வெள்ளி, 25 டிசம்பர், 2015

கதம்... கதம்... குரகதம், துரகதம்!

‘‘படிக்கும் போதே உள்ளம் உருகிடுச்சு சார். கல்லறையில தமிழ் மாணவன்னு எழுதச் சொன்னது; தமிழ் புத்தகங்களை உடலோட சேர்த்து அடக்கம் பண்ண வெச்சதுனு... அட அடா...! ஒரு வெள்ளக்காரத்தொரயே நம்ம மொழி மேல இவ்வளவு பாசம் வெச்சிருந்தா, நாமெல்லாம் நம்ம மொழியை எவ்ளோ பாசமா பாதுகாக்கணும்..?’’ - கண்களைத் துடைத்தபடியே (!!), கலங்கிப் போய் பேசினார் தேனியில் இருந்து ஒரு நண்பர். உண்மைதான். வசிக்கிற ஊரின் வரலாற்றுச் சிறப்பு, உள்ளூர்காரர்களுக்கு எப்படித் தெரிவதில்லையோ, அதுபோலவே, பேசிக் கொண்டிருக்கிற தமிழ் மொழியின் மகத்துவமும் நம்மால் முழுமையாக இன்னும் உணர்ந்து கொள்ளப்படவில்லை. ரைட்டு! கண்களைக் கசக்குவதோடு கடமை முடிந்து விட்டதாக நினைத்து விடாமல், இனியாகிலும் நம்மொழியைக் கருத்தூன்றி கவனமாக படித்து, தவறின்றி எழுதி, பேசி, அதற்கு பெருமை சேர்க்க முயற்சிக்கலாம். சரியா?

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

சீயான் - விக்ரம்; சீயம் - சூர்யா?

‘செம்மொழி தொடரில் கன்டினியூட்டி ஜம்பிங் நிறைய இருக்கே. வயது, தோற்றத்துக்கு ஏற்ப மிருகங்களுக்கு தமிழ் மொழி சூட்டியிருக்கும் வெவ்வேறு பெயர்களை அறிமுகம் செய்ய ஆரம்பித்து, பாதியிலேயே நிறுத்தி விட்டால் எப்படி? ஞாபகமறதி பிரச்னைக்கு வல்லாரை கீரை ட்ரை பண்ணிப் பார்க்கலாமே!’ - திண்டுக்கல்லில் இருந்து இப்படி ஒரு கடுதாசி வந்திருந்தது. அடுத்தடுத்து, நிறைய முக்கிய விஷயங்கள் பேச வேண்டியிருந்ததால், கன்டினியூட்டி ஜம்பிங் இருந்திருக்கும். என்பதால், வல்லாரைக் கீரைக்கு இப்போது அவசரத் தேவையில்லை.

வெள்ளி, 18 டிசம்பர், 2015

கககபோ... புலிகேசி சொன்னா சரியா?

ம்சை அரசன் 23ம் புலிகேசி படம் ஞாபகம் இருக்கிறதுதானே? முறுக்கு மீசை புலிகேசி மன்னன் தனது அமைச்சரிடம் ‘கககபோ’ என்று ஸ்டைலாகச் சொல்வாரே! ‘கருத்துக்களை கச்சிதமாக கவ்விக்கொண்டாய் போ...’ என்கிற நீ...ள (!?) சொற்றொடரை படு சுருக்க்க்க்கமாக சொல்கிறாராம். நீங்களும், நானும் கூட சிறு வயதில் (இப்ப என்ன பெரிசா வயசாயிடுச்சி... என்கிற டென்ஷன் வேண்டற்க!) நண்பர்களிடம் இப்படி சொற்களின் சுருக்க வார்த்தைகளாக பேசி கிண்டலடித்திருப்போம். இல்லையா? தமிழ் இலக்கணப் படி இது சரியா?

புதன், 16 டிசம்பர், 2015

நியாயமாரே... இந்த ‘பீப்’ பயலுவல என்ன செய்யப் போறீக?

வரது பெற்றோர் காதல் திருமணம் செய்தவர்கள். என்பதால், அவர்களிடம் கேட்டிருந்தாலே விளக்கம் கிடைத்திருக்கும். ‘இன்னின்ன காரணத்துக்காகத்தான் லவ் பண்றோம்... ஆ, டண்டணக்கா!’ என்று அடுக்குமொழியில் அழகான விளக்கத்தை அப்பா கொடுத்திருப்பார். அதற்கும் மேலாக, ‘இணையத்தில வேண்டாண்டா தம்பு; விபரீதம் ஆயிருச்சினா வம்பு’ என்று எதுகை மோனையாக அட்வைஸூம் பண்ணியிருப்பார். இணையப் பொதுவெளிக்கு வந்து சந்தேகம் கேட்டிருக்க தம்புவுக்கு அவசியமே ஏற்பட்டிருக்காது.

சனி, 12 டிசம்பர், 2015

பெரியாறு உடையுமா; கேரளா அழியுமா?

‘‘சென்னையில் 24 மணிநேரத்தில் 50 செ.மீ. மழை பெய்தது போல, பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்தால் அது, அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறிவிடும் என கேரள மக்கள் பயப்படுகின்றனர். பெரியாறு அணை தனது உறுதியை இழந்து விட்டது. அது உடையுமானால், கேரள மாநிலத்தில் உள்ள ஐந்து மாவட்ட மக்கள் பெரிய பாதிப்புக்குள்ளாவார்கள். புதிய அணை கட்டுவது ஒன்றே தீர்வு...’’ - என்கிற கலகக்குரல் மூலமாக, ஓய்ந்திருந்த பெரியாறு அணை பிரச்னையில் மீண்டும் நெருப்பு பற்ற வைக்கிறார் உம்மன் சாண்டி - சோலார் பேனல், சரிதா நாயர் CD விவகாரங்களில் இருந்து மலையாள மக்களின் கவனத்தை உடனடியாக திசை திருப்ப விரும்புகிற கேரள மாநிலத்தின் முதலமைச்சர்.

வெள்ளி, 11 டிசம்பர், 2015

ஊரழித்த மழைவெறியும் சீரழிக்கும் மதவெறியும்!

சென்னையை புரட்டிப் போட்ட பெருமழையும், அதன் பிறகான கொடுவெள்ளமும், ஆர்எஸ்எஸ் போன்ற சில இந்து மத அடிப்படைவாத அமைப்புகளின் நிஜ முகத்தை உலகின் வெளிச்சத்துக்குக் காட்டிச் சென்றிருக்கின்றன. (வார்த்தை ஜாடனைகள், வர்ணனைகள் இல்லாமல், சுருக்க்க்கமாக கட்டுரையை முடிக்க வேண்டியிருப்பதால், முதல் வரியிலேயே மேட்டருக்கு வந்தாச்சு!).

சனி, 5 டிசம்பர், 2015

சுவிஸ் வங்கியில்... வெள்ளம்?

‘உயிரெழுத்து, மெய்யெழுத்தெல்லாம் மூணாம் வகுப்புல படிச்சது சார். ரொம்ப நாளைக்கப்புறம் ஞாபகப்படுத்தியிருக்கீங்க...’ என்று தேநீர் குடிக்கும்போது நண்பர் உள்ளம் உருகினார். படிப்பதெல்லாம், பரிட்சைக்காக மட்டுமே என்று நினைப்பதுதான், நாம் இன்னும் டாப் கியரடித்து, வேகம் பிடிக்க முடியாமல் இருப்பதற்கு மிகப்பெரிய காரணம் (எம்மாம் பெரிய கண்டுபிடிப்பு!?). படிப்பதை, வாழ்க்கையில் பயன்படுத்தக் கற்றுக் கொண்டோமானால், பிரச்னைகள் வரும் போது டோண்ட் வொர்ரி முஸ்தஃபா!

ஞாயிறு, 29 நவம்பர், 2015

இருமா முந்திரி அரைமா!

‘அட... இப்பத்தான் ஆரம்பிச்ச மாதிரி இருந்திச்சு. அதுக்குள்ள நம்ம தொடர் அரைச்சதம் (வெற்றிகரமான 50வது வாாாாரம்!) அடிச்சிடுச்சே. சூப்பர் சார்...’ - போனவாரம் படித்து விட்டு நண்பர் தொடர்பில் வந்து அளவுக்கதிகமாக ஆச்சர்யப்பட்டார்.
‘ஆயுள் முழுக்க எழுதுவதற்கு நம்மொழியி்ல் விஷயம் இருக்கிறது. என்பதால், ஐம்பதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை ப்ரோ...’ என்று தன்னடக்கக் கலையின் சிகரத்தில் நின்று பதில் சொன்னேன்.
சத்தியத்திலும் சத்தியமாகவே தமிழின் பெருமை குறித்து எழுத லட்சக்கணக்கான பக்கங்கள், பாதுகாப்பாக இன்னும் பாக்கியிருக்கின்றன.

சனி, 21 நவம்பர், 2015

காளை.. காளை... முரட்டுக்காளை!

‘நம்மொழி செம்மொழி கட்டுரையில் நிறைய தப்பு இருக்கிறது...’ - கொடைக்கானல் காரர்கள் விடுவதாக இல்லை. நுணுக்கி, நுணுக்கி கேள்விகளாக அடுக்கி ஒரு போஸ்ட்கார்டு அனுப்பியிருக்கிறார்கள். கார்டின் முதல் வரியில் இப்படி குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
என்ன தப்பாம்?
ஆங்கிலத்தில் ‘A, AN’ எங்கே போடுவது என்று விதி இருப்பது போல, தமிழில் ‘ஒரு, ஓர்’ எங்கே போடவேண்டும் என்கிற விதி பற்றிய அவர்களது சந்தேகத்துக்கு போனவாரம் பதிலளித்திருந்தேன் இல்லையா? அதில்தான் தப்பு இருக்காம்!

சனி, 14 நவம்பர், 2015

சொத்துக் குவிப்பு வழக்கு... சீக்ரெட்!

ன்றைய தேதியில் உங்கள் சொத்து மதிப்பு என்னவாக இருக்கும்? வெள்ளைப் பேப்பரை விரித்து வைத்துக் கொண்டு பட்டியலிடுங்கள். சொத்துக் குவிப்பு வழக்கு பற்றியெல்லாம் பயப்படாமல், லிஸ்ட் போடுங்கள். சொந்தமாக வீடு, ஏக்கர் கணக்கில் நிலம், லாக்கர்களில் நகை, வங்கிகளில் லட்சக்கணக்கில் டெபாசிட், ஷேர் மார்க்கெட்டில் முதலீடு, இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள்... என்று எக்ஸ்ட்ரா பேப்பர் வாங்கி எழுதுகிற அளவுக்கு பட்டியல் நீ...ண்டு கொண்டே போனால், முகத்தில் கம்பீரம் டாலடிக்கும்தானே? இதெல்லாம் தூக்கிச் சாப்பிடுகிற அளவுக்கு சொத்துக்களை நீங்கள் பேசுகிற மொழி பதுக்கி வைத்திருக்கிறதே, உங்களுக்குத் தெரியுமா? நியாயமாக மற்ற மொழிகள் எல்லாம் சேர்ந்து நம்மொழி மீது சொத்துக் குவிப்பு வழக்குத் தொடுக்கலாம். அந்தளவுக்கு, வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவு இலக்கண / இலக்கியச் சொத்துக்கள் தமிழில் ஏராளம்.

வியாழன், 12 நவம்பர், 2015

பிதாவே... இவர்களை மன்னியும்!

‘‘ஒரு கிறிஸ்தவரோ அல்லது இஸ்லாமியரோ ஹிந்து கோவிலில் கொடுக்க படும் பிரசாதத்தை ஏற்றுக்கொள்வது இல்லை... எத்தனை கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர் கோவில் சென்று இருகிறார்கள்..??
இப்போது ஹிந்துக்களைப்பார்த்து கேட்கிறேன்.. மதசார்பின்மை ஹிந்துக்களுக்கு மட்டுமா?? அல்லது இதை பேணுவது ஹிந்துக்களுக்கு விதிக்க பட்ட விஷயமா? வேறு மத மக்களுக்கு இல்லையா...’’
- சமீபகாலமாக வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இணையவெளிகளில் மிக அதிகமாக உலாவுகிற ஒரு கடிதத்தின் சில வரிகள் இவை. இந்த வரிகள் நியாயம் போலவே இருக்கிறதே... நியாயம்தானா? கடிதத்தை எழுதியவர் யார்? என்ன சொல்ல வருகிறார்...?

திங்கள், 9 நவம்பர், 2015

குதித்து, குதித்து ஓடினா... என்ன அர்த்தம்?

‘அரவணைத்தல் என்கிற வார்த்தைக்குப் பின்னால் இப்படி ஒரு வரலாறு இருக்கிறதை இப்போதுதான் தெரிந்து கொண்டோம்’ என்று ஒரு வாசகி (திண்டுக்கல்லில் இருந்து) புளகாங்கிதம் அடைந்திருந்தார். நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிற தமிழ், லேசுப்பட்ட மொழி அல்ல நண்பர்களே! சாதாரணமாக பயன்படுத்துகிற வார்த்தை மட்டுமல்ல... விலங்குகளுக்கு சூட்டப்பட்டிருக்கிற பெயரில் கூட அர்த்தம் இருக்கிறது (குதிரை - குதித்து ஓடுவது, கிளி - கிள்ளித் தின்பது, குரங்கு - முதுகெலும்பு வளைந்திருப்பது). தமிழில் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிற காரணப் பெயர்கள் (Casual Noun) பட்டியலில் இருந்து இந்த வாரமும் கொஞ்சம்.

சனி, 7 நவம்பர், 2015

கமல்கானும்; ஷாருக்ஹாசனும்!

ந்திய சினிமாவின் இரு பெரும் ஆளுமைகளைப் பற்றி மிகக் குறைவான வரிகளுக்குள் இங்கு பேசி முடிப்பதாக உத்தேசம். ஒருவர் ஒலக நாயகன். கட்டி நடிக்காத வேடம் மிச்சம் எதுவும் இருக்கிறதா என்று கண்டுபிடித்துத்தான் சொல்லவேண்டும். இன்னொருவர் இந்தியாவின் வசூல் சூப்பர் ஸ்டார். இந்திய சினிமா ரசிகர்களின் இதயத்துக்குள் ஸ்டூல் போட்டு உட்கார்ந்திருக்கிற ஷாருக்கான். இன்றைய தேதியில், இருவருக்குமான பிரச்னை பொதுவானது. விருது பிரச்னை. பிரச்னையின் பின்னணி என்ன?

வியாழன், 5 நவம்பர், 2015

அடடா அல்வாத்துண்டு... எந்த ஏரியா?

‘ஒரே ஒரு எழுத்து மாறினா, அப்டி என்னா குத்தம் ஆகிடப்போகுதுனு இவ்வளவு நாள் நெனச்சிகிட்டு இருந்தோம். ‘தேசிய புளிகள் சரணாலயம்’ பத்தி படிச்சதும்தான் தெரிஞ்சது... எம்மாம் பெரிய தப்பு பண்றோம்னு...’ - கடந்தவார கட்டுரை படித்த ஒரு நண்பர் கடிதத்தில் கண்ணீர் வடித்திருந்தார். அறியாமல் செய்தால் தப்பில்லை. அதே தவறு இனி ரிப்பீட்  ஆகப்படாது. கேட்டீங்களா?  குழப்ப வார்த்தைகள் பட்டியலை (Words of Doubtful spelling) இவ்வளவு சீக்கிரம் முடிக்கணுமா என்றும் சில நண்பர்கள் வேதனைப்பட்டிருந்தனர். அளவுக்கு மீறினால், இலக்கணம் கசக்கும். தவிர, இன்னும் பார்த்து முடித்தாக வேண்டிய விஷயங்கள் நிறைய பாக்கியிருக்கிறது. மேட்டருக்குப் போலாம்!

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

இரவு 9 மணிக்கு... தப்பு சார் தப்பு!

‘அப்டி என்ன பெரிசா தப்பு பண்ணீட்டேன்? ஒரு எழுத்து... ஒரே ஒரு எழுத்துத்தான மாறிடுச்சி?’ என்றெல்லாம் சாக்குப்போக்கு சொல்லமுடியாது. ஒரு எழுத்து மாறினாலும், அர்த்தம் தலைகீழாகி விடுகிறது என வார வாரம் படிக்கிறோம் இல்லையா? போனவாரம் பார்த்தோம். புலி / புளி - ஒரு எழுத்துத்தான் வித்தியாசம். ‘தேசிய புளிகள் சரணாலயம்’ என்று வனப்பகுதியில் போர்டு எழுதி வைத்தால் என்ன ஆகும்? ‘கிலோ எவ்வளவு சொல்லுவீக...’ என்று கேட்டுக் கொண்டு மஞ்சள் பையுடன் கூட்டம் கிளம்பி வந்து விடாதா? தலைதெறித்து புலி இடத்தை காலி செய்து விடும். குழப்ப வார்த்தைகள் (Words of Doubtful spelling) பட்டியலை இந்த வாரத்துடன் முடிச்சிக்கலாம். சரியா?

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

டாப் டென்... அழகு!

ரே ஒரு எழுத்து மாறினாலும், அர்த்தம் ஆல் அவுட் தலைகீழாகி விடுகிற தமிழ் சொற்கள் பற்றி ஒவ்வொரு அத்தியாயத்திலும் கொஞ்சம், கொஞ்சம் பார்த்துக் கொண்டிருந்தோம்... ஞாபகம் இருக்கா?

 ‘அது ஏன் சார் ரெண்டு வாரமா மிஸ்சிங்?’ என்று தொடர்ந்து படிக்கிற நண்பர் கேள்விக்குறி போட்டு கடுதாசி அனுப்பியிருந்தார்.

மன்னிச்ச்ச்சூ...! (தமிழில் நமக்கு புடிச்ச வார்த்த!?).

 ஒரே ஒரு எழுத்து மாறினாலும் அர்த்தம் உட்டாலக்கடி ஆகிவிடுகிற அந்தக் குழப்ப வார்த்தைகள் (Words of Doubtful spelling) பட்டியலின் தொடர்ச்சியைப் பார்த்து விட்டு, மெயின் மேட்டருக்குப் பயணப்படலாம். சரியா?

சனி, 12 செப்டம்பர், 2015

கமல்ஹாசன்(நடிகர்) - இது சரிதானா?


 ‘நிறுத்தக்குறி மேட்டருக்கு ‘சுபம்’ போட்டா எப்படி? இன்னும் நிறைய சந்தேகம் இருக்கே’ என்று தொடர்பில் வந்தார் ஆர்வமாய் அடிக்கடி பேசுகிற நண்பர். ‘போகிற போக்கில் சந்தேகங்களை கிளியர் பண்ணிடலாம் சார். இப்போ என்ன சந்தேகம்?’ என்றேன். ‘அடைப்புக்குறி எழுதும் போது, உள்ளே / வெளியே இடைவெளி (Space) தேவைப்படுமா என்ன?’ - அவர் எழுப்புகிற சந்தேகம் நியாயமானதே. எழுதும் போது நிறையப் பேர் தப்புச் செய்கிற இடமும் இதுதான். அடைப்புக்குறிக்குள் (Brackets) எழுதும் போது இடைவெளி தேவையே இல்லை. கமல்ஹாசன் (நடிகர்) - இது சரி. கமல்ஹாசன் ( நடிகர் ) - இது தப்பு. அடைப்புக்குறியை துவங்குவதற்கு முன்பாக ஒரு இடைவெளி கட்டாயம். கமல்ஹாசன்(நடிகர்) என்று எழுதினால் மார்க் தரமாட்டார்கள்.

புதன், 9 செப்டம்பர், 2015

பாகுபலி: கண்ணால் கண்டதும் பொய்!

‘கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்... தீர விசாரிப்பதே மெய்’ - சின்ன வயதில் பள்ளிக்கூடத்தில் படித்தது ஞாபகம் இருக்கிறதா? பல நூறு வருடங்களுக்கு முன்பாக தமிழ் இலக்கியங்கள் சொன்ன ‘கண்ணால் காண்பதும் பொய்’ மேட்டரை, இப்போது வந்த பாகுபலி சினிமா உறுதி செய்கிறது.

எப்படி?

அதை தொழில்நுட்ப ரீதியாக ‘டெமோ’ செய்ய விழைவதே இந்தச் சிறிய கட்டுரையின் பெரியநோக்கம். இந்திய சினிமாவின் மெகா ஹிட் பாகுபலி, எப்படியெல்லாம் கண்கட்டி வித்தை காட்டி நம்மை கட்டிப் போட்டிருக்கிறது என்று தெரிந்தால்.... மெய்யாகவே ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள். வாருங்கள், ஆச்சர்யப்படலாம்!

திங்கள், 7 செப்டம்பர், 2015

நீ நடந்தால்... நடை அழகு!

‘‘இமயமலை போலுயர்ந்த ஒரு நாடும், தன்மொழியில் தாழ்ந்தால், வீழும்...’’ - இது பாரதிதாசனின் வார்த்தைகள். பின்பற்றுகிறோமா? பக்கத்து மாநிலங்கள், தேசங்களைச் சேர்ந்த மக்கள், தங்கள் தாய்மொழியின் சிறப்புகளை பல திசைகளுக்கும் கொண்டு சேர்த்தல், தாய்மொழி கல்வி மேம்பாடு ஆகியவற்றுக்காக டபுள் ஷிப்ட் போட்டு வேலை பார்க்கின்றனர். கட்டிக் காக்க முடியாத அளவுக்கு சொல் வளத்தை கன்டெய்னரில் அடைத்து வைத்திருக்கிற நாம், அன்றாட உரையாடலுக்குக் கூட அயல்மொழிச் சொற்களை இரவல் வாங்கிப் பேசிக் கொண்டிருப்பது, தப்புத்தானே? ‘டிரெய்ன், ஒன் அவர் லேட்டாம் ப்ரோ’ - இதுதான், இன்றைக்கு நாம் பேசிக் கொண்டிருக்கிற ‘தாய்மொழி!’. ஒபாமா கேட்டால், சிரிக்க மாட்டார்?

புதன், 2 செப்டம்பர், 2015

ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் பாட்டு கேட்டீங்களா?

‘பங்காளி... கழுத்தில இருந்து ரத்தம் ஏதாச்சும் வருதா பாரேன்...’
‘இல்லயேடா மாமு. ஏன் என்னாச்சு?’
‘இல்ல பங்காளி. இப்பத்தான் தமிழ் இலக்கணம் கிளாஸ் முடிச்சு வர்றேன்... அதான்!’
- ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இருவர் இப்படிப் பேசக் கேட்டேன்.
அடக் கொடுமையே. தமிழ் இலக்கணம் படிப்பது அவ்வளவு டார்ச்சரான விஷயமா? ஏன் இப்படி ஒரு கருத்தாக்கம் இன்றைய மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. இது நல்ல அறிகுறியாகத் தெரியவில்லையே? தமிழ் அறிஞர்களுடன் தொலைபேசினேன். ‘‘எதையெல்லாம் புரிஞ்சுக்கறது கஷ்டமோ, அதையெல்லாம் வெறுக்கறது மனித இயல்பு. அதான் காரணம். இலக்கணப் பாடம் நடத்துற ஆசிரியர், தன்னோட லெவல்ல இருந்து பாடம் நடத்தாம, மாணவரோட லெவலுக்கு, அவனோட புரிதல் லெவலுக்கு இறங்கி வந்து நடத்தணும். அப்புறம், ரொம்ப முக்கியம். இலக்கண உதாரணங்களை அன்றாட வாழ்க்கையில் இருந்து கொடுத்து புரிய வைக்கணும்...’’

சனி, 22 ஆகஸ்ட், 2015

யானை, யானை... எத்தனை யானை?


‘போன வாரம் கட்டுரை படிச்சதும் ரொம்ப, ரொம்ப ஏமாந்து போயிட்டோம் சார்...’ என்று சில அழைப்புகள் வந்தன. நிஜ அர்த்தத்தில் சொல்கிறார்களா அல்லது இன்றைக்கு நாம் பயன்படுத்துகிற ‘டகால்டி’ அர்த்தத்தில் சொல்கிறார்களா என்று சிறிதுநேரம் புலப்படவில்லை (ஏமாந்து என்கிற தமிழ்ச் சொல்லுக்கு மகிழ்ச்சி, இன்பம் என்பதே நிஜ அர்த்தம் என்று கடந்தவாரம் படித்தோம்... கேட்ச் பண்ணீட்டிங்களா?). இதுபோல இன்னும் நிறைய, நிறைய தமிழ்ச் சொற்களை, அதன் நிஜ அர்த்தம் இன்னதென்று தெரியாமல் / புரியாமல் நாம் ‘டேமேஜ்’ பண்ணிக் கொண்டிருக்கிறோம். கடந்தவாரம் பார்த்த கட்டடம் - கட்டிடம், கறுப்பு - கருப்பு இதெல்லாம் அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்துகிற உதாரணங்கள்.

சனி, 15 ஆகஸ்ட், 2015

ஏமாந்து போவதும்... இன்பமே!

ரு வார்த்தை மாறினாலும், அர்த்தம் அம்பேல் ஆகி விடுகிற சொற்களை கடந்தவாரம் ஆரம்பித்தோம். ‘நிஜம்தான் சார். படிக்கிற காலத்தில், அரம் செய்ய விரும்புனு ஆத்திச்சூடி எழுதிட்டேன். அரம் செய்யணும்னா திருப்பாச்சேத்தி பக்கம்தான் போகணும்பா. இது, அறம் செய்ய விரும்பு அப்டின்னு கரெக் ஷன் போட்டுட்டு, மிஸ் பின்னிட்டாங்க...’ என்று வாசகர் லைனில் வந்தார். இதுமாதிரி இன்னும் நிறைய வார்த்தைகள் இருக்கின்றன. தெரிந்து கொண்டால் மிஸ்சிடம் அடி வாங்காமல் தப்பிக்கலாம். ஆரம்பிக்கலாமா?

சனி, 8 ஆகஸ்ட், 2015

பாண்ட்... ஜேம்ஸ்பாண்ட்!


‘கட்டுரை ஒண்ணு எழுதிகிட்டிருக்கேன் சார். ஒரு சின்ன டவுட்டு. வியர்வை, வேர்வை... எந்த வார்த்தை சரி? ரைட்டிங் பாதியில நிக்குது. அர்ஜென்ட்டா கிளியர் பண்ணமுடியுமா?’ - நண்பர் தொலைபேசியில் வந்தார். கிளியர் பண்ணிட்டாப் போச்சு. ‘வியர்வை, வேர்வை இரண்டுமே சரிதான். சார் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். தப்பில்லை’ என்றேன். ‘அதெப்பிடி சார்?’ என்றார். வியர்வை மேட்டர் மட்டுமில்லை. இன்னும் நிறைய வார்த்தைகள் இருக்கின்றன. இரு வகையாக எழுதப்படுகிற சொற்கள் (Words of double spelling) என்று தமிழில் ஒரு பட்டியலே இருக்கிறது. எப்படி எழுதினாலும், அர்த்தம் மாறாது. தப்பும் இல்லை. அந்த லிஸ்ட்டில் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா?

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

தமிழ்... படிக்கலாம்; தடைகள் உடைக்கலாம்!

லகின் மிக மூத்த மொழியாம் தமிழை இன்றைக்கும் உயிர்ப்போடு, துடிப்போடு இயங்கச் செய்து கொண்டிருப்பது, பூமிக் கிரகமெங்கும் பரவிக் கிடக்கும் கோடிக்கணக்கான அதன் இளம் புதல்வர்கள் என்பதில் மாற்றுக்கருத்திருக்காது. உயிரோடு இருத்தல் மட்டுமே பெருமை அல்ல. இயக்கம்! உலகின் தொல் மொழியாக இருந்தும், இன்றைக்கும் இளமைத்துடிப்புடன் கணினி யுகத்திலும் கச்சிதமாக, பெரு ஆற்றலுடன் இயங்கிக் கொண்டிருப்பதே பெருமை. அர்ப்பணிப்புடன் கூடிய தங்களது மாபெரும் உழைப்பால், சேவையால், தமிழ் மொழிக்கு ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் காலத்தால் அழியாத பெருமையும் தேடித் தந்திருக்கும் / தந்து கொண்டிருக்கும் உன்னதப் புதல்வர்கள் அனேகரை நம்மொழி கொண்டிருக்கிறது. அத்தகைய உன்னதப் புதல்வர்களில் முக்கியமானவர்... மறைந்த, மக்கள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்கள். அவரது மறைவு தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஈடு செய்ய இயலாத இழப்பு. இந்த வார ‘நம்மொழி செம்மொழி’ தொடர், அவருக்கு சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

Thank You... கலாம் சார்!

லகின் பல திசைகளிலும் நிறைந்திருக்கிற பல கோடி இளைஞர்களின் ஒற்றை உச்சரிப்பு - Thank You... கலாம் சார்! கண்களில் வடிகிற கண்ணீர் துடைத்தபடி - Thank You... கலாம் சார்!அவர் இல்லை. ஆனால், வகுத்துத் தந்த வாழ்க்கை நெறிமுறைகள், வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. அவை அழிவதில்லை. சாகாவரம் கொண்டவை. ஒரு நல்ல ஆசிரியராக, வழிகாட்டியாக, நண்பராக, நிர்வாகியாக, உதாரண மனிதராக அவர் குழந்தைகளின், மாணவர்களின் கரம் பிடித்து வழிகாட்டியிருக்கிறார். தனது வாழ்க்கையை பாடமாக கொடுத்திருக்கிறார். பிரகாச எதிர்காலம் தேடுகிற இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய வேண்டிய வழிமுறைகளை வரையறுத்து கொடுத்திருப்பதால் ராமேஸ்வரம் தீவில், அவர் ஓய்வெடுக்கிற இடம் பார்த்து அவர்கள் சொல்கிறார்கள் - Thank You... கலாம் சார்!

சனி, 1 ஆகஸ்ட், 2015

டோனியிடம் என்ன சொன்னார் அஸ்வின்?

‘அட! தமிழ் இலக்கணத்தில் இவ்ளோ விஷயம் இருக்கா? படிக்கிற காலத்தில மிஸ் பண்ணிட்டேன். முழுசா தெரிஞ்சுக்கணும்னா எது சார் படிக்கணும்?’ - இப்படி ஒரு நண்பர் அலைபேசியிருந்தார். நிஜத்தில், தமிழ் இலக்கணம் ரொம்ப சுலபம். அதேசமயம், அடிப்படையான விஷயங்களை தெரிந்து கொண்டால் மட்டுமே, முங்கு நீச்சல் அடிக்கமுடியும். பேஸ்மென்ட் ஸ்ட்ராங் என்றால், தமிழாசிரியர்களின் ஆலோசனைப்படி நீங்கள் நன்னூல் படிக்கலாம்.

திங்கள், 27 ஜூலை, 2015

பாகுபலி - காட்சி பிரமாண்டத்தின் உச்சம்!

முன்குறிப்பு: இது வழக்கமான, சினிமா விமர்சனக் கட்டுரை அல்ல.
மிழில் வெளிவருகிற பிரமாண்ட சினிமாக்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். தெய்வப்புலவராவது ஒன்றரை அடியில் எழுதினார். அவருக்கு சவால் விடுகிறது போல, ஒற்றை வரியில் கதை தயார் செய்து கொண்டு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் துணையுடன் காட்சிகளைக் கோர்த்து தைப்பது முதல் வகை. வலுவான கதைக் களத்தை கையில் எடுத்துக் கொண்டு, கதையின் பயணத்துக்கு கூடுதல் பலம் / வேகம் சேர்க்க, கம்ப்யூட்டர் வரைகலையை வெளியில் தெரியாத, கண்களை உருத்தாத வகையில் இழையோட விடுவது இரண்டாவது வகை. ராஜமவுலியின் பாகுபலி... இரண்டாவது வகை!

சனி, 25 ஜூலை, 2015

ஓ மானே! ஓ குயிலே!! ஓ குரங்கே!!!

ந்த பட்ஜெட்டிலாவது இரட்டை ரயில்பாதை திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு அறிவிப்பு வருமா? என தென்மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்...’ என்று நடுவில் ஒரு கேள்விக்குறி போட்டு எழுதினால், வெட்கக்கேடு என்று கடந்தவாரம் பார்த்தோம். ‘அடடா, இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே...’ என்று நிறைய நண்பர்கள் அலை / தொலைபேசியிருந்தார்கள். என, என்று, என்ற ஆகிய மூன்று சொற்களுக்கு முன் கேள்விக்குறி (கேள்விக்குறிக்கான தேவை இருப்பது போல பட்டாலும் கூட) கூடாது சகோஸ். ஒருவேளை மேற்கோள் குறி போட்டு வினா வாக்கியம் எழுப்பப்பட்டிருந்தால் ‘?’ போட்டுக் கொள்ளலாம்.
 ‘‘இந்த பட்ஜெட்டிலாவது இரட்டை ரயில்பாதை திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு அறிவிப்பு வருமா?’’ என்று மக்கள் கேள்வி எழுப்பினார்கள். - இந்த இடத்தில் ‘?’ சரி. அதாவது, முற்றுப்புள்ளி, கேள்விக்குறி, ஆச்சர்யக்குறி இதெல்லாம், வாக்கியம் முடிகிற இடத்தில் மட்டும்தான் வரணும். சரியா?

வெள்ளி, 10 ஜூலை, 2015

மாதர் தம்மை இழிவு செய்யும்...

புள்ளிராஜா மேட்டர் நிறையப் பேருக்கு நிறைய சந்தேகங்களை கிளப்பியிருக்கிறது. சந்தேகமும், சந்தோஷமே. தீர்வு கிடைத்து விடும் இல்லையா? ஒருவரது பெயரை, ஒரு அமைப்பின் பெயரைச் சுருக்கிச் சொல்கிற போது (ஐக்கிய நாடுகள் சபை - ஐ.நா. சபை, எம்.ஜி.ஆர்) முற்றுப்புள்ளி அவசியம் என்று கடந்தவாரத் தொடரில் பார்த்தோம். எழுத்துக்கு நடுவில் வருவது எப்படி முற்றுப்புள்ளியாக (Full Stop) இருக்கமுடியும் என்று நண்பர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள். நிஜம்தான். கால்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, முற்றுப்புள்ளி என்கிற நான்கே விஷயங்களுடன் புள்ளி மேட்டர் முடிந்து விடவில்லை. இன்னும் ரெண்டு பாக்கி இருக்கிறது. புள்ளி (Point), முப்புள்ளி (Ellipsis).

சனி, 4 ஜூலை, 2015

புள்ளிராஜாவுக்கு எத்தனை புள்ளி?

‘நீ புள்ளி வெச்சா... நான் கோலம் போடுவேன்...’ என்று ஒரு விசேஷமான வசனம் (சினிமா பெயர் ஞாபகத்தில் இல்லை) கேட்டிருப்பீர்கள். தத்துவம் படிக்கிறவர்களிடம் பேசினால், ‘உலகத்தின் சகல விஷயங்களுமே ஒரு புள்ளியில் இருந்து துவங்குகின்றன...’ என்பார்கள். தத்துவம், சினிமா இரண்டுமே புள்ளியின் மகத்துவம் பற்றி மேலதிகம் பேசுவதால், நாமும் அதுபற்றி அதிகம் தெரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. முதலில் காற்புள்ளி என்கிற கமாவும், அடுத்ததாக அரைப்புள்ளி என்கிற செமிகோலனும் பார்த்தோம். இனி, முக்காற்புள்ளி எனப்படுகிற கோலன் (Colon), முற்றுப்புள்ளி என்கிற ஃபுல் ஸ்டாப் (FUll Stop) மட்டும் பார்த்து விட்டோமேயானால், புள்ளி சப்ஜெக்ட்டை தள்ளி வைத்து விடலாம். சரியா?

வெள்ளி, 3 ஜூலை, 2015

காரணம் இதுதானா கமல் சார்?

த்தமவில்லன் சினிமாவின் தோல்விக்கு என்ன காரணம்? ஆளாளுக்கு ஒரு காரணம் சொல்கிறார்கள். ‘பூனைக்குட்டி’ கூட, தோல்விக்கான காரணம் விளக்கி ஒரு விரிவான கட்டுரை (உத்தமவில்லனா... இம்சை அரசனா? படிக்க, க்ளிக் செய்யவும்:  http://poonaikutti.blogspot.com/2015/05/blog-post_12.html) எழுதி வெளியிட்டது. படம் வெளியாகி ரொம்ப, ரொம்ப நாள் கழித்து, தோல்விக்கான காரணத்தைக் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்திருக்கிறார் உலகநாயகன்.
 அவரது லேட்டஸ்ட் சினிமா ‘பாபநாசம்’ திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியின் போது, உ.வி. தோல்விக்கான காரணத்தை அவரே அறிவித்தார். என்னதான் காரணமாம்?

ஞாயிறு, 28 ஜூன், 2015

கண்களை பார்க்காதீர்கள்; ஏனென்றால்...

வாக்கியத்தின் வகைகள் பற்றிய சப்ஜெக்ட் ஜோராகப் போய்க் கொண்டிருந்த நேரத்தில் ‘கமா, ஃபுல் ஸ்டாப்’ வந்து திசையை மாற்றி விட்டது. என்ன செய்ய..? பாதை மாறி பயணம் செய்வதும், அப்புறம் ரிவர்ஸ் கியரடித்து பழைய இடத்துக்கு வருவதும் இந்தத் தொடரைப் பொறுத்தவரை, ஏறக்குறைய பழகிப்போன விஷயமாகி விட்டதே? ஒரு வாக்கியத்தின் அமைப்பு முறைகளை கொண்டு, அதை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கமுடியும் என்றும், அதில் தனி வாக்கியம் (Simple sentence) பற்றியும் கடந்த வாரங்களில் பார்த்தோம். நமது அன்றாட எழுத்துக்கள் முழுமையாக தனி வாக்கியங்களையே சார்ந்திருக்கின்றன.

சனி, 27 ஜூன், 2015

ஆஹா... இது, யோகா!

‘தலைவலியா, இடுப்பு வலியா, மூச்சிரைப்பா, நாள்பட்ட இருமல், தும்மலா...?’
‘ஆமாம்பா... ஆமாம். அதுக்கென்ன இப்போ?’
‘அட! யோகா இருக்க, எதுக்குங்க டென்ஷன்? டெய்லி அரை மணிநேரம் பண்ணுங்க. எல்லாமே போயே போச்சு. போயிந்தே...’
- இன்னும் கொஞ்ச நாளில் இப்படி விளம்பரம் வந்தால் - அதில் அமிதாப் பச்சனே நடித்திருந்தாலும் கூட - நீங்கள் சந்தேகங்கொள்ள அவசியமில்லை. சர்வரோக நிவாரணி அவதாரம் பூண்டிருக்கும் யோகா கலைக்கு அந்த வல்லமை இருக்கிறது என்பது மெய்படுத்தப்பட்ட உண்மை. என்பதால், சர்வதேச யோகா தினமாக ஜூன் 21ஐ அறிவித்து அங்கீகரித்திருக்கிறது ஐக்கிய நாடுகள் சபை. டெல்லி ராஜ்பாத்தில் (ராஜபாதை) பிரதமர் மோடியுடன் சேர்ந்து 35 ஆயிரத்து 985 பேர், அன்றைய தினத்தில் யோகா செய்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்கள். அந்த தினத்தன்று நடந்த உலக நிகழ்வுகளை படம் பிடித்து இங்கே பதிவு செய்கிறது பூனைக்குட்டி (பாருங்க, லேட்டானாலும்... லேட்டஸ்ட்டுதான்!).

சனி, 20 ஜூன், 2015

டோனி, கோலியை பிரிக்காதீங்க!

‘‘கமா, புல் ஸ்டாப் போடறதுல, இவ்வளவு விஷயம் இருக்கா? உயிரை பறிச்சிடுது; குடும்பம் கொலாப்ஸ் ஆகிடுதுனா... ரியலி ஷாக்கிங். இதுக்கு எதாவது விதிமுறை இருந்தா சொல்லுங்க சார்...’’ - இப்படி நிறைய கடிதங்கள், அழைப்புகள். ஒரு கமா இடம் மாறியதால் என்னென்ன பிரச்னை வருகிறது என விளக்கிய கடந்தவார கட்டுரைக்கான எதிர்வினைகள் இவை என புரிந்து கொள்ளமுடிந்தது. நிறுத்தக்குறிகளை எங்கு பயன்படுத்தவேண்டும், எப்படிப் பயன்படுத்தவேண்டும்  / எங்கு பயன்படுத்தக்கூடாது, எப்படி பயன்படுத்தக்கூடாது என்று தமிழறிஞர்கள் நெறிமுறைகள் வகுத்துத் தந்திருக்கிறார்கள். விதிமுறைகளையும், இன்னும் பார்க்கவேண்டிய விஷயங்களையும் விறுவிறுவென அடுத்து வருகிற வாரங்களில் பார்த்து முடிக்கலாம். உங்களது மேலான சந்தேகங்களையும் தெரியப்படுத்தினால்... தெளிவுபெறலாம். சரியா?

ஞாயிறு, 14 ஜூன், 2015

வாட்டாள் நாகராஜ்... யாருடைய எதிரி?

பொதுமக்கள் நலனுக்காக, ரத்தம் சிந்தி தங்கள் சுயநலனை தியாகம் செய்த தலைவர்களை வரலாற்றில் பார்த்திருக்கிறோம். காந்தி, நேரு, காமராஜ் என்று உதாரணங்களும் வைத்திருக்கிறோம். சுயநலனுக்காக பொதுமக்களை ரத்தம் சிந்த வைத்து, அந்த ரத்தத்தின் கதகதப்பில் ஏறி அமர்ந்து குளிர் காய்கிறவர்களை இன்றைய அரசியலில் பார்க்கிறோம். முன்னதை விட, பின்னதில் உதாரணம் காட்ட நபர்களின் எண்ணிக்கை மிக அதிகம். சட்டென்று சொல்லவேண்டுமென்றால், வாட்டாள் நாகராஜ் பெயரை தேர்ந்த உதாரணமாகச் சொல்லலாம்.

சனி, 13 ஜூன், 2015

ஒரு ரன்னுல... இந்தியா தோத்துடுச்சே!

ங்கிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சமாச்சாரம் என்றாலும் கூட, நிறுத்தக் குறி அடையாளங்கள் இன்றைக்கு நமது மொழியில் (ஏன்... இந்திய மொழிகள் எல்லாவற்றிலும்தான்!) முக்கிய இடத்தைப் பிடித்து விட்டன. தப்புத் தாண்டா நடந்தால்... மேட்டர் செம சிக்கலாகி விடும்.

ஒரு கமாவை (,) எங்கே போடவேண்டும், எங்கே போடக்கூடாது என்று எழுதுகிறவர்களுக்கு தெரிந்திருக்கவேண்டியது மிக முக்கியம். நிறுத்தக்குறியீட்டு தவறால், வாக்கியத்தின் பொருள், அர்த்தமே மாறி விடும். கமாவை மாற்றிப் போட்டதால், உயிரே போன கதையை தெரிந்து கொள்ளலாம்!

வெள்ளி, 12 ஜூன், 2015

யோகா... நல்லது?


பாரதிய ஜனதா பார்ட்டி காரர்களுக்கு ஆதரவாக ‘பூனைக்குட்டி’யில் ஒரு கட்டுரை எழுதவேண்டியிருக்கும் என எதிர்பார்க்கவே இல்லை - அதுவும், இவ்வளவு சீக்கிரம். நல்லவேளை, அவர்களது கொள்கை, கோட்பாட்டுச் சித்தாந்தங்களுக்கு அன்னப்போஸ்டாக இங்கு ஆதரவு தெரிவித்து நான் எழுதப்போவதில்லை.
இது, ஆஹா மேட்டர். அதாவது யோகா மேட்டர்!

சனி, 6 ஜூன், 2015

ரஜினியும் கமலும்... நடுவில் ஒரு கமாவும்!

டந்தவாரத்தில் ஒரு நண்பர் அலைபேசியில் தொடர்புக்கு வந்தார். ‘வாக்கியங்கள் பற்றி எழுதுறீங்க. சரி. வாக்கியத்தில கமா, புல் ஸ்டாப், ஆச்சர்யக்குறி... இப்படி நிறைய பங்ச்சுவேஷன் மார்க் போடறமே... இதுபத்தி நம்ம இலக்கணம் எதாவது சொல்லுதா சார்?’ - சபாஷ். சரியான கேள்வி. வாக்கியங்கள் பற்றி பேசுகிற இந்தத் தருணத்திலேயே, இதையும் ஒரு கை பார்த்து விடுவது நல்லது. தொல்காப்பியம், நன்னூல் போன்ற மூத்த தமிழ் இலக்கண நூல்களை தலைகீழாகப் புரட்டிப் பார்த்தாலும், இந்த நிறுத்தக்குறிகள் பற்றி சிங்கிள் வார்த்தை இல்லை. அப்படியானால், நமது பாடல்களிலும், செய்யுள்களிலும் எப்படி இவை வந்தன? ‘ஓ... மானே! ஓ... தேனே!’ என்று எழுதி ஆச்சர்யக்குறி போட்டு நிறுத்துகிறோமே, இது எப்போது பழக்கத்துக்கு வந்தது?

வியாழன், 4 ஜூன், 2015

விஜய்ண்ணா... இப்போ கோக் குடிக்கலாம்களாண்ணா?

சினிமாக்காரர்கள் விளம்பரப்படுத்தி விற்கிற பண்டம் என்றால்... அது என்ன கழிசடையாக இருந்தாலும் கூட வாங்கி மேய்கிற சமூகம் வசிக்கிற நாடு என்ற பெருமை மோகன் ஆண்ட / மோடி ஆள்கிற இந்திய திருநாட்டுக்கு உண்டு. உழைத்துக் களைத்துச் சலித்து அமர்கிற நேரத்தில் நமது பொழுதை இனிமையாகப் போக்குகிற கலைஞர்கள் என்கிற எல்லையைக் கடந்து, ஒப்பாரும், மிக்காருமற்றவர்களாக சினிமாக்காரர்களை நாம் மாற்றி வைத்திருக்கிறோம்.
அமிதாப்பும், மாதுரியும் நம்ப வைத்துக் கொடுத்த நூடுல்ஸை தின்ற குழந்தைகள், டோக்கன் வாங்கி விட்டு மருத்துவமனை பெஞ்ச்சுகளில் காத்துக் கிடப்பது, எல்லாம் கொடுத்த சமூகத்துக்கு சினிமாக்காரர்கள் செய்கிற கைமாறு!

வியாழன், 28 மே, 2015

சச்சின் SUBJECT பார்க்கலாமா?

டிப்பதற்கு ரொம்பக் கடினமானது எனக் கருதப்படுகிற (நிஜத்தில் ரொம்ப, ரொம்ப ஈஸிங்க!) தமிழ் இலக்கணத்தை இன்றைய ‘இணைய’ தலைமுறை இளைஞர்களுக்கு, அவர்களது ‘மொழிநடை’யில் கொண்டு போய்ச் சேர்க்கிற முயற்சியே இந்த ‘நம்மொழி செம்மொழி’ தொடர். 29வது வாரம் வந்தாச்சு. ஏறக்குறைய தொடரின் கிளைமாக்ஸ் பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். தமிழ் இலக்கணத்தில் தெரிந்து கொள்ள கடலளவுக்கு இருக்கிறது. ஆனாலும், இது அறிமுகம் செய்கிற தொடர்தானே? பழகி விட்டால்... அப்புறம் பின்னி பெடலெடுக்கலாம்தானே? அதனால், சில முக்கியமான விஷயங்களை இனி வருகிற பகுதிகளில் ஸ்பீடாக பார்க்கலாம்... ஓகே?

திங்கள், 25 மே, 2015

எக்மோர் ஸ்டேஷனில் என்ன பிரச்னை?


வாழ்க்கைக்கு மட்டுமல்ல... வார்த்தைக்கும் கூட தேவையான நேரத்தில் இடைவெளி முக்கியம் என 26வது தொடரின் ஆரம்பத்தில் ஒரிரு பத்திகள் பார்த்தோம். ‘ஏன்... பிரித்தால் என்ன தப்பு? என்ன கெட்டுப் போகும்?’ என்று (சற்று தாமதமாக) ஒரு நண்பர் கடிதம் போட்டிருக்கிறார். இந்த வாரத்தை அவருக்கு ‘டெடிகேட்’ செய்யலாம். தவறான முறையில் பிரித்து எழுதினால், அர்த்தம் மாறி அனர்த்தம் ஆகிவிடும். மட்டுமல்ல... பக்கத்தில் இருப்பவர்கள் ‘டின்’ கட்டி விடுகிற அபாயத்தையும் நமது வார்த்தைகள் ஏற்படுத்தி விடும். ‘அறிவில்லாதவன்’ என்ற சொல் பற்றி கடந்தவாரம் பார்த்தோம். அதில் இருந்தே ஆரம்பிக்கலாம். அறிவில்லாதவன் - இந்த வார்த்தையை அறிவு + இல்லாதவன் என்று பிரிப்பதற்கும், அறிவில் + ஆதவன் என்று பிரிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதுதானே?

வெள்ளி, 22 மே, 2015

ஜஸ்ட் மிஸ்டுடா சாமீய்...!

னநிலை பிறழ்வு, பக்குவமின்மை, வயதுக்குரிய மூளை வளர்ச்சியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் காரணமாக, அன்பாக பழகிய பெண்ணின் கழுத்தில் தாலியைக் கட்டித் தொலைத்து விடுகிற அப்பாவி ஆண்களை தமிழ் சினிமாக்கள் நிறையவே அறிமுகம் செய்திருக்கின்றன. சிப்பிக்குள் முத்து படத்தில் கமல்ஹாசன், சின்னத்தம்பி படத்தில் பிரபு என்று நிறையவே பார்த்து சலித்திருக்கிறோம். அறியாமல் நடக்கிற அந்த தாலி கட்டு சம்பிரதாயமே, கதையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும்.  அந்தக் காட்சிகள் எல்லாம் ஏற்படுத்தாத ஒரு வெகுஜன பிரபல தாக்கத்தை, எல்லாம் வல்ல சுப்பிரமணிய சுவாமியின் தாலி கட்டு முயற்சி உருவாக்கி சாதித்திருக்கிறது. எந்த மீடியா, டிவி, சமூக வலைத்தளங்களைத் திருப்பினாலும், தாலியும் கையுமாக மணப்பெண்ணை நெருங்கிக் கொண்டிருக்கிறார் சுவாமி!

சனி, 16 மே, 2015

கரும்பு தின்னக் கூலி வேணுமா?

‘புலி உருமுது.. புலி உருமுது...’ என்று ஒரு சினிமா பாட்டு சில காலம் முன் பட்டையைக் கிளப்பியது, கேட்டிருப்பீர்கள். ஹீரோ வர்றாராம்! இது என்ன அணி? உயர்வு நவிற்சியா அல்லது இல்பொருளா? குழப்பமே வேண்டாம். இது உருவக அணி. அதுபோல, இதுபோல என்று கம்பாரிசன் செய்தால் அது உவமை என்று பார்த்திருக்கிறோம். ‘அதுதாண்டா இது; இதுதாண்டா அது!’ என்று ஆணியடித்தது போல சத்தியமடித்துச் சொன்னால்... அது உருவகம். ஹீரோவை புலி என்று வர்ணித்திருக்கிறார்களே... அப்படியானால், இதை உயர்வு நவிற்சி அணி என்று சொல்லக்கூடாதா?

புதன், 13 மே, 2015

அம்மா வந்தாச்சு...!

மே 10ம் தேதி அன்னையர் தினம் என்று குறிப்பிடும் காலண்டர் காரர்கள் இனி, மே 11ம் தேதி அம்மா தினம் என அச்சடிக்கலாம். ஒன்றும் தப்பில்லை. கடைசி பாலில் சிக்ஸ் அடித்து ஜெயிக்க வைத்தது போல, தீர்ப்பு தந்த திகைப்பில் இருந்து பல கோடி தமிழினம் இன்னும் வெளிவந்த பாடில்லை. தீர்ப்பைக் கேட்டதும் அம்மாவுக்கு அடுத்தபடி அதிக சந்தோஷப்பட்டிருப்பார் ஓ.பி.எஸ். எவ்வளவு நாள்தான் முதலமைச்சர் மாதிரியே நடிக்க முடியும்? தீர்ப்பு வந்த சிறிதுநேரத்தில் போயஸ் கார்டனுக்கு காரில் வந்த ஓ.பி.எஸ். முகத்தில் ஒரு ‘அப்பாடா’ (அம்மாடா?!) தெரிந்தது. உலகத்திலேயே, அழுதபடி பதவியேற்று, சிரித்தபடி ராஜினாமா செய்கிற ஒரே முதல்வர் இவர்தான் என்று வந்த கமெண்ட்களில்... சத்தியம் இருக்கிறது! இனி, அணிவகுக்கின்றன அம்மா கொண்டாட்டங்கள்...

செவ்வாய், 12 மே, 2015

உத்தமவில்லனா... இம்சை அரசனா?

டிப்பு என்கிற சப்ஜெக்டைப் பொறுத்த வரைக்கும், இன்றைய தேதிக்கு, உலக நாயகன் எனப்படுகிற கமல் ஹாசன்தான் தமிழ் சினிமாவின் அத்தாரிட்டி. நடிக்கிற விஷயத்தில், அவரை அடித்துக் கொள்வதற்கெல்லாம்... தேடினாலும், ஆள் கிடைக்காது. மகாநதி, நாயகன், குணா... என்று அவரது மாறுபட்ட நடிப்புக்கு உதாரணங்கள் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆகையால், ரசிக சிகாமணிகள், ஆஸ்கார் நாயகன் என்று அவரை அன்போடு (சிறிதுகாலம்) அழைத்தார்கள். கிடைக்காத வருத்தமோ... ஆஸ்கார் ரவிச்சந்திரன் கோபித்துக் கொள்வார் என்ற எண்ணமோ... ஆஸ்கார் நாயகன் பட்டம், உலக நாயகன் ஆகி, இன்றளவுக்கும் தொடர்கிறது. ஓவர் பில்டப் ஒர்க் அவுட் ஆகாது என்பதால் (இதற்கும் அவரது படங்களை உதாரணம் காட்டலாம்), உலக நாயகனின் ‘உத்தமவில்லன்’ படம் குறித்த நமது கட்டுரையை நேரடியாகவே துவக்கி விடலாம்... சரிதானே?

திங்கள், 11 மே, 2015

மாமன்னா... நீ ஒரு மாமா மன்னா!

வாழ்க்கைக்கு மட்டுமல்ல... வார்த்தைக்கும் இடைவெளி அவசியம். சேரவேண்டிய இடத்தில் சேர்ந்தும், பிரிய வேண்டிய நேரத்தில் பிரிந்தும் இருக்காவிட்டால்... அர்த்தம் கெட்டு விடும். அதிகம் குழப்பிக் கொள்ளவேண்டாம். 25வது வாரத்தை முடிக்கும் போது, ‘அணிவகுப்பு’ பார்த்தோம். அணிவகுப்பு என்று சேர்த்தால், பேரணி, ஊர்வலம். அணி வகுப்பு என்று பிரித்தால் அணி இலக்கணம் கற்றுக் கொள்கிற வகுப்பு. இல்லையா?

ஞாயிறு, 3 மே, 2015

வாழ்த்துக்கள்... சொன்னால் என்ன தப்பு?

ண்டிகை காலங்கள், மனம் மகிழ்விக்கிற வசந்தகாலங்கள். சில பண்டிகைகளை கடந்து விட்டோம். சில சமீபிக்கின்றன. புத்தாண்டு, பொங்கல் கொண்டாட்டங்கள் முடிந்து விட்டன. எஸ்எம்எஸ், இ-மெயில், வாட்ஸ் அப், ஃபேஸ் புக் என்று ஒன்று பாக்கி விடாமல் அத்தனையிலும் ‘வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்...!’ என்று விர்ச்சுவல் கைகுலுக்கல்கள் நடத்தி ஓய்ந்திருக்கிறோம், இல்லையா?
 வாழ்த்துக்கள் சொல்கிற குஷியிலும் கூட, நம்மொழியை மறந்து விடக்கூடாது. வாழ்த்துக்கள்... இது சரியான வார்த்தைதானா? காலம், காலமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். எழுதிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும், வாழ்த்துக்கள் என்கிற பதம் தப்பு என்கிறார்கள் தமிழ் அறிஞர்கள்.

வெள்ளி, 1 மே, 2015

என்று தீரும் இந்த அவலம்...?

யிரம் வார்த்தைகள் தருகிற அழுத்தத்தை விடவும், ஒரு புகைப்படம் தருகிற தாக்கம்... மிக அதிகமானது. மிக, மிகவும் அதிகமானது. தேர்ந்த சில புகைப்படக்காரர்கள், ஒரே ஒரு புகைப்படம் மூலமாக உலக சரித்திரத்தில் மாற்றம் தந்திருக்கிறார்கள். புகைப்படங்களின் மதிப்பு பூனைக்குட்டிக்கும் மிக நன்றாகவே தெரியும். உலகின் ஆகச்சிறந்த புகைப்படங்களை தொகுத்து தோரணம் கட்டுவதற்காகவே ‘பேசும்படம்’ என்கிற பகுதியை அது தொடர்ச்சியாக வெளியிட்டு வருவது நீங்கள் அறிந்ததே. பேசும்படத்தில் இம்முறை என்னென்ன ஸ்பெஷல்....?

திங்கள், 27 ஏப்ரல், 2015

சிலையில்லா கருப்பனும்... 328 கிடாக்களும்!

மிழகம், திருவிழாக்களின் தேசம். வினோத, வித்தியாச திருவிழாக்களுக்கு பஞ்சமே இல்லை. சுவாமிக்கு குவார்ட்டர் பாட்டில்களை தட்சணை வைத்து (ஐஸ் வைத்து?!) அப்ளிக்கேஷன் போடுவது துவங்கி, கோயிலுக்குள் கார மிளகாயை அரைத்து அம்மனுக்குப் பூசுவது, காசை வெட்டிப் போடுவது... என நம்மூரில் நடக்கிற வித்தியாசத் திருவிழாக்கள், பி.எச்டி பண்ண மிகவும் தகுந்த சப்ஜெக்ட்.. ஒவ்வொரு திருவிழாவுக்குப் பின்னணியிலும் பலமான நம்பிக்கைகள் உண்டு. காசை வெட்டிப் போட்டால் போதும்... துரோகம் செய்தவரின் சீன் ஜிந்தாபாத் ஆகிவிடுமாம். அம்மனுக்கு மிளகாய் அரைத்துப் பூசினாலும் அதே எஃபக்ட்தான். ஒரு லட்சம் கொசுக்கள் ஒரே நேரத்தில் கடித்தது போல, தப்புத்தாண்டா பார்ட்டிகள் தலைகீழாகப் புரண்டு உருளவேண்டிய அளவுக்கு அம்மன் படுத்தி எடுத்து விடுமாம். இந்த வரிசையில்... கருப்பு நிற வெள்ளாடுகளின் ‘கதையை முடித்து’ விடிய, விடிய வெளுத்துக் கட்டுகிற வித்தியாசத் திருவிழா ஒன்று சிவகங்கைப் பக்கம் வருடம் தவறாமல் நடக்கிறது.

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

தோழியை திட்டினால்... எந்த அணி?

‘‘கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைகள் வருகிறது. வீட்டுக்கு வர்ணம் அடிக்கவேண்டும்...’’ - இந்த வாக்கியம் சரியா? ஏதாவது தப்பு தட்டுப்படுகிறதா? தொடர்ச்சியாகச் செய்கையில், தவறான விஷயங்கள் கூட சரி போல ஆகிவிடும். இந்த வாக்கியத்தில் ‘வர்ணம்’ என்கிற பதம் படு அபத்தம். வர்ணம் என்கிற சொல், வடமொழி. அது, நிறத்தை மட்டுமல்ல வேறுபாடுகளையும் கூட (நான்கு வகை வர்ணம்) குறிக்கும் (வர்ணா). வண்ணம் என்பதே மிகச்சரி. வண்ணத்துப் பூச்சி, வண்ணக்கோலம் என்றுதானே சொல்கிறோம். வர்ணத்துப்பூச்சி, வர்ணக்கோலம் என்றில்லையே?

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...