திங்கள், 27 ஏப்ரல், 2015

சிலையில்லா கருப்பனும்... 328 கிடாக்களும்!

மிழகம், திருவிழாக்களின் தேசம். வினோத, வித்தியாச திருவிழாக்களுக்கு பஞ்சமே இல்லை. சுவாமிக்கு குவார்ட்டர் பாட்டில்களை தட்சணை வைத்து (ஐஸ் வைத்து?!) அப்ளிக்கேஷன் போடுவது துவங்கி, கோயிலுக்குள் கார மிளகாயை அரைத்து அம்மனுக்குப் பூசுவது, காசை வெட்டிப் போடுவது... என நம்மூரில் நடக்கிற வித்தியாசத் திருவிழாக்கள், பி.எச்டி பண்ண மிகவும் தகுந்த சப்ஜெக்ட்.. ஒவ்வொரு திருவிழாவுக்குப் பின்னணியிலும் பலமான நம்பிக்கைகள் உண்டு. காசை வெட்டிப் போட்டால் போதும்... துரோகம் செய்தவரின் சீன் ஜிந்தாபாத் ஆகிவிடுமாம். அம்மனுக்கு மிளகாய் அரைத்துப் பூசினாலும் அதே எஃபக்ட்தான். ஒரு லட்சம் கொசுக்கள் ஒரே நேரத்தில் கடித்தது போல, தப்புத்தாண்டா பார்ட்டிகள் தலைகீழாகப் புரண்டு உருளவேண்டிய அளவுக்கு அம்மன் படுத்தி எடுத்து விடுமாம். இந்த வரிசையில்... கருப்பு நிற வெள்ளாடுகளின் ‘கதையை முடித்து’ விடிய, விடிய வெளுத்துக் கட்டுகிற வித்தியாசத் திருவிழா ஒன்று சிவகங்கைப் பக்கம் வருடம் தவறாமல் நடக்கிறது.

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

தோழியை திட்டினால்... எந்த அணி?

‘‘கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைகள் வருகிறது. வீட்டுக்கு வர்ணம் அடிக்கவேண்டும்...’’ - இந்த வாக்கியம் சரியா? ஏதாவது தப்பு தட்டுப்படுகிறதா? தொடர்ச்சியாகச் செய்கையில், தவறான விஷயங்கள் கூட சரி போல ஆகிவிடும். இந்த வாக்கியத்தில் ‘வர்ணம்’ என்கிற பதம் படு அபத்தம். வர்ணம் என்கிற சொல், வடமொழி. அது, நிறத்தை மட்டுமல்ல வேறுபாடுகளையும் கூட (நான்கு வகை வர்ணம்) குறிக்கும் (வர்ணா). வண்ணம் என்பதே மிகச்சரி. வண்ணத்துப் பூச்சி, வண்ணக்கோலம் என்றுதானே சொல்கிறோம். வர்ணத்துப்பூச்சி, வர்ணக்கோலம் என்றில்லையே?

திங்கள், 20 ஏப்ரல், 2015

அரிவாள்களால் சாதித்ததென்ன?

லிகளின் உச்சம், உடலில் அல்ல... மனதில் இருக்கிறது. உடல் காயங்களைக் காட்டிலும், மனக்காயங்கள் தருகிற பாதிப்பு, வலி ஒப்பீட்டளவில் அதிகம்; மிக அதிகம். காயப்பட்டவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும். உடல் காயத்துக்கு மருந்து இருக்கிறது. மனக்காயங்களுக்கு..? காலம்தான் மருந்தென்பார்கள். உண்மைதான். அடித்துக் கொண்டு ஓடுகிற ஆற்று வெள்ளம், பாறையின் வடிவத்தை மாற்றி விடுகிறதைப் போல...!

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

ஏய் நீ ரொம்ப அணியா இருக்க!

* ‘ஊர்ல மழை, தண்ணி எப்படி?’
‘போப்பா நீ வேற... மகா விஷ்ணுவைக் கூட பார்த்திடலாம்; மழையத்தான் பாக்க முடியலை!’
* ‘மாமு... தலைவன் படம் பார்த்தியே... எப்டி இருக்கு?’
‘கழுத்தில ரத்தம் வந்திருச்சி மச்சான்...!’
* ‘ஏண்டா... அந்தப் பொண்ணு அவ்வளவு அழகாடா?
‘என்னடா இப்டி கேட்டுட்ட? தேவதை மாதிரி இருப்பாடா?’
‘தேவதை மாதிரியா...?’
‘மாதிரி என்ன மாதிரி... தேவதையேதான்!’

- இதை மாதிரி லட்சக்கணக்கான / கோடிக்கணக்கான டயலாக்குகளை பேசியும், கேட்டும் வளர்ந்தவர்கள் நாம். இல்லையா? ‘ஆமாங்க... ஆமா’ என்று மேலும், கீழுமாக தலையை ஆட்டுவீர்களேயானால், நோட் தி பாயிண்ட்... இதுதான், இனி நாம் பார்க்கப் போகிற அணி இலக்கணம்.

திங்கள், 13 ஏப்ரல், 2015

அடடா... என்னா ஸ்டைலு?!

ரு மொழி, சொற்களால் கட்டமைக்கப்படுகிறது. என்றாலும், அதற்கு இணையான முக்கியத்துவம் வாக்கியத்துக்கும் உண்டு. சொற்கள் இணைந்து பிறக்கிற வாக்கியம்தான், மொழியை முழுமைப்படுத்துகிறது. பேச்சு, எழுத்து என தகவல் தொடர்புகளுக்கான கருவியாக மொழியை மாற்றுவதில் வாக்கியத்தின் பங்கு பிரதானமானது. பொதுவாக வாக்கியங்களை நான்கு வகைகளுக்குள் அடக்கலாம். தமிழ் இதற்கு விரிவான இலக்கணம் வகுத்து வைத்திருக்கிறது. நம்மொழி மட்டுமல்ல... ஏனைய மொழிகளிலும் கூட, இந்த நான்கு பிரிவுகள் இருக்கின்றன. இது இல்லாமல் மொழி இல்லை. வாக்கியங்களின் வகைகள் நான்கையும் ஒரு எட்டு பார்த்து விடலாம், சரியா?

சனி, 4 ஏப்ரல், 2015

எதுகை, மோனை எத்தனை வகை?

தொடை இலக்கணம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே திடீரென இல்பொருள் உவமை அணி கடந்த வாரம் ‘கிராஸ் டாக்’ ஆனது.

அதென்ன  இல்பொருள் என்று நண்பர்கள் தொலைபேசினர். உவமை அணி, உருவகங்கள் பற்றி அடுத்த வாரங்களில் விரிவாக பார்க்க வேண்டியிருக்கிறது.

என்றாலும், ஒரு சின்ன டீஸர்.

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...