மொழி என்பது, உணர்வுகளை வெளிப்படுத்துகிற கருவி. சொல்ல வருகிற பொருளை / விஷயத்தை வெளிப்படுத்துவதற்கு உறுதுணையாக நிற்பது சொல். எழுத்துக்களின் திரட்சியே சொல். ஒரு எழுத்து தனித்து நின்றோ அல்லது பல எழுத்துக்கள் ஒன்றாகச் சேர்ந்தோ பொருள் தருமானால், அது சொல். தனி ஒரு எழுத்தே கூட தமிழில் சொல்லாக மாறி பொருள் தருவதும் உண்டு.
சனி, 27 டிசம்பர், 2014
புதன், 24 டிசம்பர், 2014
ஐயப்பா... ஏதாகிலும் செய்யப்பா!
கடந்தவாரத்தில் ஒரு பின்னிரவு. அலுவலகப் பணி முடித்து, அதிகப்படியான பனியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். வருகிற வழியில் ஒரு ஐயப்பன் கோயில். வெகு தூரத்தில் இருந்து அதை நெருங்கிக் கொண்டிருக்கும் போதே, கோயில் ஸ்பீக்கர்களில் இருந்து உரத்துக் கசிந்து வந்த அந்தப் பாடல், கொடும் பனியையும் கடந்து என்னை கொஞ்சம் திடுக்கிட்டு நடுங்கச் செய்தது. மிக சமீபத்தில் வெளியாகி, டாஸ்மாக் பார்கள், தனியார் பஸ்கள், இளைஞர்கள் உல்லாசமாக சங்கமிக்கிற இடங்களில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிற படு பயங்கர குத்தாட்டப் பாடல் அது. ஐயப்பன் கோயிலில், குத்துப் பாடலு க்கென்ன வேலை என்கிற மனக் கிலேசத்துடன் கோயிலை இன்னும் நெருங்கினேன்.
ஞாயிறு, 21 டிசம்பர், 2014
சூப்பர் காப்பி ஸ்டார்!
‘திருட்டு டிவிடியில் படம் பார்க்காதீர்கள்’ என நடிகர்ஸ், இயக்குனர்ஸ் உங்களுக்கு சேதி அனுப்புகிறார்களா...? ரைட். நீங்கள் செய்யவேண்டியது இதுதான். ‘ஆங்கில டிவிடிகளை பார்த்து திருடுவதை நீங்கள் நிறுத்துகிற நாளில், திருட்டு டிவிடியில் படம் பார்ப்பதை நாங்களும் நிறுத்திக் கொள்கிறோம்...’ என்று பதில் சேதி அனுப்புங்கள். இந்த ஜென்மத்தில், திருட்டு டிவிடி பற்றி இனி அவர்கள் வாய் திறக்கமாட்டார்கள்.
இலவ் பண்ணலாமா...?
தமிழ் இலக்கணத்தைப் பொருத்த வரை, ‘அளபெடை’ என்பது நாரை பறக்க முடியாத நாற்பத்து எட்டு மடை கண்மாய் சைஸூக்கு பிரமாண்டமான சப்ஜெக்ட். அதில் இருந்து கடந்த வாரம் ஒரே ஒரு கைப்பிடி அளவு மட்டுமே ருசி பார்த்தோம் (இது, தமிழ் இலக்கணத்தை அறிமுகம் செய்கிற தொடர் மட்டுமே என்பதால்). லிமிடெட் மீல்ஸ் போல அது பசி தீர்க்கவில்லை என நிறையப் பேர் ஆதங்கப்பட்டதால், இந்த வாரம் அளபெடையை மினி மீல்ஸாக பரிமாறுகிறோம்.
ஞாயிறு, 14 டிசம்பர், 2014
மதவெறி - ஒரு பொய்யும், ஒரு உண்மையும்!
மதங்கள், மனிதனை நல்வழிப்படுத்துகின்றனவா...? விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அறுதியிட்டு கூறுகிற அளவுக்கு இதுவரை பதில் கிடைத்தபாடில்லை. ஆனால், மதவெறி...?
அது நிச்சயம் அழிக்க மட்டுமே வல்லது. டைனோஸர்களின் காலம் முடிந்து, மனித இனம் மண்ணில் கால் பதித்த நாள் துவங்கி இன்றைக்கு வரைக்கும், மதவெறி... அழிவை மட்டுமே தந்து கொண்டிருக்கிறது. சத்தியம் செய்கிற அளவுக்கு நிச்சய உண்மை.
சனி, 6 டிசம்பர், 2014
திங்கள், 1 டிசம்பர், 2014
எச்.ராஜா... எப்பூடி?
பாரதிய ஜனதா பார்ட்டியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர். ‘வைகோ வீடு திரும்ப முடியாது’ என்று சமீபத்தில் பேட்டி கொடுத்து சர்ச்சை கிளப்பியவர். ஒரு தேசியக் கட்சியின், தேசியச் செயலாளர், உள்ளூர் கந்து வட்டி வசூல் ராஜா போல மிரட்டல் விடுத்து பேசுவது தமிழக அரசியலுக்கு புதுசு. அந்த வகையில், புது நாகரீகத்தை அறிமுகம் செய்ததற்காக அவரை செல்லூர் மார்க்கெட் ரவுடிகள் சங்கம் வாழ்த்தி வரவேற்கிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)