வியாழன், 28 மே, 2015

சச்சின் SUBJECT பார்க்கலாமா?

டிப்பதற்கு ரொம்பக் கடினமானது எனக் கருதப்படுகிற (நிஜத்தில் ரொம்ப, ரொம்ப ஈஸிங்க!) தமிழ் இலக்கணத்தை இன்றைய ‘இணைய’ தலைமுறை இளைஞர்களுக்கு, அவர்களது ‘மொழிநடை’யில் கொண்டு போய்ச் சேர்க்கிற முயற்சியே இந்த ‘நம்மொழி செம்மொழி’ தொடர். 29வது வாரம் வந்தாச்சு. ஏறக்குறைய தொடரின் கிளைமாக்ஸ் பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். தமிழ் இலக்கணத்தில் தெரிந்து கொள்ள கடலளவுக்கு இருக்கிறது. ஆனாலும், இது அறிமுகம் செய்கிற தொடர்தானே? பழகி விட்டால்... அப்புறம் பின்னி பெடலெடுக்கலாம்தானே? அதனால், சில முக்கியமான விஷயங்களை இனி வருகிற பகுதிகளில் ஸ்பீடாக பார்க்கலாம்... ஓகே?

திங்கள், 25 மே, 2015

எக்மோர் ஸ்டேஷனில் என்ன பிரச்னை?


வாழ்க்கைக்கு மட்டுமல்ல... வார்த்தைக்கும் கூட தேவையான நேரத்தில் இடைவெளி முக்கியம் என 26வது தொடரின் ஆரம்பத்தில் ஒரிரு பத்திகள் பார்த்தோம். ‘ஏன்... பிரித்தால் என்ன தப்பு? என்ன கெட்டுப் போகும்?’ என்று (சற்று தாமதமாக) ஒரு நண்பர் கடிதம் போட்டிருக்கிறார். இந்த வாரத்தை அவருக்கு ‘டெடிகேட்’ செய்யலாம். தவறான முறையில் பிரித்து எழுதினால், அர்த்தம் மாறி அனர்த்தம் ஆகிவிடும். மட்டுமல்ல... பக்கத்தில் இருப்பவர்கள் ‘டின்’ கட்டி விடுகிற அபாயத்தையும் நமது வார்த்தைகள் ஏற்படுத்தி விடும். ‘அறிவில்லாதவன்’ என்ற சொல் பற்றி கடந்தவாரம் பார்த்தோம். அதில் இருந்தே ஆரம்பிக்கலாம். அறிவில்லாதவன் - இந்த வார்த்தையை அறிவு + இல்லாதவன் என்று பிரிப்பதற்கும், அறிவில் + ஆதவன் என்று பிரிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதுதானே?

வெள்ளி, 22 மே, 2015

ஜஸ்ட் மிஸ்டுடா சாமீய்...!

னநிலை பிறழ்வு, பக்குவமின்மை, வயதுக்குரிய மூளை வளர்ச்சியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் காரணமாக, அன்பாக பழகிய பெண்ணின் கழுத்தில் தாலியைக் கட்டித் தொலைத்து விடுகிற அப்பாவி ஆண்களை தமிழ் சினிமாக்கள் நிறையவே அறிமுகம் செய்திருக்கின்றன. சிப்பிக்குள் முத்து படத்தில் கமல்ஹாசன், சின்னத்தம்பி படத்தில் பிரபு என்று நிறையவே பார்த்து சலித்திருக்கிறோம். அறியாமல் நடக்கிற அந்த தாலி கட்டு சம்பிரதாயமே, கதையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும்.  அந்தக் காட்சிகள் எல்லாம் ஏற்படுத்தாத ஒரு வெகுஜன பிரபல தாக்கத்தை, எல்லாம் வல்ல சுப்பிரமணிய சுவாமியின் தாலி கட்டு முயற்சி உருவாக்கி சாதித்திருக்கிறது. எந்த மீடியா, டிவி, சமூக வலைத்தளங்களைத் திருப்பினாலும், தாலியும் கையுமாக மணப்பெண்ணை நெருங்கிக் கொண்டிருக்கிறார் சுவாமி!

சனி, 16 மே, 2015

கரும்பு தின்னக் கூலி வேணுமா?

‘புலி உருமுது.. புலி உருமுது...’ என்று ஒரு சினிமா பாட்டு சில காலம் முன் பட்டையைக் கிளப்பியது, கேட்டிருப்பீர்கள். ஹீரோ வர்றாராம்! இது என்ன அணி? உயர்வு நவிற்சியா அல்லது இல்பொருளா? குழப்பமே வேண்டாம். இது உருவக அணி. அதுபோல, இதுபோல என்று கம்பாரிசன் செய்தால் அது உவமை என்று பார்த்திருக்கிறோம். ‘அதுதாண்டா இது; இதுதாண்டா அது!’ என்று ஆணியடித்தது போல சத்தியமடித்துச் சொன்னால்... அது உருவகம். ஹீரோவை புலி என்று வர்ணித்திருக்கிறார்களே... அப்படியானால், இதை உயர்வு நவிற்சி அணி என்று சொல்லக்கூடாதா?

புதன், 13 மே, 2015

அம்மா வந்தாச்சு...!

மே 10ம் தேதி அன்னையர் தினம் என்று குறிப்பிடும் காலண்டர் காரர்கள் இனி, மே 11ம் தேதி அம்மா தினம் என அச்சடிக்கலாம். ஒன்றும் தப்பில்லை. கடைசி பாலில் சிக்ஸ் அடித்து ஜெயிக்க வைத்தது போல, தீர்ப்பு தந்த திகைப்பில் இருந்து பல கோடி தமிழினம் இன்னும் வெளிவந்த பாடில்லை. தீர்ப்பைக் கேட்டதும் அம்மாவுக்கு அடுத்தபடி அதிக சந்தோஷப்பட்டிருப்பார் ஓ.பி.எஸ். எவ்வளவு நாள்தான் முதலமைச்சர் மாதிரியே நடிக்க முடியும்? தீர்ப்பு வந்த சிறிதுநேரத்தில் போயஸ் கார்டனுக்கு காரில் வந்த ஓ.பி.எஸ். முகத்தில் ஒரு ‘அப்பாடா’ (அம்மாடா?!) தெரிந்தது. உலகத்திலேயே, அழுதபடி பதவியேற்று, சிரித்தபடி ராஜினாமா செய்கிற ஒரே முதல்வர் இவர்தான் என்று வந்த கமெண்ட்களில்... சத்தியம் இருக்கிறது! இனி, அணிவகுக்கின்றன அம்மா கொண்டாட்டங்கள்...

செவ்வாய், 12 மே, 2015

உத்தமவில்லனா... இம்சை அரசனா?

டிப்பு என்கிற சப்ஜெக்டைப் பொறுத்த வரைக்கும், இன்றைய தேதிக்கு, உலக நாயகன் எனப்படுகிற கமல் ஹாசன்தான் தமிழ் சினிமாவின் அத்தாரிட்டி. நடிக்கிற விஷயத்தில், அவரை அடித்துக் கொள்வதற்கெல்லாம்... தேடினாலும், ஆள் கிடைக்காது. மகாநதி, நாயகன், குணா... என்று அவரது மாறுபட்ட நடிப்புக்கு உதாரணங்கள் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆகையால், ரசிக சிகாமணிகள், ஆஸ்கார் நாயகன் என்று அவரை அன்போடு (சிறிதுகாலம்) அழைத்தார்கள். கிடைக்காத வருத்தமோ... ஆஸ்கார் ரவிச்சந்திரன் கோபித்துக் கொள்வார் என்ற எண்ணமோ... ஆஸ்கார் நாயகன் பட்டம், உலக நாயகன் ஆகி, இன்றளவுக்கும் தொடர்கிறது. ஓவர் பில்டப் ஒர்க் அவுட் ஆகாது என்பதால் (இதற்கும் அவரது படங்களை உதாரணம் காட்டலாம்), உலக நாயகனின் ‘உத்தமவில்லன்’ படம் குறித்த நமது கட்டுரையை நேரடியாகவே துவக்கி விடலாம்... சரிதானே?

திங்கள், 11 மே, 2015

மாமன்னா... நீ ஒரு மாமா மன்னா!

வாழ்க்கைக்கு மட்டுமல்ல... வார்த்தைக்கும் இடைவெளி அவசியம். சேரவேண்டிய இடத்தில் சேர்ந்தும், பிரிய வேண்டிய நேரத்தில் பிரிந்தும் இருக்காவிட்டால்... அர்த்தம் கெட்டு விடும். அதிகம் குழப்பிக் கொள்ளவேண்டாம். 25வது வாரத்தை முடிக்கும் போது, ‘அணிவகுப்பு’ பார்த்தோம். அணிவகுப்பு என்று சேர்த்தால், பேரணி, ஊர்வலம். அணி வகுப்பு என்று பிரித்தால் அணி இலக்கணம் கற்றுக் கொள்கிற வகுப்பு. இல்லையா?

ஞாயிறு, 3 மே, 2015

வாழ்த்துக்கள்... சொன்னால் என்ன தப்பு?

ண்டிகை காலங்கள், மனம் மகிழ்விக்கிற வசந்தகாலங்கள். சில பண்டிகைகளை கடந்து விட்டோம். சில சமீபிக்கின்றன. புத்தாண்டு, பொங்கல் கொண்டாட்டங்கள் முடிந்து விட்டன. எஸ்எம்எஸ், இ-மெயில், வாட்ஸ் அப், ஃபேஸ் புக் என்று ஒன்று பாக்கி விடாமல் அத்தனையிலும் ‘வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்...!’ என்று விர்ச்சுவல் கைகுலுக்கல்கள் நடத்தி ஓய்ந்திருக்கிறோம், இல்லையா?
 வாழ்த்துக்கள் சொல்கிற குஷியிலும் கூட, நம்மொழியை மறந்து விடக்கூடாது. வாழ்த்துக்கள்... இது சரியான வார்த்தைதானா? காலம், காலமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். எழுதிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும், வாழ்த்துக்கள் என்கிற பதம் தப்பு என்கிறார்கள் தமிழ் அறிஞர்கள்.

வெள்ளி, 1 மே, 2015

என்று தீரும் இந்த அவலம்...?

யிரம் வார்த்தைகள் தருகிற அழுத்தத்தை விடவும், ஒரு புகைப்படம் தருகிற தாக்கம்... மிக அதிகமானது. மிக, மிகவும் அதிகமானது. தேர்ந்த சில புகைப்படக்காரர்கள், ஒரே ஒரு புகைப்படம் மூலமாக உலக சரித்திரத்தில் மாற்றம் தந்திருக்கிறார்கள். புகைப்படங்களின் மதிப்பு பூனைக்குட்டிக்கும் மிக நன்றாகவே தெரியும். உலகின் ஆகச்சிறந்த புகைப்படங்களை தொகுத்து தோரணம் கட்டுவதற்காகவே ‘பேசும்படம்’ என்கிற பகுதியை அது தொடர்ச்சியாக வெளியிட்டு வருவது நீங்கள் அறிந்ததே. பேசும்படத்தில் இம்முறை என்னென்ன ஸ்பெஷல்....?

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...