புதன், 28 ஜனவரி, 2015

சந்திப்போமா மறுபடி சந்திப்போமா?

கோயில் திருவிழாக்களில் பார்த்திருக்கலாம். பெண்களும், சிறுவர்களும், பெரியவர்களும் அப்படியே பக்திப்பழமாக பால் குடம் சுமந்து வர, அவர்களுக்கு முன்பாக ஏழெட்டு விடலைகள் போடுவார்கள் பாருங்கள் ஆட்டம்... வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு அப்படி ஒரு ஆட்டம். கெட்ட ஆட்டம். நான் சொல்வதை நம்புவீர்கள் என்று நினைக்கிறேன். கொஞ்சமே கொஞ்சம் அடிப்படை தெரிந்தால் போதும். தமிழ் மொழியை வைத்துக் கொண்டு பேச்சிலும், எழுத்திலும் நீங்கள் கெட்ட ஆட்டம் போட முடியும். குத்தாட்டம் போடுகிற விடலைகளை விட்டு விட்டு, உங்கள் எழுத்தையும், பேச்சையும் எல்லோரும் வைத்த கண் வாங்காமல் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். ஆட்டத்துக்கு ரெடியா?

சனி, 24 ஜனவரி, 2015

வால்பாறையும்... சில யானைகளும் - 4

கோயில்களில் நீங்கள் கொடுக்கிற வாழைப்பழங்களை வாங்கி சாப்பிட்டு விட்டு, தலையைத் தொட்டு ஆசிர்வதிக்கிற யானைகளுக்கும், வால்பாறை மலைப்பகுதியில் குழந்தை, குட்டிகளுடன் வலம் வருகிற யானைகளுக்கும் குணத்தில் பெரிதாக எந்த மாறுபாடும் காணமுடியாது. வயிற்றை நிரப்புவது மட்டுமே பிரச்னை.  கோயில்யானைகளுக்கு தேடி வந்து விடுகிறது. வால்பாறை யானைகள், தேடிச் செல்கின்றன. உணவு, குடிநீருக்கான தேடல் பயணங்களின் போது, குறுக்கே  மனிதன் வந்து விடுகிறான். அப்போதும் கூட அவை சண்டைக்கெல்லாம் பாய்வதில்லை. விலகிச் செல்லவே விரும்புகின்றன. சிறுத்தைகளும் அப்படியே. இந்த  வாரம் யானைகளுடன், சிறுத்தைகளும் நம்முடன் இணைகின்றன.

வியாழன், 22 ஜனவரி, 2015

ராஜாவுக்கு கிடையாதா தமிழ் மகுடம்?

மிழ் சினிமா என்கிற மிகக் குறுகிய வட்டத்துக்குள் மட்டுமே அடக்கி விட முடியாத பெயர் - இளையராஜா. ஹாலிவுட் படங்களையும், அதையும் கடந்து,  ஆப்ரிக்க, அண்டார்டிக்க படங்களையும் காப்பியடித்து, வேஷம் கட்டி ‘யுனிவர்சல் ஹீரோ’க்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் மத்தியில், நிஜமாகவே  இவர் ராஜா. ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த அபூர்வ ஞானி. முதல் படம் ‘அன்னக்கிளி’ துவங்கி, ஆயிரமாவது படம் ‘தாரை தப்பட்டை’ வரை, ராகத்துக்குள் தாலாட்டை மறைத்து வைத்து தட்டுப்பாடின்றி விநியோகிக்கிற ராகதேவன்.

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

காம்ரேட் அச்சுவும்... தவறி வந்த உண்மையும்!

ச்சுதானந்தன்... பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல? ஆளைப் பிழிந்தால், மார்க்சிஸ்ட் சித்தாந்தம் சாறாகக் கொட்டும். கம்யூனிஸ்ட் இயக்கத்தின்  முதுபெரும் தலைவர். மார்க்ஸ், ஏங்கல்ஸ் மார்க்கத்தின் வழித்தோன்றல். வயது 90 கடந்தும், இன்னும் தீவிர அரசியலில் படு தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவர். இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் மிக முதுபெரும் தலைவர்களில் ஒருவர். கேரளாவில் கட்சியின் வளர்ச்சியில் இவருக்கு பெரும் பங்கிருக்கிறது. இப்படியெல்லாம் அறிமுகப்படுத்துவதை விட, மொழி, இனவாத அரசியல் செய்து, பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர் என்று சொன்னால்,  சட்டெனப் புரிந்து விடும்!

வலி... கூடுமா, குறையுமா?

‘என்னுடைய லவ்வர் என்று சொன்னால்... ஆன் தி ஸ்பாட், அடி விழும்’ என்று ஹன்சிகா படத்துடன் மேட்டரைப் படித்ததும் பல டீன் ஏஜ் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்களுக்கு ரத்தக்கொதிப்பு அளவு சற்றே கூடிய விஷயத்தை, அடுத்தடுத்த நாட்களில் வந்த தொலைபேசி / கடித விசாரிப்புகளின் மூலம் அறியமுடிந்தது. ர.கொ.வுக்கு மாத்திரை எல்லாம் தேவையில்லை. இந்த வாரம் படித்ததும், லெவல் நார்மல் ஆகிவிடலாம். அதற்கு முதலில் இன்னொரு முக்கியமான விஷயம் பார்த்து விடலாம்.

சனி, 17 ஜனவரி, 2015

வால்பாறையும்... சில யானைகளும் - 3

யானைக்கும், சிறுத்தைக்கும் மனிதன் மீது என்ன பகை? யோசித்துப் பாருங்கள். அவை ஏன் தாக்குகின்றன? ‘ஏழாவது சொர்க்கம்’ என போற்றப்படுகிறது வால்பாறை மலைப்பிரதேசம். இங்கு வசிக்கிற மக்கள், இந்த காட்டுயிர்களின் ‘அத்துமீறல்’களை அன்றாட நரகமாக இல்லையா நினைக்கிறார்கள். ‘அரசாங்கம் எங்கள கண்டுக்கலை சாமி. யானையும், சிறுத்தையும் அன்றாடம் மெரட்டுது. இந்தத் தொந்தரவுக்கு முற்றுப்புள்ளி எப்ப வெப்பாங்க? எங்க புள்ளகளை வெளிய அனுப்ப பயமா இருக்குதல்ல...’ - நான் சந்தித்த எஸ்டேட் மனிதர்களின் முகங்களில் அச்சம் இருந்தது நிஜம். உண்மையில் அத்துமீறுவது யார்? யானைகளும், சிறுத்தைகளும் ‘எல்லை’ தாண்டுகின்றனவா? எஸ்டேட் மலைச்சரிவில் யானை பார்த்து விட்டு திரும்பிக் கொண்டிருந்த, வால்பாறை பயணத்தின் இரண்டாவது நாள் மாலைப்பொழுதில், எனக்கு சில புரிதல்கள் கிடைத்தன!

புதன், 14 ஜனவரி, 2015

தையில் நீராடி தவம் தலைப்படுவாயே!

மிழகம், விழாக்களின் தேசம். சங்க காலத்தில் இருந்தே விழாக்களுக்கென தனித்தனியாக பருவம் வகுத்து, அதை மக்கள் வாழ்வியலின் ஒரு அங்கமாகவே மாற்றியிருப்பதை இலக்கியங்களின் வழியாக அறிய முடிகிறது. விழாக்கள் நூறு இருந்தாலும், தைத்திருநாளாம்... பொங்கல் பண்டிகைக்கு தனி இடம் உண்டு.
புத்தாடை, இனிப்பு, பட்டாசு என்று இன்று அமர்க்களப்படுகிற தீபாவளிப் பண்டிகை, நமது மண்ணில் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இல்லை. ஆனால்,  பொங்கல் பண்டிகை இருந்திருக்கிறது. அதற்கு முன்பாகவும் இருந்திருக்கிறது. சங்க இலக்கியங்கள் அதை தெளிவுபட உறுதி செய்கின்றன.

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

வால்பாறையும்... சில யானைகளும் - 2

ட்டி, கொடைக்கானல், ஏற்காடு... இன்னபிற மலைப்பிரதேசங்கள் அளவுக்கு தமிழகத்தில் வால்பாறை இன்னும் பிரபலம் அல்ல. என்ன காரணம்? இந்த ‘ஏழாவது சொர்க்கம்’ பற்றி நாம் கேள்விப்படுகிறதெல்லாமே எதிர்மறை விஷயங்கள்தாம். ‘குழந்தையை சிறுத்தை கவ்வி விட்டது.  தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை யானை மிதித்து விட்டது. வீடுகளை துவம்சம் செய்து விட்டது...’ - இப்படி வனவிலங்குகள் மீது  தினமும் குற்றச்சாட்டுகள். அவை வந்து தன்னிலை விளக்கம் கொடுக்கப் போவதில்லை என்ற தைரியத்தில் குற்றச்சாட்டுகளை அடுக்குகிறோம்.  உண்மையில் நடப்பது என்ன?

சனி, 10 ஜனவரி, 2015

என்னுடைய லவ்வர் என்றால்... உதை விழும்!

‘தாயைப் பழிச்சவனக் கூட விடுவேன்... தமிழைப் பழிச்சவன விடமாட்டேன்டா...’ என்று சினிமாவில் கதாநாயகன் பேசுகிற வசனத்தைக் கேட்டு நீ...ளமாய் கொட்டாவி விட்டிருப்பீர்கள். வேற்றுமை உருபுகளை ஒழுங்காக தெரிந்து கொண்டு, சந்திப்பிழைகளைத் தவிர்த்து விட்டாலே போதும். தமிழை அவ்வளவு சுலபத்தில் யாரும் பழித்து விடமுடியாது. வேற்றுமை உருபு என்ற பெயரைக் கேட்டதும் நாட்டு மருந்துக் கடை கசாயத்தைக் கண்டது போல முகத்தைச் சுளிக்க வேண்டாம். ரொம்ப, ரொம்ப ஈஸி.

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

வால்பாறையும்... சில யானைகளும் - 1

நாம் இருக்கிற தரைப்பரப்பில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இருக்கிறது வால்பாறை. ஏழாவது சொர்க்கம் என்று இதற்கு செல்லப் பெயர்  இருக்கிறது. காரணப் பெயரும் கூட. மனதை மயக்கும் திறன் வாய்க்கப் பெற்றிருப்பதால் ஏழாவது சொர்க்கமாம். உண்மையாகவே மனம் மயக்கும், ஈர்க்கும்  ஆற்றல் நிரம்பக் கொண்டிருக்கிறது. யானை, புலி, சிறுத்தை என்று மனிதனைக் கண்டு அஞ்சி வாழ்கிற / மனிதனால் உயிர், உணவு, வாழிடம் அனைத்தையும்  பறி கொடுத்து தவிக்கிற உயிரினங்கள் இங்கு எக்கச்சக்கம் இருக்கின்றன. வாருங்கள்... வால்பாறையில் மூன்று நாட்கள்!

சனி, 3 ஜனவரி, 2015

ஹைகூ தெரியும்; ஐ கு தெரியுமா?

ந்திப்புகள் எப்போதுமே இனிமையானவை. ஏதோ சந்தித்தோம்... பிரிந்தோம் என்று இல்லாமல் ஆழமாய், அழுத்தமாய் அந்த சந்திப்பை நினைவில் வைத்திருப்பதற்கு, கிப்ட் கொடுப்பது, பூ கொடுப்பது, இன்னும் ஏதேதோ கொடுப்பது என சில எக்ஸ்ட்ரா டகால்டி வேலைகள் நாம் செய்தாக வேண்டியிருக்கிறது... இல்லையா? இளமை டாலடிக்கிற மொழி என்பதால், தமிழும் சந்திப்புக்கு எக்கச்சக்க முக்கியத்துவம் கொடுக்கிறது. அதற்கென தனி இலக்கணமே வகுத்து வைத்திருக்கிறது. ரொம்ப ஈஸி மேட்டர். ‘எங்கெங்கே இச்... இச்...’ அந்த மேட்டர்தான். படிக்க ஜோரா இருக்கும்.

வியாழன், 1 ஜனவரி, 2015

‘ஐ’ சுட்ட கதையா; சொந்தக்கதையா?

மிழ் சினிமா இயக்குனர் சங்கரை... மன்னிக்கவும். ஷ்ஷ்ஷ்ஷ்ஷங்கரை தெரியாதவர்கள் இருக்கமுடியாது. பிரமாண்டம் என்கிற தமிழ் வார்த்தைக்கு நிஜ  அர்த்தத்தை இவரது சினிமாக்களில் பார்க்கலாம். ஹீரோவும், ஹீரோயினும் ஒரு டூயட் பாடவேண்டும் என்று ஆசைப்பட்டால்... சுற்றுச்சூழல் தொலைந்தது.  மலையை தீவைத்து கொளுத்துவார். பாறைகளுக்கு பெயிண்ட் அடிப்பார். இன்னும் என்னென்ன அக்கப்போர் இருக்கிறதோ... அத்தனையும் செய்வார். ஆனால், சுற்றுச்சூழல் கெடுகிறதே என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கக் கூடாது. ரசிக்க பழகிக் கொள்ளவேண்டும். மலை தீப்பிடித்து எரிந்து நிஜத்தில் நீங்கள்  பார்த்திருக்கிறீர்களா? பார்க்கத்தான் முடியுமா? ஷ்ஷ்ஷங்கர் படங்கள் இல்லையென்றால், இதெல்லாம் எப்படி பார்ப்பதாம்?

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...