வியாழன், 28 மே, 2015
சச்சின் SUBJECT பார்க்கலாமா?
திங்கள், 25 மே, 2015
எக்மோர் ஸ்டேஷனில் என்ன பிரச்னை?
வெள்ளி, 22 மே, 2015
ஜஸ்ட் மிஸ்டுடா சாமீய்...!
மனநிலை பிறழ்வு, பக்குவமின்மை, வயதுக்குரிய மூளை வளர்ச்சியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் காரணமாக, அன்பாக பழகிய பெண்ணின் கழுத்தில் தாலியைக் கட்டித் தொலைத்து விடுகிற அப்பாவி ஆண்களை தமிழ் சினிமாக்கள் நிறையவே அறிமுகம் செய்திருக்கின்றன. சிப்பிக்குள் முத்து படத்தில் கமல்ஹாசன், சின்னத்தம்பி படத்தில் பிரபு என்று நிறையவே பார்த்து சலித்திருக்கிறோம். அறியாமல் நடக்கிற அந்த தாலி கட்டு சம்பிரதாயமே, கதையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும். அந்தக் காட்சிகள் எல்லாம் ஏற்படுத்தாத ஒரு வெகுஜன பிரபல தாக்கத்தை, எல்லாம் வல்ல சுப்பிரமணிய சுவாமியின் தாலி கட்டு முயற்சி உருவாக்கி சாதித்திருக்கிறது. எந்த மீடியா, டிவி, சமூக வலைத்தளங்களைத் திருப்பினாலும், தாலியும் கையுமாக மணப்பெண்ணை நெருங்கிக் கொண்டிருக்கிறார் சுவாமி!
சனி, 16 மே, 2015
கரும்பு தின்னக் கூலி வேணுமா?
புதன், 13 மே, 2015
அம்மா வந்தாச்சு...!
மே 10ம் தேதி அன்னையர் தினம் என்று குறிப்பிடும் காலண்டர் காரர்கள் இனி, மே 11ம் தேதி அம்மா தினம் என அச்சடிக்கலாம். ஒன்றும் தப்பில்லை. கடைசி பாலில் சிக்ஸ் அடித்து ஜெயிக்க வைத்தது போல, தீர்ப்பு தந்த திகைப்பில் இருந்து பல கோடி தமிழினம் இன்னும் வெளிவந்த பாடில்லை. தீர்ப்பைக் கேட்டதும் அம்மாவுக்கு அடுத்தபடி அதிக சந்தோஷப்பட்டிருப்பார் ஓ.பி.எஸ். எவ்வளவு நாள்தான் முதலமைச்சர் மாதிரியே நடிக்க முடியும்? தீர்ப்பு வந்த சிறிதுநேரத்தில் போயஸ் கார்டனுக்கு காரில் வந்த ஓ.பி.எஸ். முகத்தில் ஒரு ‘அப்பாடா’ (அம்மாடா?!) தெரிந்தது. உலகத்திலேயே, அழுதபடி பதவியேற்று, சிரித்தபடி ராஜினாமா செய்கிற ஒரே முதல்வர் இவர்தான் என்று வந்த கமெண்ட்களில்... சத்தியம் இருக்கிறது! இனி, அணிவகுக்கின்றன அம்மா கொண்டாட்டங்கள்...
செவ்வாய், 12 மே, 2015
உத்தமவில்லனா... இம்சை அரசனா?
நடிப்பு என்கிற சப்ஜெக்டைப் பொறுத்த வரைக்கும், இன்றைய தேதிக்கு, உலக நாயகன் எனப்படுகிற கமல் ஹாசன்தான் தமிழ் சினிமாவின் அத்தாரிட்டி. நடிக்கிற விஷயத்தில், அவரை அடித்துக் கொள்வதற்கெல்லாம்... தேடினாலும், ஆள் கிடைக்காது. மகாநதி, நாயகன், குணா... என்று அவரது மாறுபட்ட நடிப்புக்கு உதாரணங்கள் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆகையால், ரசிக சிகாமணிகள், ஆஸ்கார் நாயகன் என்று அவரை அன்போடு (சிறிதுகாலம்) அழைத்தார்கள். கிடைக்காத வருத்தமோ... ஆஸ்கார் ரவிச்சந்திரன் கோபித்துக் கொள்வார் என்ற எண்ணமோ... ஆஸ்கார் நாயகன் பட்டம், உலக நாயகன் ஆகி, இன்றளவுக்கும் தொடர்கிறது. ஓவர் பில்டப் ஒர்க் அவுட் ஆகாது என்பதால் (இதற்கும் அவரது படங்களை உதாரணம் காட்டலாம்), உலக நாயகனின் ‘உத்தமவில்லன்’ படம் குறித்த நமது கட்டுரையை நேரடியாகவே துவக்கி விடலாம்... சரிதானே?
திங்கள், 11 மே, 2015
மாமன்னா... நீ ஒரு மாமா மன்னா!
வாழ்க்கைக்கு மட்டுமல்ல... வார்த்தைக்கும் இடைவெளி அவசியம். சேரவேண்டிய இடத்தில் சேர்ந்தும், பிரிய வேண்டிய நேரத்தில் பிரிந்தும் இருக்காவிட்டால்... அர்த்தம் கெட்டு விடும். அதிகம் குழப்பிக் கொள்ளவேண்டாம். 25வது வாரத்தை முடிக்கும் போது, ‘அணிவகுப்பு’ பார்த்தோம். அணிவகுப்பு என்று சேர்த்தால், பேரணி, ஊர்வலம். அணி வகுப்பு என்று பிரித்தால் அணி இலக்கணம் கற்றுக் கொள்கிற வகுப்பு. இல்லையா?
ஞாயிறு, 3 மே, 2015
வாழ்த்துக்கள்... சொன்னால் என்ன தப்பு?
வாழ்த்துக்கள் சொல்கிற குஷியிலும் கூட, நம்மொழியை மறந்து விடக்கூடாது. வாழ்த்துக்கள்... இது சரியான வார்த்தைதானா? காலம், காலமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். எழுதிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும், வாழ்த்துக்கள் என்கிற பதம் தப்பு என்கிறார்கள் தமிழ் அறிஞர்கள்.
வெள்ளி, 1 மே, 2015
என்று தீரும் இந்த அவலம்...?
ஆயிரம் வார்த்தைகள் தருகிற அழுத்தத்தை விடவும், ஒரு புகைப்படம் தருகிற தாக்கம்... மிக அதிகமானது. மிக, மிகவும் அதிகமானது. தேர்ந்த சில புகைப்படக்காரர்கள், ஒரே ஒரு புகைப்படம் மூலமாக உலக சரித்திரத்தில் மாற்றம் தந்திருக்கிறார்கள். புகைப்படங்களின் மதிப்பு பூனைக்குட்டிக்கும் மிக நன்றாகவே தெரியும். உலகின் ஆகச்சிறந்த புகைப்படங்களை தொகுத்து தோரணம் கட்டுவதற்காகவே ‘பேசும்படம்’ என்கிற பகுதியை அது தொடர்ச்சியாக வெளியிட்டு வருவது நீங்கள் அறிந்ததே. பேசும்படத்தில் இம்முறை என்னென்ன ஸ்பெஷல்....?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)