வெள்ளி, 25 டிசம்பர், 2015

கதம்... கதம்... குரகதம், துரகதம்!

‘‘படிக்கும் போதே உள்ளம் உருகிடுச்சு சார். கல்லறையில தமிழ் மாணவன்னு எழுதச் சொன்னது; தமிழ் புத்தகங்களை உடலோட சேர்த்து அடக்கம் பண்ண வெச்சதுனு... அட அடா...! ஒரு வெள்ளக்காரத்தொரயே நம்ம மொழி மேல இவ்வளவு பாசம் வெச்சிருந்தா, நாமெல்லாம் நம்ம மொழியை எவ்ளோ பாசமா பாதுகாக்கணும்..?’’ - கண்களைத் துடைத்தபடியே (!!), கலங்கிப் போய் பேசினார் தேனியில் இருந்து ஒரு நண்பர். உண்மைதான். வசிக்கிற ஊரின் வரலாற்றுச் சிறப்பு, உள்ளூர்காரர்களுக்கு எப்படித் தெரிவதில்லையோ, அதுபோலவே, பேசிக் கொண்டிருக்கிற தமிழ் மொழியின் மகத்துவமும் நம்மால் முழுமையாக இன்னும் உணர்ந்து கொள்ளப்படவில்லை. ரைட்டு! கண்களைக் கசக்குவதோடு கடமை முடிந்து விட்டதாக நினைத்து விடாமல், இனியாகிலும் நம்மொழியைக் கருத்தூன்றி கவனமாக படித்து, தவறின்றி எழுதி, பேசி, அதற்கு பெருமை சேர்க்க முயற்சிக்கலாம். சரியா?

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

சீயான் - விக்ரம்; சீயம் - சூர்யா?

‘செம்மொழி தொடரில் கன்டினியூட்டி ஜம்பிங் நிறைய இருக்கே. வயது, தோற்றத்துக்கு ஏற்ப மிருகங்களுக்கு தமிழ் மொழி சூட்டியிருக்கும் வெவ்வேறு பெயர்களை அறிமுகம் செய்ய ஆரம்பித்து, பாதியிலேயே நிறுத்தி விட்டால் எப்படி? ஞாபகமறதி பிரச்னைக்கு வல்லாரை கீரை ட்ரை பண்ணிப் பார்க்கலாமே!’ - திண்டுக்கல்லில் இருந்து இப்படி ஒரு கடுதாசி வந்திருந்தது. அடுத்தடுத்து, நிறைய முக்கிய விஷயங்கள் பேச வேண்டியிருந்ததால், கன்டினியூட்டி ஜம்பிங் இருந்திருக்கும். என்பதால், வல்லாரைக் கீரைக்கு இப்போது அவசரத் தேவையில்லை.

வெள்ளி, 18 டிசம்பர், 2015

கககபோ... புலிகேசி சொன்னா சரியா?

ம்சை அரசன் 23ம் புலிகேசி படம் ஞாபகம் இருக்கிறதுதானே? முறுக்கு மீசை புலிகேசி மன்னன் தனது அமைச்சரிடம் ‘கககபோ’ என்று ஸ்டைலாகச் சொல்வாரே! ‘கருத்துக்களை கச்சிதமாக கவ்விக்கொண்டாய் போ...’ என்கிற நீ...ள (!?) சொற்றொடரை படு சுருக்க்க்க்கமாக சொல்கிறாராம். நீங்களும், நானும் கூட சிறு வயதில் (இப்ப என்ன பெரிசா வயசாயிடுச்சி... என்கிற டென்ஷன் வேண்டற்க!) நண்பர்களிடம் இப்படி சொற்களின் சுருக்க வார்த்தைகளாக பேசி கிண்டலடித்திருப்போம். இல்லையா? தமிழ் இலக்கணப் படி இது சரியா?

புதன், 16 டிசம்பர், 2015

நியாயமாரே... இந்த ‘பீப்’ பயலுவல என்ன செய்யப் போறீக?

வரது பெற்றோர் காதல் திருமணம் செய்தவர்கள். என்பதால், அவர்களிடம் கேட்டிருந்தாலே விளக்கம் கிடைத்திருக்கும். ‘இன்னின்ன காரணத்துக்காகத்தான் லவ் பண்றோம்... ஆ, டண்டணக்கா!’ என்று அடுக்குமொழியில் அழகான விளக்கத்தை அப்பா கொடுத்திருப்பார். அதற்கும் மேலாக, ‘இணையத்தில வேண்டாண்டா தம்பு; விபரீதம் ஆயிருச்சினா வம்பு’ என்று எதுகை மோனையாக அட்வைஸூம் பண்ணியிருப்பார். இணையப் பொதுவெளிக்கு வந்து சந்தேகம் கேட்டிருக்க தம்புவுக்கு அவசியமே ஏற்பட்டிருக்காது.

சனி, 12 டிசம்பர், 2015

பெரியாறு உடையுமா; கேரளா அழியுமா?

‘‘சென்னையில் 24 மணிநேரத்தில் 50 செ.மீ. மழை பெய்தது போல, பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்தால் அது, அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறிவிடும் என கேரள மக்கள் பயப்படுகின்றனர். பெரியாறு அணை தனது உறுதியை இழந்து விட்டது. அது உடையுமானால், கேரள மாநிலத்தில் உள்ள ஐந்து மாவட்ட மக்கள் பெரிய பாதிப்புக்குள்ளாவார்கள். புதிய அணை கட்டுவது ஒன்றே தீர்வு...’’ - என்கிற கலகக்குரல் மூலமாக, ஓய்ந்திருந்த பெரியாறு அணை பிரச்னையில் மீண்டும் நெருப்பு பற்ற வைக்கிறார் உம்மன் சாண்டி - சோலார் பேனல், சரிதா நாயர் CD விவகாரங்களில் இருந்து மலையாள மக்களின் கவனத்தை உடனடியாக திசை திருப்ப விரும்புகிற கேரள மாநிலத்தின் முதலமைச்சர்.

வெள்ளி, 11 டிசம்பர், 2015

ஊரழித்த மழைவெறியும் சீரழிக்கும் மதவெறியும்!

சென்னையை புரட்டிப் போட்ட பெருமழையும், அதன் பிறகான கொடுவெள்ளமும், ஆர்எஸ்எஸ் போன்ற சில இந்து மத அடிப்படைவாத அமைப்புகளின் நிஜ முகத்தை உலகின் வெளிச்சத்துக்குக் காட்டிச் சென்றிருக்கின்றன. (வார்த்தை ஜாடனைகள், வர்ணனைகள் இல்லாமல், சுருக்க்க்கமாக கட்டுரையை முடிக்க வேண்டியிருப்பதால், முதல் வரியிலேயே மேட்டருக்கு வந்தாச்சு!).

சனி, 5 டிசம்பர், 2015

சுவிஸ் வங்கியில்... வெள்ளம்?

‘உயிரெழுத்து, மெய்யெழுத்தெல்லாம் மூணாம் வகுப்புல படிச்சது சார். ரொம்ப நாளைக்கப்புறம் ஞாபகப்படுத்தியிருக்கீங்க...’ என்று தேநீர் குடிக்கும்போது நண்பர் உள்ளம் உருகினார். படிப்பதெல்லாம், பரிட்சைக்காக மட்டுமே என்று நினைப்பதுதான், நாம் இன்னும் டாப் கியரடித்து, வேகம் பிடிக்க முடியாமல் இருப்பதற்கு மிகப்பெரிய காரணம் (எம்மாம் பெரிய கண்டுபிடிப்பு!?). படிப்பதை, வாழ்க்கையில் பயன்படுத்தக் கற்றுக் கொண்டோமானால், பிரச்னைகள் வரும் போது டோண்ட் வொர்ரி முஸ்தஃபா!

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...