சனி, 22 ஆகஸ்ட், 2015

யானை, யானை... எத்தனை யானை?


‘போன வாரம் கட்டுரை படிச்சதும் ரொம்ப, ரொம்ப ஏமாந்து போயிட்டோம் சார்...’ என்று சில அழைப்புகள் வந்தன. நிஜ அர்த்தத்தில் சொல்கிறார்களா அல்லது இன்றைக்கு நாம் பயன்படுத்துகிற ‘டகால்டி’ அர்த்தத்தில் சொல்கிறார்களா என்று சிறிதுநேரம் புலப்படவில்லை (ஏமாந்து என்கிற தமிழ்ச் சொல்லுக்கு மகிழ்ச்சி, இன்பம் என்பதே நிஜ அர்த்தம் என்று கடந்தவாரம் படித்தோம்... கேட்ச் பண்ணீட்டிங்களா?). இதுபோல இன்னும் நிறைய, நிறைய தமிழ்ச் சொற்களை, அதன் நிஜ அர்த்தம் இன்னதென்று தெரியாமல் / புரியாமல் நாம் ‘டேமேஜ்’ பண்ணிக் கொண்டிருக்கிறோம். கடந்தவாரம் பார்த்த கட்டடம் - கட்டிடம், கறுப்பு - கருப்பு இதெல்லாம் அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்துகிற உதாரணங்கள்.

சனி, 15 ஆகஸ்ட், 2015

ஏமாந்து போவதும்... இன்பமே!

ரு வார்த்தை மாறினாலும், அர்த்தம் அம்பேல் ஆகி விடுகிற சொற்களை கடந்தவாரம் ஆரம்பித்தோம். ‘நிஜம்தான் சார். படிக்கிற காலத்தில், அரம் செய்ய விரும்புனு ஆத்திச்சூடி எழுதிட்டேன். அரம் செய்யணும்னா திருப்பாச்சேத்தி பக்கம்தான் போகணும்பா. இது, அறம் செய்ய விரும்பு அப்டின்னு கரெக் ஷன் போட்டுட்டு, மிஸ் பின்னிட்டாங்க...’ என்று வாசகர் லைனில் வந்தார். இதுமாதிரி இன்னும் நிறைய வார்த்தைகள் இருக்கின்றன. தெரிந்து கொண்டால் மிஸ்சிடம் அடி வாங்காமல் தப்பிக்கலாம். ஆரம்பிக்கலாமா?

சனி, 8 ஆகஸ்ட், 2015

பாண்ட்... ஜேம்ஸ்பாண்ட்!


‘கட்டுரை ஒண்ணு எழுதிகிட்டிருக்கேன் சார். ஒரு சின்ன டவுட்டு. வியர்வை, வேர்வை... எந்த வார்த்தை சரி? ரைட்டிங் பாதியில நிக்குது. அர்ஜென்ட்டா கிளியர் பண்ணமுடியுமா?’ - நண்பர் தொலைபேசியில் வந்தார். கிளியர் பண்ணிட்டாப் போச்சு. ‘வியர்வை, வேர்வை இரண்டுமே சரிதான். சார் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். தப்பில்லை’ என்றேன். ‘அதெப்பிடி சார்?’ என்றார். வியர்வை மேட்டர் மட்டுமில்லை. இன்னும் நிறைய வார்த்தைகள் இருக்கின்றன. இரு வகையாக எழுதப்படுகிற சொற்கள் (Words of double spelling) என்று தமிழில் ஒரு பட்டியலே இருக்கிறது. எப்படி எழுதினாலும், அர்த்தம் மாறாது. தப்பும் இல்லை. அந்த லிஸ்ட்டில் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா?

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

தமிழ்... படிக்கலாம்; தடைகள் உடைக்கலாம்!

லகின் மிக மூத்த மொழியாம் தமிழை இன்றைக்கும் உயிர்ப்போடு, துடிப்போடு இயங்கச் செய்து கொண்டிருப்பது, பூமிக் கிரகமெங்கும் பரவிக் கிடக்கும் கோடிக்கணக்கான அதன் இளம் புதல்வர்கள் என்பதில் மாற்றுக்கருத்திருக்காது. உயிரோடு இருத்தல் மட்டுமே பெருமை அல்ல. இயக்கம்! உலகின் தொல் மொழியாக இருந்தும், இன்றைக்கும் இளமைத்துடிப்புடன் கணினி யுகத்திலும் கச்சிதமாக, பெரு ஆற்றலுடன் இயங்கிக் கொண்டிருப்பதே பெருமை. அர்ப்பணிப்புடன் கூடிய தங்களது மாபெரும் உழைப்பால், சேவையால், தமிழ் மொழிக்கு ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் காலத்தால் அழியாத பெருமையும் தேடித் தந்திருக்கும் / தந்து கொண்டிருக்கும் உன்னதப் புதல்வர்கள் அனேகரை நம்மொழி கொண்டிருக்கிறது. அத்தகைய உன்னதப் புதல்வர்களில் முக்கியமானவர்... மறைந்த, மக்கள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்கள். அவரது மறைவு தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஈடு செய்ய இயலாத இழப்பு. இந்த வார ‘நம்மொழி செம்மொழி’ தொடர், அவருக்கு சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

Thank You... கலாம் சார்!

லகின் பல திசைகளிலும் நிறைந்திருக்கிற பல கோடி இளைஞர்களின் ஒற்றை உச்சரிப்பு - Thank You... கலாம் சார்! கண்களில் வடிகிற கண்ணீர் துடைத்தபடி - Thank You... கலாம் சார்!அவர் இல்லை. ஆனால், வகுத்துத் தந்த வாழ்க்கை நெறிமுறைகள், வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. அவை அழிவதில்லை. சாகாவரம் கொண்டவை. ஒரு நல்ல ஆசிரியராக, வழிகாட்டியாக, நண்பராக, நிர்வாகியாக, உதாரண மனிதராக அவர் குழந்தைகளின், மாணவர்களின் கரம் பிடித்து வழிகாட்டியிருக்கிறார். தனது வாழ்க்கையை பாடமாக கொடுத்திருக்கிறார். பிரகாச எதிர்காலம் தேடுகிற இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய வேண்டிய வழிமுறைகளை வரையறுத்து கொடுத்திருப்பதால் ராமேஸ்வரம் தீவில், அவர் ஓய்வெடுக்கிற இடம் பார்த்து அவர்கள் சொல்கிறார்கள் - Thank You... கலாம் சார்!

சனி, 1 ஆகஸ்ட், 2015

டோனியிடம் என்ன சொன்னார் அஸ்வின்?

‘அட! தமிழ் இலக்கணத்தில் இவ்ளோ விஷயம் இருக்கா? படிக்கிற காலத்தில மிஸ் பண்ணிட்டேன். முழுசா தெரிஞ்சுக்கணும்னா எது சார் படிக்கணும்?’ - இப்படி ஒரு நண்பர் அலைபேசியிருந்தார். நிஜத்தில், தமிழ் இலக்கணம் ரொம்ப சுலபம். அதேசமயம், அடிப்படையான விஷயங்களை தெரிந்து கொண்டால் மட்டுமே, முங்கு நீச்சல் அடிக்கமுடியும். பேஸ்மென்ட் ஸ்ட்ராங் என்றால், தமிழாசிரியர்களின் ஆலோசனைப்படி நீங்கள் நன்னூல் படிக்கலாம்.

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...