முன்குறிப்பு: இது வழக்கமான, சினிமா விமர்சனக் கட்டுரை அல்ல.
தமிழில் வெளிவருகிற பிரமாண்ட சினிமாக்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். தெய்வப்புலவராவது ஒன்றரை அடியில் எழுதினார். அவருக்கு சவால் விடுகிறது போல, ஒற்றை வரியில் கதை தயார் செய்து கொண்டு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் துணையுடன் காட்சிகளைக் கோர்த்து தைப்பது முதல் வகை. வலுவான கதைக் களத்தை கையில் எடுத்துக் கொண்டு, கதையின் பயணத்துக்கு கூடுதல் பலம் / வேகம் சேர்க்க, கம்ப்யூட்டர் வரைகலையை வெளியில் தெரியாத, கண்களை உருத்தாத வகையில் இழையோட விடுவது இரண்டாவது வகை. ராஜமவுலியின் பாகுபலி... இரண்டாவது வகை!திங்கள், 27 ஜூலை, 2015
சனி, 25 ஜூலை, 2015
ஓ மானே! ஓ குயிலே!! ஓ குரங்கே!!!
‘‘இந்த பட்ஜெட்டிலாவது இரட்டை ரயில்பாதை திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு அறிவிப்பு வருமா?’’ என்று மக்கள் கேள்வி எழுப்பினார்கள். - இந்த இடத்தில் ‘?’ சரி. அதாவது, முற்றுப்புள்ளி, கேள்விக்குறி, ஆச்சர்யக்குறி இதெல்லாம், வாக்கியம் முடிகிற இடத்தில் மட்டும்தான் வரணும். சரியா?
வெள்ளி, 10 ஜூலை, 2015
மாதர் தம்மை இழிவு செய்யும்...
புள்ளிராஜா மேட்டர் நிறையப் பேருக்கு நிறைய சந்தேகங்களை கிளப்பியிருக்கிறது. சந்தேகமும், சந்தோஷமே. தீர்வு கிடைத்து விடும் இல்லையா? ஒருவரது பெயரை, ஒரு அமைப்பின் பெயரைச் சுருக்கிச் சொல்கிற போது (ஐக்கிய நாடுகள் சபை - ஐ.நா. சபை, எம்.ஜி.ஆர்) முற்றுப்புள்ளி அவசியம் என்று கடந்தவாரத் தொடரில் பார்த்தோம். எழுத்துக்கு நடுவில் வருவது எப்படி முற்றுப்புள்ளியாக (Full Stop) இருக்கமுடியும் என்று நண்பர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள். நிஜம்தான். கால்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, முற்றுப்புள்ளி என்கிற நான்கே விஷயங்களுடன் புள்ளி மேட்டர் முடிந்து விடவில்லை. இன்னும் ரெண்டு பாக்கி இருக்கிறது. புள்ளி (Point), முப்புள்ளி (Ellipsis).
சனி, 4 ஜூலை, 2015
புள்ளிராஜாவுக்கு எத்தனை புள்ளி?
வெள்ளி, 3 ஜூலை, 2015
காரணம் இதுதானா கமல் சார்?
உத்தமவில்லன் சினிமாவின் தோல்விக்கு என்ன காரணம்? ஆளாளுக்கு ஒரு காரணம் சொல்கிறார்கள். ‘பூனைக்குட்டி’ கூட, தோல்விக்கான காரணம் விளக்கி ஒரு விரிவான கட்டுரை (உத்தமவில்லனா... இம்சை அரசனா? படிக்க, க்ளிக் செய்யவும்: http://poonaikutti.blogspot.com/2015/05/blog-post_12.html) எழுதி வெளியிட்டது. படம் வெளியாகி ரொம்ப, ரொம்ப நாள் கழித்து, தோல்விக்கான காரணத்தைக் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்திருக்கிறார் உலகநாயகன்.
அவரது லேட்டஸ்ட் சினிமா ‘பாபநாசம்’ திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியின் போது, உ.வி. தோல்விக்கான காரணத்தை அவரே அறிவித்தார். என்னதான் காரணமாம்?
அவரது லேட்டஸ்ட் சினிமா ‘பாபநாசம்’ திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியின் போது, உ.வி. தோல்விக்கான காரணத்தை அவரே அறிவித்தார். என்னதான் காரணமாம்?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)