, இன்னொரு கிரகத்தை இப்போதே தயார் செய்து கொள்ளவேண்டிய உடனடி ஆபத்தை அந்தப் போர் உருவாக்கியிருக்கிறது என்கிற விபரீதம் உணர்ந்திருக்கிறீர்களா? இயற்கைக்கு எதிராக, இயற்கை சமநிலைக்கு எதிராக மனித இனம் நடத்திக் கொண்டிருக்கிற அந்த உக்கிரப் போர், இப்போது உச்சம் தொட்டிருக்கிறது.

சனி, 10 டிசம்பர், 2016

நான் வந்துட்டேன்னு சொல்லு... திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!

சினிமாக்காரர்கள் ஏன் டூயட் பாடல்களை மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பரப்பிலேயே திரும்பத் திரும்ப எடுக்கிறார்கள் என்று ஒரு கேள்வி எழுப்பி, அதற்கான பதிலை இரு வாரங்களுக்கு முன்பாக பார்த்தோம். நினைவில் இருக்கும். இடம், கிளைமேட் அப்படி! சங்க இலக்கியங்களைப் புரட்டி, குறிஞ்சி நிலப்பரப்பு பற்றிய வர்ணிப்புகளைப் பார்த்தால்... சினிமா காதல் காட்சிகள் எல்லாம் டெபாசிட் காலியாகி விடுமாக்கும்!

வெள்ளி, 2 டிசம்பர், 2016

இரும்பிலே... ஒரு இதயம்!

செல்போன் இல்லாத வாழ்க்கையை ஒரு நிமிடமாகிலும் இன்றைக்கு யோசித்துப் பார்க்க முடிகிறதா? அதுவன்றி எதுவும் இயங்காது என்கிற நிலைக்கு ஏறக்குறைய வந்து விட்டோம். பத்து நிமிடம் நெட்வொர்க் இல்லையென்றாலும், மூச்சுத்திணறல் வந்து விடுகிறது. யாரையும் குற்றம் சொல்லிப் பயனில்லை. தகவல்தொழில்நுட்ப பெரு உலகம் இயந்திரத்தையும், மனிதனையும் இருவேறு கூறுகளாக பிரித்துப் பார்க்க விரும்புவதில்லை. திட்டமிட்ட செயல்கள் யாவும், திட்டமிட்ட படிக்கு நடந்து முடியவேண்டும் என்பதால், மனிதனும் இயந்திரமாகவே மாறியாக வேண்டிய கட்டாயம். கண்ணுக்கு முன் கழுத்தறுத்தால் கூட, சலனமற்றுப் பார்த்து விட்டு பஸ் ஏறுகிற இயந்திர இதயமே, பரிணாம வளர்ச்சியில் மனிதன் கண்ட உச்சக்கட்டம். கான் வாழ்க்கை அப்படியானது அல்ல. அது, உணர்வுப்பூர்வமானது.

திங்கள், 28 நவம்பர், 2016

ஊட்டியில் ஒரு டூயட்!

‘ஊ... லலால்லா... ஓஹூ... லலலால்லா...’ என்று தமிழ் சினிமாவின் கனவுக்காட்சிகளில் கதாநாயகனும், கதாநாயகியும் கட்டிப்பிடித்து டூயட் பாடுவார்களே...? இளையராஜாவின் படு அருமையான பாடலுக்கு அவர்கள் ஆடுகிற அந்த இடம், எந்த இடமாக இருக்கும்? ராமநாதபுரம்? விருதுநகர்? சிவகாசி? பரமக்குடி? நோ. நிச்சயமாக இருக்காது. படத்தின் பட்ஜெட்டைப் பொறுத்து ஊட்டியோ, கொடைக்கானலோ, மூணாறோ... அல்லது சுவிஸ் தேசமாகவோ அந்த கட்டிப்பிடி லொகேஷன் இருக்கும். சரிதானே? லொகேஷன் எதுவாகவும் இருக்கட்டும். அதில் இருக்கிற ஒரு பொதுவான ஒற்றுமையை கவனித்ததுண்டா? ஹீரோவும், ஹீரோயினும் காதல் செய்து பாட்டுப்பாடுகிற காரியத்துக்கு தேர்ந்தெடுக்கிற இந்த இடம் 89.99 சதவீதம் மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பரப்பாகவே இருக்கிறதே... ஏன் மக்கா ஏன்?

ஞாயிறு, 20 நவம்பர், 2016

ரம்பம்பம்... ஆரம்பம்!

யாமம், நாழிகை... இந்த வார்த்தைகளெல்லாம் கேள்விப் பட்டதுண்டா? சாண்டில்யன் கதை படித்தவர்கள் ‘ஓ... யெஸ்’ என்று கை உயர்த்துவார்கள். ‘புரவியில் புயலெனச் சீறிப் பறந்த மந்திரிகுமாரி, இரு நாழிகைப் பொழுதில் அரச விதானத்தையடைந்தாள்...’ - என்றெல்லாம் வரிகளைப் போட்டு எழுதினால் தான், சரித்திரக் கதைக்கு, சரித்திர எஃபெக்ட் கிடைக்கும். இல்லையா? இந்த யாமம், நாழிகை என்பவை வெற்று அலங்கார வார்த்தைகளல்ல. அதற்குப் பின்புலத்தில் இருக்கிறது நேர அறிவியல்.

புதன், 16 நவம்பர், 2016

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ - இதுதாங்க சூழல் அறிவியல்!

காட்டுக்குள் புகுந்த காதல்ஜோடி யானைகளை, காவல் காத்த இளவட்டப் பையன், கவண் கல்லை வீசி அடித்து விரட்டிய குறிஞ்சி சாகசத்தை கடந்தவாரம் படித்து விட்டு நிறைய நண்பர்கள் ஆச்சர்யப்பட்டிருந்தார்கள்.


‘‘பள்ளிக்கூடத்தில படிக்கும் போது... குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை...ன்னு மொட்டை மனப்பாடம் பண்ணி பாஸ் பண்ணிட்டோம் சார். அர்த்தம் புரியலை. திணையியல் என்பது இவ்வளவு பெரிய சூழல் அறிவியல்னு (Environmental Science) தெரியாம போயிடுச்சே. நம்ம தமிழ் இலக்கியங்கள் சொல்லியிருக்கிறதை ஃபாலோ பண்ணுனாலே போதும். உலகம் தப்பிச்சிடும் சார்...’’ என்று மூணாறில் இருந்து கடிதம் வந்திருந்தது.


குறிஞ்சி நிலத்தில் இருந்து வந்த கடிதம்!

ஞாயிறு, 6 நவம்பர், 2016

என் மேல் விழுந்த மழைத்துளியே!

திருக்குறளில் இருந்து இந்த வாரத்தை ஆரம்பிக்கலாம்.
‘நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி 
தான்நல்கா தாகி விடின்’
- பள்ளிக்கூடத்தில் விளக்கம் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். மறந்து போனவர்களுக்காக... ‘‘பெய்ய வேண்டிய நேரத்தில் ஒழுங்காக மழை பெய்யவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்... அது, எவ்வளவு பெரிய கடலானாலும் சரி. தனது தன்மை மாறி கெட்டு விடும்,’’ - இது வள்ளுவர் வாய்ஸ். இன்றைய சயின்ஸ் இதை ‘அப்சல்யூட்லி ரைட்’ என்று உறுதி செய்கிறது. ஒழுங்காக மழை பெய்து, மழை நீர் கடலைச் சென்று சேர்ந்தால் மட்டுமே நிலத்தில் உள்ள தாதுக்கள் கடலில் கலக்கும். கடல்வாழ் உயிரினங்களுக்கு போதிய போஷாக்கு கிடைக்கும். மழை குறைந்தால்... கடல் வளம் குறைந்து, மீன்வளம் குறையும். இயற்கை ஒன்றுக்கொன்று கண்ணி கோர்த்து வைத்திருக்கிறது. ஒரு கண்ணி விலகினாலும் எல்லாம் போச்சு.

வெள்ளி, 28 அக்டோபர், 2016

ஊட்டி, கொடைக்கானலுக்கு ஒரு டிரிப்?

‘வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம், பிளாஸ்டிக் பொருள் தவிர்ப்போம்...’ என்று அரசாங்கமும், தன்னார்வ அமைப்புகளும் கரடியாகக் கத்திக் கொண்டிருக்கின்றன. எதற்காக? சுற்றுச்சூழல் சீர்கேடு தவிர்ப்பதற்காக! சுற்றுச்சூழலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை எழுதி வைத்து, கற்றுக் கொடுத்த உலகின் ஒரே நாகரிகம், தமிழ் நாகரிகம் என்று போன வாரம் பார்த்தோமில்லையா? ‘அப்படினா, மத்த நாகரிகமெல்லாம் கண்ணை மூடிகிட்டு இருந்துச்சா சார்?’ என்று மிகத் தேர்ந்த ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார் கம்பம் பக்கத்தில் இருக்கிற சுருளிபட்டி வாசகி ஜனனி.

திங்கள், 24 அக்டோபர், 2016

மலரே... குறிஞ்சி மலரே...!

ருளைக்கிழங்கு சிப்ஸ் தின்று விட்டு வீசி எறிந்த பிளாஸ்டிக் குப்பைகளும், தேயிலைச்செடி போடுவதற்காக மலைச்சரிவுகளில் நம்மவர்களால் நாசமாக்கப்பட்ட பசுஞ்சோலைகளும்... ஜூராஸிக் பார்க் டைனோசர்கள் போல இப்படி திரும்பி வந்து தாக்கும் என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம். எல் நினோ, கிரீன் ஹவுஸ் எஃபெக்ட்... என்று சுற்றுச்சூழலை நாம் எக்கச்சக்கமாய் கெடுத்து வைக்க... பெருமழையாகவும், கொடும் வறட்சியாகவும் அது தனது ஆட்டத்தை இப்போது ஆரம்பித்திருக்கிறது. என்ன செய்யலாம், எப்படித் தப்பிக்கலாம் என்று உலகம் இன்று கையைப் பிசைந்து நிற்கிறது.

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

இனித்தால் கரும்பு; கடித்தால் சுரும்பு



 முதலில் ஒரு ஜி.கே. கேள்வி. சரியாக பதில் சொல்பவர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ், கடைசிப்பாராவில் காத்திருக்கிறது. கீதம், கீடம், சுரும்பு - இதெல்லாம் என்ன? ‘ஏதாச்சும் ஹின்ட் கொடுங்க சார்...’ என்று கேட்பவர்களுக்காக... கரும்பு - நாம் கடிப்பது. சுரும்பு - நம்மைக் கடிப்பது. போதுமா? சரியான பதிலுடன் காத்திருங்கள்.

திங்கள், 10 அக்டோபர், 2016

கல்லை மட்டும் கண்டால்....

‘சிந்து சமவெளி... நம்ம ஏரியா என்று எழுதறது இருக்கட்டும். அதுக்கு நீங்க கொடுக்கிற ஆதாரம் பத்தாது சார். இன்னும் நிறைய எவிடென்ஸ், அதுவும் ஆர்க்கியாலஜிக்கல் எவிடென்ஸ் வேணும். அப்பத்தான் நம்ப முடியும்!’ என்று போடியில் இருந்து சூசை ஜெபராஜ் தொடர்பில் வந்தார். அவருக்கு, நமது பதில் இதுதான்: ‘ஒன்றல்ல ஜெபராஜ் சார். இன்னும் நூறு வாரம் எழுதுகிற அளவுக்கு ஆதாரம் இருக்கிறது. அவ்வளவு எழுத அவகாசம் இல்லாதபடியால், ஒரு பானை எவிடென்ஸூக்கு பதமாக, இங்கே ஒரு எவிடென்ஸ்!’.

வியாழன், 6 அக்டோபர், 2016

சிந்து சமவெளி... நம்ம ஏரியா?

‘கர்ர்... கர்ர்... கெர்ர்க்.... கெர்ர்ர்ரக்..’ - மழைகாலங்களில் இந்த டார்ச்சர் சத்தம் கேட்காமல் தப்பித்திருக்க முடியாது - தவளை. நிலத்திலும், நீரிலும் செல்லும் ஆற்றல் கொண்ட வாகனத்தை ஹோவர்கிராப்ட் (Hovercraft) என்று சொல்கிறோம், இல்லையா? தவளை என்பது ஒரு ஹோவர் கிராப்ட் மாடல் உயிரினம். தண்ணீரில் எவ்வளவு நேரமும் முங்கு நீச்சல் அடித்து கிடையாய் கிடக்கும். ‘ஜலதோஷம் பிடிச்சிக்கப் போகுது. வெளில வர்றியா... முதுகில ரெண்டு வைக்கவா...’ என்று அம்மா கத்தினால், தண்ணீரை விட்டு தரைக்கு வந்து, அங்கும் செம டேரா போடும். இந்தத் தவளைக்கு அரி, நுணலை, பேகம், நீகம், தேரை என்று தமிழ் இலக்கியங்களில் பெயர் இருக்கிறதாக்கும்!

திங்கள், 26 செப்டம்பர், 2016

அஞ்சலி.. அஞ்சலி... அஞ்சலிகை!

‘இந்தக் கொசுத் தொந்தரவு தாங்கலைடா சாமீய்...’ என்று ‘சிறந்த இரவு’ பயன்படுத்துகிறீர்களா? கொசுப் பிடுங்கல் உங்களையும், என்னையும் மட்டும் அல்ல. நம்ம தாத்தாவுக்கும், தாத்தாவுக்கும், தாத்தாக்களையும் கூட பாடாய்படுத்தி இருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது. பிறகு...? தமிழ் மொழியில் கொசுவுக்கு அத்தனை வித, விதமான பெயர்கள் இருக்கிறதாக்கும்.

ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

அப்பாலே போ சாத்தானே...

ங்களுக்கு கற்பனை செய்யப் பிடிக்கும்தானே? இப்போது நான் விளக்குகிற காட்சியை மனதில் பிரமாண்டமாக... பாகுபலி கிராபிக்ஸ் போல படு பிரமாண்டமாக கற்பனை செய்து பாருங்கள். அலையடிக்கிற நீலக்கடல். அந்தி சாய்கிற மாலைப்பொழுது. காற்றுக்கு படபடக்கிற பாய்மரங்களில் இருந்து எழுகிற சடசடப்புச் சத்தம். பொங்கி எழுந்து தாழ்கிற கடல் நீரில் நிலை கொண்டு நிற்க இயலாது, மேலும் கீழுமாகவும், இடதும், வலதுமாகவும் தள்ளாடும் மரக்கலங்கள். அதிலிருந்து சரக்கு பெட்டகங்களை இறக்கவும், ஏற்றவுமாக இருக்கிற பல ஆயிரம் உழைப்புக்காரர்கள். கரையில் இருந்து கண்காணிக்கிற பெருமுதல் காரர்கள். அக்கம்பக்கம் இருக்கிற அத்தனை கடல்பறவைகளும் விதவிதமாக ஒலி எழுப்பியவாறே சுற்றி வருகிற ஒரு இடம்... கடல் வணிகம் நடக்கிற பண்டை தமிழ் நகரம். ஜனவரி என்றும், பிப்ரவரி என்றும் காலத்தை பகுத்தறியப் பழகாத பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு நாள்....

சனி, 10 செப்டம்பர், 2016

குலிங்கம்... புலிங்கம்... காணவே காணோமே?

‘தெக்கால போன வெள்ளி, வடக்க வந்தா மழை...’ - கிராமத்துப் பக்கம் போகும் போது, காது வளர்த்த பாட்டி, வேப்ப மரத்தடியில் வெற்றிலை இடித்துக் கொண்டே சொல்லக் கேட்டிருக்கலாம். நிஜமாகவே மழையும் கொட்டித் தீர்க்கும். சென்னை, கல்லூரிச் சாலையில் இருக்கிற Meteorology டிபார்ட்மென்ட் காரர்கள் செய்கிற வேலையை, மரத்தடியில் குத்த வைத்த படி பாட்டி செய்கிறார். பாட்டி கல்லூரிக்குப் போய் கட்டடிக்காமல் Natural Science எனப்படுகிற Astronomy படித்திருப்பதற்கான சாத்தியங்கள் குறைவு. எனில், அவருக்கு எப்படி இத்தனை அசாத்தியமான சயின்ஸ் நாலெட்ஜ்?

சனி, 3 செப்டம்பர், 2016

பொன் கிடைக்கும்... புதன் கிடைக்குமா?

‘உஷ்ஷ்ஷ்... அப்பாடா.... என்னா வெயில் அடிக்குதுபா. ஆம்லேட் போடுறதுக்கு அடுப்பே தேவையில்ல போல இருக்கே!’ என்று சட்டை காலரை பின்னுக்கு இழுத்து விட்டபடியே வியர்வை விட்டுக் கொண்டிருக்கிறீர்களா? இயற்கையை கொஞ்சமும் சளைக்காமல், முடிந்தளவுக்கு சீரழித்துக் கொண்டே....யிருந்தால், அடிக்காதா பின்னே...? ஆனாலும் நண்பர்களே... வெயிலோ, மழையோ, காற்றோ, பனியோ... தங்களுக்கான ஒழுங்கமைப்பை இன்றைக்கு வரைக்கும் துளி மீறாமல் மிகச் சரியாக வந்து அட்டென்டன்ஸ் போட்டுக் கொண்டிருக்கின்றன. பாருங்கள். மே மாதத்தில் பனி வாட்டியிருக்கிறதா, இல்லை... டிசம்பர் மாதத்தில்தான் அக்கினி அடித்திருக்கிறதா? என்னதான் மரங்களை வெட்டினாலும், மலைகளை பெயர்த்தாலும், இயற்கை இன்னும் மகா பொறுமை காப்பதன் அடையாளங்கள் இவை.

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

பாவம் கோட்டான்... பழியைப் போட்டான்!

‘‘இன்னிக்கு எல்லாமே ஏட்டிக்குப் போட்டியா நடக்குதே; காலையில எந்தக் கோட்டான் முகத்துல முழிச்சமோ...’’ என்று அலுவலக டார்ச்சர் தருணங்களில் அலுத்துக் கொண்டிருப்பீர்கள். அதென்ன கோட்டான்? அதற்கு அப்படி என்ன அமானுஷ்ய வல்லமை? கோட்டானைப் பார்த்தால், குளறுபடிகள் கன்ஃபார்மா? தமிழ் இலக்கியம் கோட்டான் பற்றி எதுவும் குறிப்பு வைத்திருக்கிறதா? தெரிஞ்சுக்க வேணாமா?

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

ஜல்லிக்கட்டும், சர்வதேச அரசியலும் - 2


ல்லிக்கட்டு கூடவே கூடாது என்று நாட்டின் வடபுலத்தில் இருந்து நிறைய, நிறைய குரல்கள் பெரும் பெரும் புள்ளிகளிடம் இருந்து வருகின்றன. காளைகளுக்காக கண்ணீர் வடிப்பவர்கள் எண்ணிக்கை ஒரே இரவில் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இவர்களது திடீர் பாசம், அலங்காநல்லூர் பக்கம் மேய்ந்து கொண்டிருக்கிற பொலி காளைகளுக்கு தீராத விக்கலை ஏற்படுத்தியிருக்கலாம். எதனால் இந்தப் பாசம்? எலி ‘ஏதோ மாதிரி’ ஓடுகிறது என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கும்தானே? இவர்களது காளைப் பாசத்துக்கு பின்னணியில் என்னதான் இருக்கிறது? ‘‘ஜல்லிக்கட்டு என்று இன்றைக்கும், ஏறுதழுவுதல் என்று அன்றைக்கும் அழைக்கப்பட்ட இந்த வீர விளையாட்டு பிறந்து, வளர்ந்து, திசைகளெங்கும் புகழ் சேர்த்த இடம், ஐந்து திணைகளில் ஒன்றான முல்லை நிலப்பரப்பு. இன்றைக்கு சதியின் பிடியில் சிக்கி நிற்கிற அந்த முல்லை விளைச்சலை... பேசாது நாம் மவுனித்துக் கடந்தால்... உலகம் வியக்கிற நம் முல்லை பண்பாடு பாலையாக திரிந்து விடாதா...?

சனி, 20 ஆகஸ்ட், 2016

நானும் உங்க சொந்த பந்தந்தேன்...!

சினிமா நட்சத்திரங்களைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிற அளவுக்கு நம்மவர்கள் நிறையப் பேர், வானத்து நட்சத்திரங்களைப் பற்றி தெரிந்து வைத்திருப்பதில்லை. ‘அதெல்லாம் சயின்ஸ் சார். நான் தமிழ் லிட்ரேச்சர் ஸ்டூடண்ட்டாக்கும்...’ என்று அவர்கள் சொல்வார்களானால்... ‘ஸாரி சகோஸ். தமிழ் இலக்கியம் கூட நீங்கள் ஒழுங்காக படித்திருக்கவில்லை’ என்று தமிழ்கூறும் நல்லுலகம் சிரித்து விடும். காரணம், நட்சத்திரங்களை, கோள்களை, சூரியனை, சந்திரனை, அவற்றின் இயக்கங்களைப் பற்றி நமது இலக்கியங்களில் இருக்கிறதைப் படித்தாலே போதும்... ‘ஆத்தா நான் பாசாயிட்டேன்...’ என்று அறிவியல் எக்ஸாம் முடிந்ததும் சினிமா போல கூவிக் கொண்டே அறையில் இருந்து வெளியே ஓடி வரலா
ம்!

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

ஜல்லிக்கட்டும், சர்வதேச அரசியலும் - 1

‘அய்யா... மாடு குத்திபுடுச்சுய்யா... கொடலு சரிஞ்சி மயங்கிக் கெடக்கறாருய்யா...’ - ஜல்லிக்கட்டு தினத்தின் மாலைநேரங்களில், அரசு மருத்துவமனை வராண்டாக்களில் இந்த கதறல் ஒலி கேட்டிருக்கலாம். ‘இன்னும் எத்தனை நாள் சார், இந்த ரத்தக்களறி...?’ - மனிதநேயத்தில் அக்கறை கொண்டவர்கள், ஜல்லிக்கட்டை எதிர்க்க எடுத்து வைக்கிற வாதம் இது. ‘காளைகளுக்கும் நம்மைப் போல உணர்வுகள் இருக்கு சார். ஜல்லிக்கட்டுங்கிற பேர்ல அதை கொடுமைப்படுத்துறோம். வாலை கடிச்சு காயப்படுத்துறாங்க. சாராயத்தை குடிக்க விட்டு மூர்க்கமாக்குறாங்க. சுத்த காட்டுமிராண்டித்தனமான செயல் சார் இது...’ - மிருகநேயத்தில் அக்கறை கொண்டவர்கள் வைக்கிற வாதம் இது. இரண்டும் எந்தளவுக்கு சரி? இவர்கள் சொல்வதில் நியாயம் இருப்பது போல தெரிகிறதே... நியாயம் இருக்கிறதா? ஜல்லிக்கட்டை தடை செய்து விடலாமா?

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ்!

‘சூரியன் உதிக்கும் திசை கிழக்கு; மறையும் திசை மேற்கு...’ என்றுதானே இன்றைக்கும் பாடப்புத்தகத்தில் படித்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில், சூரியன் உதிப்பதும் இல்லை; மறைவதும் இல்லை. அது நிரந்தரமானது. நிலைத்து நிற்கிறது. அதை மையமாகக் கொண்டுதான் பூமியும், அதன் சகாக்களும் சுற்றிச் சுற்றி வட்டமடித்து வருகின்றன. பூமியின் இந்த நாலுகால் பாய்ச்சல் ஓட்டம்தான், நமக்கு சூரியனின் நகர்வாகத் தெரிகிறது. தூரத்தில் இருப்பதை பக்கத்தில் காட்டுகிற டெலஸ்கோப்புகள், கோயில் கடைகளில் கூட விற்கிற இந்தக்காலத்திலேயே நமது ‘அறிவியல் அறிவு’ இப்படி என்றால்... 2 ஆயிரம், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலைமை எப்படி இருந்திருக்கும்? யோசித்துப் பாருங்கள்!

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

அன்பு.. காதல்... மோகம்.... தப்பேயில்ல!

ந்த, கூகுள் இருக்கிறதே... கூகுள், அதை திறந்து உலகில் அதிக மொழிபெயர்ப்புகள் கண்ட நூல் எது என்று தட்டச்சு செய்து, தேடிப் பாருங்கள். வந்து விழுகிற பட்டியலில், உங்களுக்கு ஒரு பிரமிப்பு காத்திருக்கும். ஆச்சர்யப்படாதீர்கள் சகோஸ். பைபிள், குர்ஆன் தவிர்த்து, உலகின் அதிக மொழிகளை / மக்களை / இலக்கியக்காரர்களைச் சென்று சேர்ந்த அந்த மூன்றாவது நூல்.... நிச்சயமாக ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு சொந்தமான, சமய போதனை புத்தகம் அல்ல. சிறுவர்களும், பெரியவர்களும் விரும்பி, விரும்பிப் படிக்கிற கதைப்புத்தகமும் அல்ல. அப்புறம்...? மனித வாழ்வின் சகல தரப்பினருக்குமான ஒழுக்க விழுமியங்களை விவரித்து நேர்படுத்துகிற புத்தகம். அந்தப் புத்தகம்... அலையடிக்கிற குமரிமுனை கடலின் நடுவே, ஓங்கி உயர்ந்து,கம்பீரமாக நிற்கிறாரே... அவர் எழுதிய  திருக்குறளேதான்!

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

வாக்ரிபோலியும், ஒரு தங்க நாணயமும்!

ரு ஜெனரல் நாலெட்ஜ் கேள்வியுடன் இந்த வாரத்தை ஆரம்பிக்கலாம். ‘வாக்ரிபோலி (Vagriboli)’ என்று ஒரு மொழி இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தமிழ் இலக்கிய நூல் ஒன்று, இந்த மொழியில் பெயர்க்கப்பட்டிருக்கிறது. வாக்ரிபோலியில் மொழிபெயர்க்கப்பட்ட அந்த மகத்தான பெருமையுடைய இலக்கியம் எது? ஆன்ஸர் யோசித்து வையுங்கள். நான்கு பாராக்கள் கழித்து பதில் பார்க்கலாம்.

வியாழன், 21 ஜூலை, 2016

‘ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம்...’ - தப்பாச்சே!

‘‘சபாஷ் மச்சான். கல்யாண இன்விடேஷன் கிடைச்சது. உன் கல்யாணத்துக்கு 8 ஜிபி இன்டர்னல் மெமரி, 1 ஜிபி ரேம் ஸ்பீடோட அட்டகாசமான ஆன்ட்ராய்ட் போன் பரிசு தரப்போறேன்டா...’’ என்று ஊரில் இருந்து நண்பன் பேசினால், புளகாங்கிதம் அடைந்து விடவேண்டாம். அந்த போன், இருநூற்று ஐம்பத்தொரு ரூபாய் போனாகவும் இருக்கலாம். அது இருக்கட்டும். இந்த வாக்கியத்தில் சபாஷ், இன்விடேஷன், ஆன்ட்ராய்ட், ரேம், போன் மாதிரியான சில சொற்கள் தமிழில்லை என்று நமக்குத் தெரியும். கல்யாணம் என்பதும் கூட தமிழ் சொல் அல்ல என்று சொன்னால், ஆச்சர்யப்படுவீர்கள். திருமணம் என்பதே சரியான பதம். ‘ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்...’ என்று பாட்டு படிக்கிறீர்களே... அது தப்பு. வார்த்தை என்பது வடமொழி. சொல் என்பதே சரியான சொல். தமிழ்ச் சொல். ரைட்டா?

சனி, 16 ஜூலை, 2016

புது ‘வெள்ளி’ மழை... இங்கு பொழிகின்றது!

காதலுக்கு அப்படி ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. சங்க இலக்கியங்களில் வருகிற தலைவன், தலைவி காதல், திருக்குறளில் காதலியின் extraordinary கவலை எல்லாம் கடந்தவாரம் படித்ததும் நிறைய நண்பர்களுக்கு மெய்சிலிர்த்திருக்கிறது. ரொம்பப் பிரபலமான இந்தக் குறளை பார்க்காது போனால், தெய்வப்புலவரின் சாபத்துக்கு ஆளாக நேரிடலாம்.
‘‘யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்’’ 
- இந்தக் குறளை, காட்சி பிம்பமாக லட்சம் சினிமாக்களிலாவது பார்த்திருப்பீர்கள். ஏன், சொந்த வாழ்க்கையிலேயே அனுபவம் வாய்த்திருக்கப் பெற்றிருக்கலாம். ‘‘நான் பார்க்கிற போது, நிலத்தைப் பார்க்கிறாள். நான் வேறு பக்கம் பார்க்கிற போது, மின்னல் போல ஒரு சிங்கிள் செகண்ட் என்னைப் பார்த்து, தனக்குள் மெல்லச் சிரித்து மகிழ்கிறாள்...’’
திருக்குறள் பற்றி எழுத இன்னும் லட்சம் பக்கத்துக்கு மேட்டர் இருக்கிறது. ஆனால், ஊரில் இருக்கிற வருத்தப்படாத வாலிபர் சங்கங்களை எல்லாம் கலைத்து விட்டு, வள்ளுவப் பேராசான் சங்கம் ஆரம்பித்து நம்மவர்கள் டார்ச்சர் படுத்தி விடுவார்கள் என்பதால்... போதும்!

சனி, 9 ஜூலை, 2016

வாழ வைக்கும் காதலுக்கு ஜே!

‘‘நிலத்தை பிரிச்சி வெச்சிருக்காங்க. நீர்நிலைகளை பகுத்து வெச்சிருக்காங்க. அறிவியல், வானவியல் எல்லாம் அத்துபடி. கணித சூத்திரங்கள்ல கில்லாடி. நீங்க எழுதறதை எல்லாம் படிச்சா... உலகத்துக்கே நாகரீகம் கத்துக் கொடுத்தது தமிழ் இனம் தான்னு சொல்லுவிங்க போல இருக்கே சார்...?’’ - பழநி பக்கம் உள்ள கல்லூரியில் பொறியியல் தொழில்நுட்பம் படிக்கிற வாசகி கொக்கி போட்டார். நான் சொல்ல வில்லை மேடம். ஆனால், வெளிநாட்டு தமிழறிஞர்கள் நிறையப் பேர் அப்படித்தான் சத்தியமடிக்கிறார்கள். உலக நாகரீகத்தில் பெரும்பங்கு விஷயம், இந்த மண்ணில் இருந்து... தமிழ் மண்ணில் இருந்து சுவீகரிக்கப்பட்டிருக்கலாம் என்று!

திங்கள், 4 ஜூலை, 2016

சுவாதியும்... சாதியும்!

முகநூலில் நட்புக்கான கோரிக்கை அனுப்புவது. சேர்த்ததும், புரொஃபைல் போட்டோவை பார்த்து விட்டு, ‘தலையில அந்த மஞ்சக் கலர் க்ளிப் சூப்பர். பூசணிக்கா சுத்திப் போடச் சொல்லுங்க...’ என்று பனிக்கட்டி வைப்பது. நேரில் சந்திக்கிற வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு, ‘அ - நான்கு’ பேப்பரில் மடக்கி எழுதி, காதல் கடுதாசி கொடுப்பது. ‘போடா பொறுக்கி....’ என்று மறுத்துத் திட்டினால்... அரிவாளை எடுத்து ஒரே போடாக போட்டு விட்டு டிரெய்ன் பிடித்து எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்! - எம்மாம் பெரிய தப்பு? ‘இந்தக் காலிப் பயலுவல எல்லாம் சும்மா விடக்கூடாதுங்கோ...’ என்று வாட்ஸ்அப், முகநூல்களில் (மட்டும்) தமிழகம் கொந்தளிக்கிறது. தப்புத்தான். சும்மா விடக்கூடாதுதான். சும்மா விட்டால், கடையில் பேனா வாங்குகிறது போல ஆளாளுக்கு அரிவாள் வாங்கிக் கொண்டு கிளம்பி விடுவார்கள். கழுத்தறுத்தான் பையன் விவகாரத்தை ஒரு கோடிப் பேருக்கும் மேல் பேசி, எழுதி, விவாதித்து விட்டார்கள்... என்பதால், அவனை விட்டு விடலாம். அதுக்கும் மேல போலாம். ரைட்டா?

ஞாயிறு, 3 ஜூலை, 2016

அழகிய... ‘கிளி’யோபாட்ரா!

ழகான பெண்களைப் பற்றி கவித... கவித எழுதுகிற பொலவர்ஸ், தங்கள் கவிதைகளில் மானே, தேனே, மயிலே, குயிலேவுக்கு அடுத்தபடியாக, அதிகம் பயன்படுத்துகிற பறவையின் பெயர் - கிளி. ‘ச்சும்மா கிளி மாதிரி கொஞ்சுதுப்பா...’ என்று பேசக் கேட்டிருப்பீர்கள்; அல்லது, பேசியிருப்பீர்கள். இல்லையா? நிஜம்தான். பார்ப்பதற்கும் சரி; கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவதைக் கேட்பதற்கும் சரி... கிளி - பறவையினத்தின் ‘கிளி’யோபாட்ரா!

வெள்ளி, 1 ஜூலை, 2016

ஒரு செய்தியாளனின்... கடைசிச் செய்தி!

ரணம் என்பது புதிரான, அரிய, ஆச்சர்யப்படத்தக்க, எங்கும் காணப்படாத, இதற்கு முன் நிகழ்ந்திராத விஷயம் அல்ல. அது இயல்பானது. நீக்கமற நிறைந்திருக்கிறது. பூமியில் இருக்கிற உயிரினங்கள் ஒவ்வொன்றையும் அது காற்றைப் போல கடந்து / தழுவிச் செல்கிறது; சென்று கொண்டிருக்கிறது. ஆனாலும் கூட... மரணம், தனக்குள் ஒரு மாபெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் நிறைத்து பதுக்கி வைத்திருக்கிறது. மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாத, சகித்துக் கொள்ளமுடியாத தருணங்களும் இருக்கிறது. அது வந்து சந்திக்கிறதா; அதைச் சென்று சந்திக்கிறார்களா என்பதைப் பொறுத்து, வேதனையின் வீரியம் மதிப்பிடப்படுகிறது. 49 வயது என்பது மரணத்துக்கான பொழுதல்ல. என்பதால்... பத்திரிகை செய்திகளுடன் வாழ்க்கை நடத்திய ஒருவரின் மரணம், கூடுதலான விசனத்தை விதைத்து நிற்கிறது.

திங்கள், 27 ஜூன், 2016

வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த...

‘‘சார், நம்ம ஊர் நாகர்கோவில் பக்கம், தெரிசனங்கோப்பு. சின்ன வயசில, ஊரைச் சுத்தி நீர்நிலைகள், ஓடைகள், வாய்க்கால்கள் அவ்வளவு இருக்கும். இப்பவும் இருக்கு. ஆனா, சின்ன வயசில பார்த்ததில கால்வாசி கூட இப்ப இல்லை. தமிழர்கள், நீர்நிலை வகைகளை 47 பிரிவா பிரிச்சி வெச்சிருக்காங்கனு படிச்சதும் ரொம்ப ஆச்சர்யமா இருந்திச்சி சார். சின்ன வயசில முங்கிக் குளிச்ச எங்கூர் குளமெல்லாம் நினைவுக்கு வந்திடுச்சி...’’ - தற்போது திண்டுக்கல்லில் செட்டிலாகியிருக்கும் வாசகர் விஸ்வேஸ்வரன் தொடர்பில் வந்தார். நீர்நிலை தொடர்புடைய விஷயங்களை 47 பெரும் பிரிவுகளாக பகுப்பதை உலகின் வேறெந்த சமூகமாவது செய்திருக்குமா - அதுவும் 2 ஆயிரம், 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் - என்று என் கூகுளறிவுக்கு எட்டிய வரையில் ஆராய்ந்து பார்த்தேன். சான்ஸே இல்லை. நமது முன்னோர்களின் சமூக அறிவியல் அறிவுக்கு லட்சம் நோபல் கொடுத்தாலும்... கட்டுபடியாகாது!

வெள்ளி, 17 ஜூன், 2016

என்ன நடை? அன்ன நடை!

‘‘ச்சே. இப்பல்லாம், பால்ல தண்ணி கலக்கறாங்களா; இல்லை, தண்ணீல பாலைக் கலக்கறாங்களானு தெரியலை. எல்லாம் கலப்படம் ஆகிப் போச்சு. சும்மா விடக்கூடாது இவங்கள...’’ என்று காலையில் காபி குடித்துக் கொண்டே டென்ஷன் ஆகிற ஆசாமியா நீங்க? ஓவர் டென்ஷன் உடம்புக்கு ஆகாது. யாரோ ஓரிருவர் செய்கிற தப்புக்காக, எல்லாருமே அப்படித்தான் என்று முடிவுக்கு வந்து விடற்க!

செவ்வாய், 14 ஜூன், 2016

தி கன்ஜூரிங் 2 - அப்பாலே போ சாத்தானே...


பேய் படம் எடுப்பது ஒரு கலை (இன்றைக்கு நம்மாட்களில் சிலர் செய்து கொண்டிருப்பது பக்கா கொலை). அச்சுறுத்துவதும்,  அலற விடுவதும், படம் முடிந்ததும் நேராக போய் ஒரு எக்கோ டெஸ்ட் எடுத்து பார்க்க வைப்பதும் அல்ல பேய் படங்களின் இலக்கணம். உணர வைத்தலே சிறந்த படைப்புக்கான இலக்கணம். ஒரு சினிமாவை, அதன் கதையின் போக்கின் வழியே உடன் பயணித்து, உணர்ந்து, ரசித்து, பின்னர் விடுபட்டு திரையரங்கில் இருந்து அதை அசை போட்டபடி வெளியே வருவோமேயானால்... அது நல்ல சினிமா. ‘தி கன்ஜூரிங் - 2’ அந்த இலக்கணங்களுக்கு நெருக்கமாய் இருக்கிற ஒரு சினிமா.

ஞாயிறு, 12 ஜூன், 2016

குயில் போல பொண்ணு; மயில் போல பேச்சு!?

‘பொண்ணு ச்ச்சும்மா மயில் மாதிரிடா...’ என்று பள்ளி, கல்லூரிகளில் நம்ம பசங்க பேசக் கேட்டிருக்கலாம். அழகான பெண்களை (மட்டும். ஆண்களை அல்ல!) வர்ணிக்க மயில்களை நாம் காலம், காலமாக உதாரணத்துக்கு அழைக்கிறோம். அதாவது, பார்த்ததும் கவர்ந்திழுக்கிற / சொக்க வைக்கிற / மீண்டும், மீண்டும் பார்க்கத் தூண்டுகிற ஒரு ஈர்ப்பு அங்கே குடி கொண்டிருக்குமாம். மயில்கள் நிஜத்தில் அழகுதான். ஆனால், அருமை சகோதரர்களே... தோகை விரித்த படியே உங்களுக்கு ‘சிக்னல்’ காட்டுவது ஆண் மயிலன்றி, பெண்ணல்ல. உண்மையில், பெண் மயிலை ஒருமுறை பார்த்தீர்களானால்... அப்புறம் உங்கள் தோழியை மயில் என்று வர்ணிக்க சின்னதாக ஒரு தயக்கம் உங்களுக்கு வரலாம். கொஞ்சம் பெரிய சைஸ் கோழி போல இருக்கும். என்ன... கழுத்தில் கொஞ்சம் கலர் பெயிண்ட் இருக்கும். அவ்ளோதான்!

செவ்வாய், 7 ஜூன், 2016

செம ஹாட்... மச்சி!

ப்பாடா... அனல் கக்கிய அக்னி இடத்தை காலி செய்து விட்டது. அடிக்கிற வெயில் உங்களையும், என்னையும் மட்டுமா வறுக்கிறது? இயற்கையையோ, சுற்றுச்சூழலையோ எந்த விதத்திலும் டிஸ்டர்ப் பண்ணாமல், தானுண்டு, தன் ஜோலியுண்டு என்று இருக்கிற மிருகங்களையும் சேர்த்தேதான் வதைக்கிறது. எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்குகிற மாதிரியாக இல்லை. என்னதான் செய்யும் இந்த மிருகக்காட்சி சிம்பன்ஸி..? ஜில்லுனு கூலா... குடிக்குது கோலா! இடம்: ஷென்யாங் (சீனா).

சனி, 4 ஜூன், 2016

பனி வாடை வீசும் காற்றில், சுகம் யார் சேர்த்ததோ?

ழைப்புக்கு உதாரணம் எழுதச் சொன்னால் (நமது பெயர் தவிர்த்து!?) நாமெல்லாம் தயங்காமல் எழுதுகிற பெயர் எறும்பு. இல்லையா? ஹார்டு ஒர்க் என்கிற ஆங்கில / கடின உழைப்பு என்கிற தமிழ் வார்த்தைக்கு இது, நடமாடும் அர்த்தம். அந்த எறும்புக்கு பிபீலிகை, பிலஞ்சுலோபம் என்று தமிழில் பெயர் இருக்காம். துட்டன், தெறுக்கால், நளிவிடம், விருச்சிகம் - இதெல்லாம், வாயில் இரண்டு பக்கமும் டேஞ்சர் வெப்பன் வைத்திருக்கிற தேளின் பெயர்கள். நேராக ஓடுகிறதா; சைடாக ஓடுகிறதா என்று குழம்ப வைக்கிற நண்டுக்கு - நள்ளி, களவன், அலவன்,குளிரம், கர்க்கடகம், கவைத்தாள், வானரப்பகை என்கிற பெயர்கள் இருந்தது என்ற புரிதலுடன் நாம், இந்தவார மெயின் சப்ஜெக்ட்டுக்குப் பயணப்படலாம்.

செவ்வாய், 31 மே, 2016

ரத்தம் குடிக்கும் குட்டி டிராகுலா!

 ‘‘நேத்தைக்கு ஆரம்பிச்ச மாதிரி இருந்திச்சு. பாருங்க... விறுவிறுன்னு 75 வாரம் வந்து, நம்மொழி செம்மொழி தொடர், பவள விழாவே கொண்டாடிடுச்சே சார்...’’ என்று பாம்பனில் இருந்து முகைதீன் தொடர்பில் வந்து ஆச்சர்யப்பட்டார். அத்தோடு விட்டாரா என்றால், இல்லை. ‘‘பவள விழானு சொல்லும் போது ஞாபகம் வருது. அது, பவளமா; பவழமா? எப்டி எழுதுனா சரி சார்?’’ - இந்த வாரத்துக்கான கொக்கியை வீசி விட்டு தொடர்பைத் துண்டித்தார்.

புதன், 25 மே, 2016

மச்சி.... (டோண்ட்) ஓபன் தி பாட்டில்!

துரையை Temple city - கோயில்களின் நகரம் - என்கிறோம். ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று கணக்கெடுத்துப் பார்த்ததில், கோயில்களின் எண்ணிக்கையை விட சரி பாதிக்கும் மேலாக மதுரையில் டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையே நிரம்ப இருக்கிறது. மக்கள் வந்து போவதும் கோயில்களை விட இவ்விடத்திலேயே அதிகம். எனில், மதுரையை டெம்பிள் சிட்டி என்பது சரியா; இல்லை டாஸ்மாக் சிட்டி என அழைப்பது சரியா? மதுரையை விடுங்கள்... ஒட்டுமொத்தமாக தமிழகமும் டாஸ்மாக் தேசமாக... குடிகாரர்களின் தேசமாக அல்லவா இன்றைக்கு இருக்கிறது?

திங்கள், 23 மே, 2016

முதலைக் கண்ணீர் வடித்தால் தப்பா?

‘‘மச்சான்... உனக்கு ஒரு ஆபத்துனு கேள்விப்பட்டதும், மனசு துடிச்சுப் போயிருச்சுடா. விஷயம் கேட்டதும், வேலைய அப்டியே போட்டுட்டு ஓடி வந்திட்டேன். எப்டிரா ஆச்சு. சொல்றா... சும்மா விடக்கூடாது, தூக்கிடலாம்...!’’ என்று துக்கம் விசாரிக்க வந்த ‘திடீர்’ நண்பர் (!?) துடிக்கிறாரா? உஷார். அவரது ‘துடிப்பு’ முதலைக் கண்ணீராகவும் இருக்கலாம்.

செவ்வாய், 17 மே, 2016

பாதையில் பணி கிடந்தா... போகாதீங்க!

‘‘அந்தப் பக்கம் பணி ரொம்ப இருக்கும். கொஞ்சம் ஜாக்கிரதையா போங்க ப்ரதர்...’’ என்று யாராவது அக்கறையாகச் சொன்னால், ‘‘நோ ப்ராப்ளம். பணி செய்து கிடப்பதே என் கடன்...’’ என்றெல்லாம் இனி ஃபிலிம் காட்டவேண்டாம். அந்த ஏரியாவில் பாம்புத் தொல்லை அதிகம் என்று அவர் உங்களுக்கு வார்னிங் கொடுக்கிறாராக்கும்! பணி என்றால், தமிழில் பாம்பு என்கிற ஒரு அர்த்தமும் இருக்கிற விஷயம் உங்களுக்கு தெரிந்திருந்தால், இந்தப் பிரச்னை வந்திருக்காது!

சனி, 14 மே, 2016

விஜய், அஜித், தனுஷ் - யார் அடுத்த முதல்வர்?


னிமையான தருணங்களில், அந்தந்த சீசனில் ஹிட்டடிக்கிற சினிமாப் பாடல்கள், நம்மையும் அறியாமல் மனதுக்குள் ஹம்மிங்காக வந்து போகும். உங்களையும் அறியாமல் இப்போது நீங்கள் முணுமுணுக்கிற பாடல் எது..? ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே...’, ‘அம்மா... எங்கள் அம்மா... இதயதெய்வம் அம்மா...’ - இதுமாதிரிப் பாடல்கள்தானே? விடிந்ததில் இருந்து, அடைகிற வரை அதைத்தானே கேட்டுக் கொண்டிருக்கிறோம்? இது தேர்தல் சீசன்!

புதன், 11 மே, 2016

ஒத்தி, முசலி, வெளில், சசம்!


‘‘அட! நேத்து வரைக்கும் நல்லவன் மாதிரி பழகினான். இன்னைக்கு கழுத்தறுத்துட்டானே... இந்தப் பொழப்பு, பச்சோந்தியை விடவும் கேவலம்டா...!!’’ - உங்கள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு தருணத்தில் அல்லது பல தருணங்களில் சக நண்பர்களைப் பற்றி இப்படிப் பேசி சலித்துக் கொண்டிருப்பீர்கள். இல்லையா? மனிதர்களின் மட்டமான குணங்களுக்கு, விலங்குகளை உதாரணம் காட்டிப் பேசுவது மகா தப்பு என்று இந்தத் தொடரில் தொடர்ந்து பேசி வருகிறோம். நிஜத்தில், பச்சோந்திகள் யாரையும் காக்கா பிடிப்பதற்கோ, காரியம் சாதித்துக் கொள்வதற்காகவோ, காலை வாருவதற்காகவோ உடலின் நிறத்தை மாற்றிக் கொள்வதில்லை. காக்கை, கழுகுகளிடம் இருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக உடலின் நிறத்தை அடிக்கடி மாற்றிக் கொள்கிறதே தவிர... நம்மைப் போல தில்லாலங்கடி எண்ணங்கள் அவற்றிடம் சத்தியமாகவே இல்லை.

திங்கள், 2 மே, 2016

சபாஷ் நாயுடு; தமாஷ் ஹாசன்!

‘‘தலைவர் கமலஹாசன், வெறும் நடிகர் மட்டுமே அல்ல. அவர், ஆறு கோடி தமிழர்களோட பெருமை. தமிழனோட மானத்தை, அகில உலகத்திலயும் உயர்த்தி பிடிக்கிற எங்க தலைவனை, உலக நாயகனைப் பத்தி எழுதறதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்கு? நீ அப்படி என்னத்த பெரிசா சாதிச்சுக் கிழிச்சிட்ட. அவரைப் பத்தி எழுதறத இத்தோட நிறுத்திக்கலை... மவனே....’’

- எப்படியும், படித்து முடித்ததும் நமது சகோதரர்கள், மேற்படியாக நாகரீகமாகவும், பிரசுரிக்க முடியாதபடிக்கு அ + நாகரீகமாகவும் எழுதித் தள்ளத்தான் போகிறார்கள். எழுதக் காத்திருப்பவர்களுக்கு ஸ்டார்ட்டிங் டிரபுள் வந்து விடக்கூடாது என்பதற்காக, முதல் கண்டன கடிதத்தை நானே எழுதி விட்டு... இனி ஆரம்பிக்கிறேன் கட்டுரையை!

சனி, 30 ஏப்ரல், 2016

ஒரு அகராதியும், சில யானைகளும்!

த்து நாள் குளிக்காமல், பவுடர் மட்டுமே பூசிக் கொண்டு திரிகிற ஆட்களை நாம் அடிக்கடி கிராஸ் பண்ணியிருப்போம். பல நேரம் அவர்களிடம் பவுடர் வாசனை பரிதாபமாக தோற்றுப் போயிருக்கும். அப்படிப்பட்ட ஆசாமிகள் கற்றுக் கொள்ள, பூனைகள் சில பாடங்கள் வைத்திருக்கின்றன. விலங்கு வகையறாக்களில் ‘சுத்தம் சோறு போடும்’ பழமொழியை மிகச் சரியாக பின்பற்றுபவை பூனைகள். ஒரு நிமிடம் சும்மா இருக்காது, நாக்கு கொண்டு உடல் முழுக்க திரும்பத் திரும்ப நக்கி சுத்தம் செய்யும் அழகை நீங்களே பார்த்திருக்கலாம்.

ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

சுசுந்தரி... கண்ணால் ஒரு சேதி...!

லியுடன், பூனைக்கு என்னதான் பிரச்னை? வாய்க்கால், வரப்பு தகராறா; குடுக்கல், வாங்கலில் குளறுபடியா... இல்லை, ‘கவுரவக் காதல்’ மேட்டர் ஏதேனும் இருக்கிறதா? எலியை கண்ணில் பார்த்து விட்டால், பசி இல்லாவிட்டாலும் கூட மீசை துடிக்க பாய்ந்து வருகிற பூனை, கவ்விக் கபளிகரம் செய்வது ஏன்? டிவியில் மட்டும்தான் டாம் தோற்று, ஜெர்ரி ஜெயிக்கிறதே தவிர, நிஜத்தில் இல்லை. ஆனாலும், எலி மேல் நமக்கு அத்தனை இரக்கம் வருவதில்லை. ஏன்? வீட்டில் செம டார்ச்சர் செய்து விடுகிறதில்லையா? ஒரு பொருளை வெளியில் வைக்க விடுகிறதா என்ன? புதினா இலைகளை கொஞ்சம் பிய்த்துப் போட்டால், முன்னங்கால்களை தலைக்கு மேலாக உயர்த்தி, அந்த திசைக்கே எலி ஒரு கும்பிடு போடும் என்று பாட்டி மருத்துவம் சொல்கிறது. எல்லாம் சரி. எலியை பற்றி தமிழ் என்ன சொல்கிறது?

வியாழன், 14 ஏப்ரல், 2016

தமிழ் வளர்த்த அமெரிக்க டாக்டர்!

ராமேஸ்வரம், திண்டுக்கல் பகுதிகளில் இருந்து வந்த இரு கடிதங்கள், இரு கேள்விகளை நம்முன் வைத்தன.
1) தமிழ் வளர்த்த வெளிநாட்டு அறிஞர்கள் பற்றி வார வாரம் வந்ததே...? இரண்டு, மூன்று வாரங்களாக அது வராததற்கு என்ன காரணம்? வெளியுறவுக்கொள்கை எதுவும் மாறி விட்டதா?
2) தமிழர் இலக்கியங்களில் நீர் சுழற்சி / நீர் மேலாண்மை பற்றி வண்டி, வண்டியாக குறிப்பிட்டிருக்கும் போது, வெகு சுருக்கமாக பட்டினப்பாலையை மட்டும் உதாரணம் காட்டி முடித்திருப்பது ஏன்?
- இரண்டு கேள்விகளுக்கும் பதில் ஒன்றுதான். இருக்கிற இடத்துக்குள் அத்தனை விஷயங்களையும் சொல்லி முடித்தாக வேண்டியிருக்கிறது. ஒரு வாரம் விடுபட்டாலும், அடுத்தடுத்த வாரங்களில் கூடுதல் தகவல்களை குறிப்பிட்டுக் கொண்டுதானே இருக்கிறோம்? மற்றபடி, நமது வெளியுறவுக் கொள்கையில் யாதொரு மாற்றமும் இல்லை என இந்த வாரமே நிரூபித்து விடலாமா?

புதன், 6 ஏப்ரல், 2016

தீபம் + ஆவளி = என்ஜாய்!

ந்தவாரத்தை ஒரு ஜெனரல் நாலெட்ஜ் கேள்வியுடன் ஆரம்பிக்கலாம், சரியா? சூரன், கூரன்... இவர்கள் யாரென்று கண்டுபிடிக்க முடிகிறதா? எப்போதும் நமக்கு அருகில், நம்மைச் சுற்றியே இருக்கிற இவர்கள் யாராக இருப்பார்கள் என்று யோசித்து வையுங்கள். மற்ற விஷயங்கள் பேசி முடித்து விட்டு, இவர்களைப் பார்க்கலாம்.

சனி, 26 மார்ச், 2016

அறிவு... 1, 2, 3, 4, 5, 6 !

‘அஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள் நண்பர்களை, அறிந்தவர்களை, தெரிந்தவர்களை ஆதங்கத்தோடு திட்டியிருக்கலாம். அதென்ன அஞ்சறிவு? அறிவியல் இதுபற்றி ஏதாவது சொல்கிறதா? ‘நம்மொழி’ தொடரில் இந்த சப்ஜெக்ட் எதற்காக?

வியாழன், 24 மார்ச், 2016

எருமைக்கு... எத்தனை வயசு?

நாம எல்லாமே டார்வின் பரிணாம வளர்ச்சி தியரி  (Theory of Evolution)  படித்திருப்போம். குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் என்று கற்று வைத்திருக்கிறோம். ஒரு நிலையில்லாமல், கொள்கை, கோட்பாடுகள் இல்லாமல் தாவிக் கொண்டே....யிருப்பதைப் பார்க்கும் போது அது உண்மைதானோ என்று நம்பித் தொலைக்க வேண்டியிருக்கிறது; இல்லையா? அறிவியல் பூர்வமாக அந்தத் தியரியி்ல் இன்றைக்கு வரைக்கும் சில சர்ச்சைகள் தீர்ந்தபாடில்லை. என்றாலும். மேற்படி தியரியின் படி, நமது மூதாதையர்கள் என அறியப்படுகிற குரங்கார் பற்றி தமிழ் என்ன சொல்கிறது என்று இதுவரை பார்க்காமல் இருப்பது, மெய்யாகவே மன வருத்தம் தருகிறது. என்பதால், இந்தவாரம்... மங்க்கி வாரம்!

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...