திங்கள், 31 மார்ச், 2014

‘இனம்’ அல்ல... ‘ஈனம்!’


இந்தியாவின் முன்னணி சினிமா ஒளிப்பதிவாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர் சந்தோஷ் சிவன். மலையாளத்துக் காரர். உலகத்தர நேர்த்தி மூலம் இந்திய சினிமாக்களுக்கு புது அடையாளம் தந்தவர். சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் விருதுகளை போகிற போக்கில் அள்ளிக் குவித்தவர். ஒளிப்படக் கலைஞராக மட்டுமின்றி, இயக்குனராகவும் அடையாளப்படுத்தி, தன்னை ஒரு படைப்பாளியாகவும் பதிவு செய்திருப்பவர். அவர் ஒளிப்பதிவு செய்கிறார் என்றால், அந்தப் படம் தானாகவே, தனி மதிப்பு பெற்று விடுகிறது. சந்தோஷ் சிவன் குறித்த பெருமைகளை பற்றி மட்டுமே தனியாக ஒரு கட்டுரை எழுதலாம்.
- எல்லாம் சரி... பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கிறது, வழுவழுப்பாக இருக்கிறது, புது நிறமாக இருக்கிறது என்பதற்காக, பாம்பைத் தூக்கி தோளிலா விடமுடியும்?

சனி, 29 மார்ச், 2014

காங்கிரசை ஏன் புறக்கணிக்கவேண்டும்?

டில்லிக்கும், தமிழகத்துக்குமான தூரம் முன்னெப்போதையும் விட அதிகமாகி விட்டது. டில்லி - கொழும்பு இடையிலான தூரம் குறைந்திருப்பது அதற்குக் காரணமாக இருக்கலாம்.

அம்மானா சும்மா இல்லடா!


க்களவைத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனுக்கு ஆதரவு திரட்டுவதற்காக, முதல்வர் ஜெயலலிதா  (எனப்படுகிற அம்மா) மதுரை வந்திருந்தார். அம்மாவைப் பார்ப்பதற்கு பூனையும் போயிருந்தது. அங்கே கிடைத்த சில  வித்தியாச ‘க்ளிக்’ஸ், உங்கள் பார்வைக்காக, இங்கே.

வியாழன், 27 மார்ச், 2014

பேசும் படம் 3

லைக் கொடுங்க!


தார்த்த வாழ்க்கையில் நாம் கடந்து செல்கிற சோகத்தை, பாசத்தை, நட்பை, நகைச்சுவையை காட்சிப்படுத்தி, சுவை கூட்டுகிற வல்லமை புகைப்படங்களுக்கு மிக அதிகம் உண்டு. அன்றாடம் கண்ணில் படுகிற விஷயங்கள்தான். ஆனால், அதுவே புகைப்பட பதிவாக பார்க்கையில்... உள்ளூரப் புதைந்திருக்கும் புதிய பரிமாணங்கள் புரிய வருகிறது. ‘பூனைக்குட்டி’யின் பேசும்படம் - 3ஐ பாருங்கள். குறைந்தபட்சம், ‘வா...வ்’ என்றோ... ‘ஆ...வ்’ என்றோ ஒற்றை வார்த்தையிலாவது உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.



சனி, 22 மார்ச், 2014

பேசும் படம் 2

மனதின் ஓரம் வலிக்கிறதா...?


போரும்... அது தருகிற வலியும் அனுபவித்துப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே நரகம். மற்றவர்களுக்கு அது வெறும் செய்தி மட்டுமே. இலங்கையில் கொத்துக் கொத்தாக குழந்தைகள், பெரியவர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது... அந்தப் படங்களைப் பார்த்த போது நெஞ்சின் ஓரம் லேசாக வலித்திருக்கும். உள்ளுக்குள் மனிதம் மிச்சம் இருப்பதின் அடையாளம் அது. இப்போது கூட, கிரைமியா பிரச்னையை மையமாக வைத்து அமெரிக்கா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு ரஷ்யா மீது புதிய போர் தொடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. போர்களுக்கு எதிராக உலகம் உரத்து குரல் எழுப்ப வேண்டிய முக்கிய காலகட்டத்தில், அதன் வலியை உணர்த்துகிற இரு உலகப் புகைப்படங்கள் (நன்றி: கெட்டி இமேஜஸ், ஏஎப்பி) இங்கு பதிவு செய்யப்படுகின்றன. மனித வாழ்வியலின் வேதனை தருணங்கள், புன்னகை தருணங்கள்... அவையும் கூட பதிவாகியிருக்கின்றன. பாருங்கள். கருத்துக்களை (கட்டாயம்) எழுதுங்கள்.

வெள்ளி, 14 மார்ச், 2014

காப்பி ஹாசன்!




என்னதான் கோடி, கோடியாக வசூலை வாரிக் கொட்டிப் பார்த்தாலும் கூட... ரஜினி இன்னமும் உள்ளூர் நாயகன் மட்டுமே. விநியோகஸ்தர்கள் தலையில் அடிக்கடி குற்றாலத் துண்டு போர்த்துகிற ‘நம்மவர்’ தான் உலக நாயகன்... யூனிவர்சல் ஹீரோ. அதெப்பிடி சாத்தியம்???

வியாழன், 13 மார்ச், 2014

பேசும் படம் 1


படங்களுக்கு, வார்த்தைகளைக் காட்டிலும் வல்லமை அதிகம். பல நூறு வார்த்தைகள் விளக்க முடியாத ஒரு உணர்வை, ஒரே ஒரு படம் மக்கள் மனதில் சுலபமாக கொண்டு சேர்த்து விடும். பூனைக்குட்டியின், ‘பேசும் படம்’ பகுதியில் உலகத்தரம் வாய்ந்த (!?) உள்ளூர் படங்களின் வித்தியாச அணிவகுப்பு இனி களைகட்டும்!

சனி, 8 மார்ச், 2014

மதுரையும் சினிமாவும்!


பொழுது போக்கிடமற்ற மதுரைவாசிகளுக்கு இன்றளவும் துணை நிற்பவை தியேட்டர்களே. கவலைகள் தொலைக்கிற மந்திரம் தெரிந்த இக்கனவு அரங்கத்தை  தமிழகத்தில் அதிகம் கொண்ட நகரெனும் பெருமை மதுரைக்கு உண்டு. நகரின் ஒவ்வொரு தியேட்டருக்குள்ளும் ஒரு வரலாறு வாழ்கிறது. அந்த வரலாற்றின்  திசையில் ஒரு பயணம்...

புதன், 5 மார்ச், 2014

தமிழன் பெருமை சொல்லும் ‘தி கிராண்ட் அணைக்கட்!’


‘எங்கள் வாழ்வும், எங்கள் வளமும், மங்காத தமிழென்று சங்கே முழங்கு’ என்றார் பாரதிதாசன். தலைநிமிர்ந்து நாம் உலகுக்கு வழிகாட்டிய நாட்கள் போய் இன்று தண்ணீருக்குக் கூட கண்ணீர் சிந்தி அடுத்தவர்களை நம்பி பிழைக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இடியும், உடையும் என கேரள அரசு திரும்பத் திரும்ப கிளப்புகிற முல்லைப் பெரியாறு அணை சர்ச்சைகளை நிபுணர்களும், வல்லுனர்களும் மீண்டும், மீண்டும் நிராகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எப்படி இருந்த நான்...?


இன்றைக்கு நாம் பார்க்கிற, வியக்கிற, பிரமிக்கிற இடங்களுக்கு... (கால இயந்திரத்தின் துணை இல்லாமலே) பின்னோக்கி அழைத்துச் செல்கிற பகுதி இது.  எப்படி இருந்த பகுதிகள்... இப்போது இப்படி இருக்கிறது பாருங்கள்!


திங்கள், 3 மார்ச், 2014

2.50 லட்சம் தபால் ஊழியர்களின் கண்ணீர் கதை!


ஊதிய உயர்வு அறிவிப்பு வெளியாக ஓரிரு நாட்கள் தாமதம் ஆனாலும் கூட போர்க்கொடி தூக்கி, போராட்டக் குரல் எழுப்புகிற அமைப்புகள் தெரிந்து கொள்ளவேண்டிய சேதி இது. பணியில் சேர்கிற முதல் மாதத்தில் வாங்குகிற அந்த சொற்ப ஊதியத்தில், அதற்குப்  பிறகு பெரிய அளவில் உயர்வேதும் இருக்காது. பணிகாலத்தின் கடைசி மாதம் வரை அதையே வாங்கி கஷ்ட ஜீவனம் நடத்தி விட்டு, ஓய்வுக்குப் பிறகு பென்ஷன், பிஎப் என எந்தச் சலுகையும் இன்றி வீட்டுக்குச் செல்கிற பரிதாபத்துக்குரியவர்களாக நடமாடிக் கொண்டி ருக்கிறார்கள் ஜிடிஎஸ் எனப்படுகிற கிராமப்புற தபால் ஊழியர்கள்.

கடலில் கரையும் கனவு...?


தமிழக மண்ணை வளப்படுத்துகிற திட்டம் என்றால்... அது முல்லைப்பெரியாறாக இருந்தாலும் சரி; சேது சமுத்திரமாக ஆனாலும் சரி, முட்டுக்கட்டை மேல் முட்டுக்கட்டைகள் விழுந்து இழுத்தடிக்கிற செயல்கள் இன்றுவரை தொடரத்தான் செய்கின்றன. 1860ம் ஆண்டு ஆங்கிலேயரால் துவக்கப்பட்ட சேது திட்டம்... 150 ஆண்டுகளைக் கடந்து, 2012 நடக்கிற இந்தத் தருணத்திலும் கூட, தூரத்துக் கனவாகவே காட்சியளிக்கிறது.

தென் தமிழகத்துக்கு மக்களின் பல்லாண்டு (நூற்றாண்டு!) கனவு என்றால்... சந்தேகத்திற்கிடமின்றி அது, சேது சமுத்திரம் திட்டம்தான். இந்தியப் பெருங்கடல் பகுதியைக் கடந்து செல்கிற கப்பல்கள், தேவையே இல்லாமல் இலங்கையையும் சுற்றிச் செல்கின்றன. இதனால், நேர விரயம், எரிபொருள் செலவு என்று மனித உழைப்பும், பணமும் எக்கச்சக்கமாய் வீணாகிறது. ‘தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிற’ வேலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முதன்முதலில் முடிவு செய்தவர்... டெய்லர்.

என்ன சாதித்தார் ரஜினி?

‘‘இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா...’’ என்று ‘பாட்ஷா’ திரைப்படப் பாடலில் வரி ஒன்று வந்து போகும். டிசம்பர் 12ம் தேதி பிறந்த நாள் கொண்டாடிய ரஜினிகாந்த்தின் நீண்ட, நெடிய திரையுலகப் பயணத்தை ஒரு முறை மீள்பார்வை பார்க்கையில், அந்த வரிகளில் உண்மை இருக்கத்தான் செய்கிறது என்கிறது மனது. இருக்கலாம். இல்லாமலா, ஒரு தெய்வத்தை ஆராதிப்பது போல மாநிலம் முழுக்க டிசம்பர் 12ம் தேதி ரஜினி கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடக்கும்?

ஞாயிறு, 2 மார்ச், 2014

செயலற்ற பிரதமர்’ - கட்டுரை அல்ல... கட்டளை!

‘அண்டர் அச்சீவர்’ - இந்த வார்த்தை, இந்தியாவில் இப்போது பிரபலம். மவுனச்சாமியார் போன்ற அதே, வழக்கமான பிரதமர் மன்மோகன் சிங் புகைப்படத்தைப் போட்டு, படத்துக்கு மேலே இந்த வார்த்தையையும் பிரசுரித்திருக்கிறது அமெரிக்காவின் பிரபலமான ‘டைம்’ பத்திரிகை. அதுவும், அட்டைப்படத்தில். அது சம்பந்தமான விரிவான கட்டுரை உள்ளே இடம் பெற்றிருக்கிறது. விரிவான அந்த பல பக்க கட்டுரையின் ஒற்றை வரி சாராம்சம்தான் ‘அண்டர் அச்சீவர்’ அதாவது; செயலற்றவர்!

‘செயலற்ற பிரதமர்’ என்ற குற்றச்சாட்டு இன்று, நேற்றல்ல... மிக நீண்டகாலமாகவே மன்மோகன் மீது சுமத்தப்படுவது நாம் யாவரும் அறிந்த விஷயம். அது, ‘டைம்’ சொல்லித் தெரிகிற புதிய தகவல் அல்ல. ஆனால், ‘செயலற்ற பிரதமர்’ என இந்தியாவின் எதிர்க்கட்சிகளும், தலைவர்களும் குற்றம் சொல்கிற தொனிக்கும், ‘டைம்’ குரலுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. ‘டைம்’ சொல்லி விட்டது என்பதற்காக, மையமாய் தலையை ஆட்டி ஆமோதிப்பது, புத்திசாலித்தனமாக இருக்கமுடியாது. ‘டைம்’ பத்திரிகையின் இந்த திடீர் விமர்சனத்துக்குப் பின்புலமாக, மிகப்பெரிய சர்வதேச அரசியலும் இருக்கிறது.

வரைபடத்தில் இருந்து விடைபெறுது வால்பாறை?


மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கக் கூடிய விஷயத்தை ‘செவன்த் ஹெவன்’ (ஏழாவது சொர்க்கம்) என்று ஆங்கிலத்தில் அழைப்பது வழக்கம். தமிழக மலைவாசஸ்தலங்களைப் பொறுத்தவரை, கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு ஏழாவது சொர்க்கம் என்ற பெயர் உண்டு. காரணம் இல்லாமல் இல்லை. மனதை கவரும் மலை முகடுகள், அழகு தவழும் அருவிகள், பார்க்கும் இடமெல்லாம் பச்சைப்பசேல் சோலைகள், கம்பளம் விரித்தது போன்ற தேயிலைத் தோட்டங்கள், உரசிச் செல்கிற மேகக்கூட்டங்கள், கோடை காலத்தில் கூட குளுகுளு பனிக்காற்று, நாசிக்குள் இறங்கும் கலப்படமற்ற ஆக்சிஜன் என, எவ்வளவு பெரிய சோர்வையும் போக்கி, புத்துணர்ச்சி தருகிற அற்புத உலகம் அது. அதனால்தான், அது ஏழாவது சொர்க்கம்.

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...